புதிய தொடர்
தி இந்து குழுமம் துவங்கியுள்ள காமதேனு இதழில் புதிய பத்தி ஒன்றை துவங்கியிருக்கிறேன். முடிவற்ற சாலை என்ற இந்த பத்தி எனது பயண அனுபவங்களை முன்னிலைப்படுத்துகிறது
தி இந்து குழுமம் துவங்கியுள்ள காமதேனு இதழில் புதிய பத்தி ஒன்றை துவங்கியிருக்கிறேன். முடிவற்ற சாலை என்ற இந்த பத்தி எனது பயண அனுபவங்களை முன்னிலைப்படுத்துகிறது
நோபல்பரிசு பெற்ற பெண் எழுத்தாளர் கிரேசியா டெலடா (Grazia Deledda.) இத்தாலியைச் சேர்ந்த இவர் ஐம்பதுக்கும் அதிகமான நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது The Mother என்ற நாவலை தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். மிக அற்புதமான நாவல். பாதிரியாக உள்ள தனது மகன் பால் ஒரு இளம்பெண்ணுடன் பழகுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத அன்னையின் தவிப்பே நாவல். கைம்பெண்ணாகப் பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த அன்னை, பால் மதகுருவாகப் பணியேற்றதும் மதகுருவின் தாய் என்ற புனித அடையாளத்தைப் பெறுகிறாள். …
கோடைவிடுமுறையில் குழந்தைகளை ஒன்று கூட்டி எனது கடவுளின் நாக்கு புத்தகத்திலுள்ள கதைகளைப் பகிர்ந்துவருகிறார்கள் இரண்டு ஆசிரியர்கள். துறையூரைச் சேர்ந்த பெருமாள் என்ற ஆசிரியரும் அவரது துணைவியாரும் தங்கள் வீட்டிலே இந்தக் கதை சொல்லும் நிகழ்வை நிகழ்த்தி வருகிறார்கள். நேற்று அவர்கள் என்னிடம் தொலைபேசியில் பேசி தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். தி இந்து நாளிதழில் கடவுளின் நாக்கு தொடராக வந்த போது விரும்பி வாசித்தோம். இப்போது அந்த நூலிலுள்ள கதைகளை மாணவர்களை எடுத்துச் சொல்கிறோம். சிறுவர்கள் ஆர்வமாகக் …
கடந்த ஆண்டு சென்னையில் எழுத்தாளர் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம் என்ற சிறப்பான நிகழ்ச்சியை நடத்தி அவருக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி திரட்டி அளித்தோம். அந்த விழாவிற்கு வந்திருந்த புதுவை முதல்வர் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பிரபஞ்சனை நாங்களும் சிறப்பித்துக் கொண்டாடுவோம் என்று உறுதி அளித்தார். அதன்படி கடந்த வியாழன் ( 3.05.2018) அன்று மாலை புதுவையில் அரசு சார்பில் பிரபஞ்சன் அவர்களுக்கு சிறப்பான விழா நடத்தி பத்து லட்சம் ரூபாய் நிதியை வழங்கினார்கள். அந்த நிகழ்வில் கலந்து …
ஈழத் தமிழ் சிறுகதையுலகில் தனிக்குரலாக ஒலிப்பவர் அம்ரிதா ஏயெம். விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் என்ற இவரது சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா இலங்கை சென்றிருந்த போது கொடுத்து வாசிக்கச் சொன்னார். விமானத்தில் திரும்பி வரும் போது ஒன்றிரண்டு கதைகளை வாசித்தேன். பின்பு தொகுப்பை எங்கோ வைத்துவிட்டுக் காணாமல் தேடிக் கொண்டிருந்தேன். நேற்று வேறு ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில் அந்தச் சிறுகதை தொகுப்பு கையில் அகப்பட்டது. உடனே வாசித்து முடித்தேன். அம்ரிதா ஏயெம் இருபத்தைந்து …
நேற்று மௌனி பற்றி நான் ஆற்றிய உரையை ஸ்ருதி டிவி பதிவு செய்து வலையேற்றம் செய்துள்ளார்கள். ஸ்ருதிடிவி கபிலனுக்கு மனம் நிரம்பிய நன்றி •• டிஸ்கவரி புக் பேலஸ் & தேசாந்திரி பதிப்பகம் வழங்கும் உலகப் புத்தக தினம் சிறப்பு நிகழ்வு ‘மெளனியைக் கொண்டாடுவோம்’ – எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை S.Ramakrishnan speech https://www.youtube.com/watch?v=yRRwfaW7nqk
உலகப் புத்தக தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் மனம் நிரம்பிய வாழ்த்துகள். •• இன்று A russian Childhood என்ற நூலை வாசித்தேன். தஸ்தாயெவ்ஸ்கி காலத்தை சேர்ந்த Sofya Kovalevskaya என்ற இளம்பெண் தான் எழுதிய சிறுகதையை தஸ்தாயெவ்ஸ்கி படிக்க வேண்டும் என்பதற்காக தபாலில் அனுப்பி வைத்திருக்கிறார். ஒரு இளம் எழுத்தாளரின் கதையை படித்து தேவையான ஆலோசனைகளை சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்தஸ்தாயெவ்ஸ்கி. பின்பு அந்த பெண் அவரைத் தேடி வந்து நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறார். அவர்கள் சந்திப்பு எப்படியிருந்தது. தஸ்தாயெவ்ஸ்கி …
A Man Called Ove ஸ்வீடிஷ் நாட்டுத் திரைப்படம். 2012ல் Fredrik Backman எழுதிய நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இது ஒரு Feel-Good Movie. 59 வயதான உவே தனியே வசிக்கிறார். மிகுந்த கோபக்காரர். அவர் வசிக்கும் காலனியில் சின்னஞ்சிறு தவறுகள் நடந்தால் கூடச் சண்டை போடக்கூடியவர். அவரும் நண்பர் ரூனும் இணைந்து அந்தக் காலனிக்கான நல சங்கத்தை உருவாக்கினார்கள். ரூன் சுயநலமாக நடந்து கொண்டு அவரைச் சங்க பொறுப்பிலிருந்து நீக்கிவிடுகிறார். ஆனாலும் உவே விதிகளைக் கறாராகக் கடைபிடிக்கக் …
உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 23 மாலை 5 மணிக்கு எழுத்தாளர் மௌனி குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன் இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே. கே. நகர். சென்னை 78 நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
– சிறுகதை தற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள். மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது. இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். …