admin

கண்டிக்கிறேன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை வேண்டுமென்றே மத்திய அரசு தாமதிக்கிறது. அரசியல் சுயலாபத்திற்காக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வன்முறையிது. தமிழக விவசாயிகள் நதிநீர் பிரச்சனையில் நீதிக்காக பல்லாண்டுகளாக காத்துகிடக்கிறார்கள். உச்சநீதிமன்றம் நீதி வழங்கிய போதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு மறுக்கிறது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும்  நடைபெற்று வரும் தொடர்போராட்டங்களை ஆதரிக்கிறேன். இது விவசாயிகளின் பிரச்சனையில்லை. ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சனை. உரிமைகளுக்காக போராடும் விவசாயிகளுடன் நாம் கரம் கோர்த்து நிற்க வேண்டிய காலமிது. மத்திய அரசின் இந்த …

கண்டிக்கிறேன் Read More »

காலத்தின் அதிபதி.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது புகழ்பெற்ற நாவலான தனிமையின் நூற்றாண்டுகளைப் படமாக்குவதற்கான உரிமையை வழங்க மறுத்துவிட்டார். வாசகர் மனதில் அந்த நாவல் பெற்றுள்ள கற்பனையான வடிவத்தைச் சினிமா சிதைத்துவிடும் என்பதே காரணம். தனிமையின் நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) நாவல் 1967இல் வெளியானது. மூன்று கோடி பிரதிகளுக்கும் மேல் விற்றுள்ளதாகக் கருதப்படும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழில் கவிஞர் சுகுமாரன் இதனை மொழியாக்கம் செய்துள்ளார். …

காலத்தின் அதிபதி. Read More »

உலக ஞானம் ஒரு நூலில்!

தி இந்து நாளிதழில் பிரபஞ்சன் எழுதி வரும்  எமதுள்ளம் சுடர்விடுக பத்தியில் நான் ஆற்றிய உலக இலக்கியப் பேருரைகளின் தொகுப்பு நூல் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார். பிரபஞ்சன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் •• உலக இலக்கியப் பெரும் ஆளுமைகள் பற்றித் தமிழ்ச் சூழலில் ஆக்கபூர்வமாக அறிமுகப்படுத்தும் பெரும் பணியில் பல காலமாக ஈடுபட்டு வருபவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அண்மையில் அவர் நிகழ்த்திய இலக்கியப் பேராசான் டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், ஹோமர், ஹெமிங்வே, பாஷோ, அரேபிய இரவுகள், தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோர் …

உலக ஞானம் ஒரு நூலில்! Read More »

நிலவொளியின் பாடல்கள்

தமிழில் ஜப்பானிய இலக்கியம் அறிமுகமான அளவிற்குச் சீன இலக்கியம் அறிமுகமாகவில்லை. ஜென் கவிதைகள். ஹைக்கூ கவிதைகள் தமிழில் அதிகம் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. ஜென் கவிதைகள் குறித்து நான் கூழாங்கற்கள் பாடுகின்றன என்ற கட்டுரை தொகுதி ஒன்றை எழுதியிருக்கிறேன். அதில் பாஷோ, ரியோகான் என முக்கியமான ஜென் கவிஞர்களின் கவிதையுலகை அறிமுகம் செய்திருக்கிறேன். பாஷோவின் கவிதையுலகம் பற்றி விரிவான உரையொன்றையும் சென்னையில் நிகழ்த்தியிருக்கிறேன். அது தற்போது டிவிடியாகவும் கிடைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை என்ற பயணியின் …

நிலவொளியின் பாடல்கள் Read More »

டி.எஸ். எலியட்டின் காதல்

கல்லூரி நாட்களில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் டி.எஸ். எலியட்டின் வேஸ்ட் லேண்ட் கவிதையைப் பாடமாக வாசித்திருக்கிறேன். பின்பு எலியட்டின் (T.S.Eliot) கட்டுரைகளைப் பலமுறை விரும்பி வாசித்திருக்கிறேன். ஆனால் கல்லூரி நாட்களில் ஒரு பேராசியர் கூட எலியட்டின் வாழ்க்கை குறித்தோ, அவருக்கும் எஸ்ரா பவுண்டிற்குமான நட்பு குறித்தோ, யார் வேஸ்ட் லேண்ட் என்ற கவிதையின் தலைப்பை வைத்தவர் என்றோ எதுவும் சொல்லிக் கொடுத்ததில்லை. பாடமாக இலக்கியம் கற்கும் போது மதிப்பெண் மட்டுமே முதன்மையாகி விடுகிறது. ரசித்து ரசித்து …

டி.எஸ். எலியட்டின் காதல் Read More »

உலகம் மாறிக் கொண்டிருக்கிறது.

அனிமேஷன் திரைப்படங்கள் என்றாலே பொதுவாக விலங்குகளின் உலகைச் சித்தரிப்பதாகவோ, அல்லது மாய, விநோத, சாகச கதைகளாகவோ தானிருக்கும். ஹாலிவுட் அனிமேஷன் படங்களை விடவும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்கள் சிறந்தவை. அப்படங்களின் கதையும் சித்திரங்களும் காட்சிப்படுத்தும் முறையும் அபாரமாகயிருக்கும். அது போலவே ரஷ்ய அனிமேஷன் திரைப்படங்களும் தனித்துவமானவை. ரஷ்ய இலக்கியத்தின் முக்கிய நாவல்கள், நாட்டார்கதைகள் அனிமேஷன் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன. பிரிட்டன் அனிமேஷன் திரைப்படங்கள் பெரிதும் ஹாலிவுட் மரபில் உருவாக்கபடுபவை. ஆனால் இன்று பிரிட்டன் தனக்கான தனித்துவமான உருவாக்கதிலும் வெளிப்பாட்டிலும் …

உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. Read More »

காளியின் மைந்தர்கள்

மத்திய இந்தியாவில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தக் அல்லது தக்கீ என அழைக்கபட்டார்கள். ரகசிய குழுக்களாகச் செயல்பட்ட இவர்கள் காளியை வணங்கக் கூடியவர்கள். இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்களாக இயங்கி வந்த இவர்களால் கொலை செய்யப்பட்டவர்கள் ஏராளம். இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள். எங்கே மறைந்து போய்விடுகிறார்கள் என்பதைக் கண்டறிவது சிரமம். ஆகவே இவர்களைக் கைது செய்வதோ, கட்டுபடுத்துவதோ எளிதாகயில்லை என்கிறது The Thugs or Phansigars of India என்ற நூல். …

காளியின் மைந்தர்கள் Read More »

செல்லுலாயிட் மேன்

இலக்கியமோ, சினிமாவோ, இசையோ ,ஒவியமோ எதையும் முறையாக ஆவணப்படுத்தும் பழக்கம் நம்மிடமில்லை. புதுமைப்பித்தனின் கையெழுத்துப் பிரதிகள் அத்தனையும் நம்மிடமில்லை. பாரதியின் குரல் எப்படியிருக்கும் என அறிந்து கொள்ள ஒலிப்பதிவு எதுவுமில்லை. தி.ஜானகிராமனின் மோகமுள்ளின் கையெழுத்து பிரதியை ஒருவர் வாசிக்க விரும்பினால் வாய்ப்பே கிடையாது. இது தான் நமது சூழல். சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்கள் கூட முறையாகப் பாதுகாக்கபடவில்லை. அதிலும் குறிப்பாக மௌனப்படங்களில் பெருமளவு அழிந்து போய்விட்டன. இந்திய சினிமாவின் அரிய படங்களைக் காணுவதற்கு உள்ள ஒரே …

செல்லுலாயிட் மேன் Read More »

கவிதையே வாழ்க்கை.

சையத் மிர்ஸா, இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் இந்திய சினிமாவின் நவீன அலை இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரது வாழ்க்கை மற்றும் திரையுலகப் பங்களிப்பு பற்றிய ஆவணப்படமாக உருவாக்கபட்டுள்ளது Saeed Mirza: The Leftist Sufi. சூபியும் இடது சாரி எண்ணங்களும் கொண்டவர் என்ற தலைப்பே அவரது ஆளுமையின் தனித்துவத்தைக் காட்டுகிறது. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்ற போதும் எவ்விதமான மதக்கட்டுபாடுகளும் இல்லாமல் வளர்க்கபட்டதாக நினைவு கூறுகிறார். இவரது பத்து …

கவிதையே வாழ்க்கை. Read More »

விருது விழா

நேற்று நடைபெற்ற விருதுவழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.  சென்னை நகரின் கலைவாணர் அரங்கம் மிகப்பிரம்மாண்டமானது. அதி நவீன வசதிகள் கொண்டது. அந்த அரங்கம் நிரம்பி ஆட்கள் இருக்கையின்றி நின்று கொண்டே நிகழ்ச்சியைக் கண்டார்கள். விழாவில் அத்தனை அரசியல்தலைவர்களும் கலந்து கொண்டது சிறப்பு. நீதியரசர் மகாதேவன், கவிஞர் வைரமுத்து, தமிழருவி மணியன், உள்ளிட்ட பலரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  என் வாழ்வின் மறக்க முடியாத நாள். நிகழ்வில் கலந்து கொண்ட வாசகர்கள். பத்திரிக்கையாளர்கள். நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் …

விருது விழா Read More »