admin

கதைகள் செல்லும் பாதை- 9

– தலைகீழ் மாற்றம் எட்கர் கெரெட் (Etgar Keret ) இஸ்ரேல் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1967 இல் டெல் அவிவ் நகரில் பிறந்தவர். சர்வதேசப் புகழ் பெற்ற இவரது நூல்கள் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. நியூயார்க் டைம்ஸ், கார்டியன், பாரிஸ் ரிவ்யூ இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரது பசை (Crazy Glue) என்ற குறுங்கதையை வாசித்தேன். சொல்வனம் இணையஇதழில் இக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. 420 சொற்கள் கொண்ட மிகச்சிறிய கதை.. …

கதைகள் செல்லும் பாதை- 9 Read More »

வைதீஸ்வரனின் கவிதைகள்

எஸ். வைதீஸ்வரன் நவீன தமிழ் கவிதையின் முக்கிய ஆளுமை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வருபவர்.. சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில் கவிதை எழுதத் தொடங்கியவர். இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது மொத்த கவிதைகளின் தொகுப்பான மனக்குருவி வாசித்துக் கொண்டிருந்தேன். நகரவாழ்வின் நெருக்கடியை, தடித்தனத்தை, அவலத்தை, ஆறாத் துயரங்களை, அரிதான சந்தோஷங்களைக் கவிதையில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வைதீஸ்வரன் ஒரு ஒவியர். முறையாக ஒவியர் கற்றவர். ஒவியர் என்பதால் …

வைதீஸ்வரனின் கவிதைகள் Read More »

குப்ரிக்கின் காரோட்டி

S Is for Stanley – திரைப்பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கின் காரோட்டியாகப் பணியாற்றிய எமிலியோ பற்றிய ஆவணப்படம். எமிலியோ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் குப்ரிக்கிடம் பணியாற்றியிருக்கிறார்.  அந்த நாட்களின் நினைவுகளை எமிலியோ துல்லியமாக விவரிக்கிறார். தனது பணிக்காலத்தின் போது சேகரித்த பொருட்களைச் சாட்சியமாக முன்வைக்கிறார். குப்ரிக்கின் சிறுகுறிப்புகளும் புகைப்படங்களுமாக விரிகிறது ஆவணப்படம். பிரபலமான இயக்குனரையோ, அவரது குடும்பத்தினரையோ ஆவணப்படமாக்குவது வழக்கம். ஆனால் இப்படம் குப்ரிக்கின் காரோட்டியை பற்றியது. அவர் வழியாக குப்ரிக் என்ற மனிதரின் மேன்மையைப் …

குப்ரிக்கின் காரோட்டி Read More »

செகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு

செகாவின் மீது பனிபெய்கிறது கட்டுரை தொகுப்பின்  புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்ய இலக்கியங்களின் மீது பெரும்காதலுடன் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் செகாவ். டால்ஸ்டாய், கோகல், புஷ்கின், கார்க்கி போன்றோர்களின் ஆளுமையை அடையாளம் காட்டுகின்றன. சர்வதேச இலக்கியத்தின் தனித்துவமிக்க எழுத்தாளர்கள் பலரையும் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. விலை ரூ 150 புத்தகம் வாங்க  : www.desanthiri.com. தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. …

செகாவின் மீது பனிபெய்கிறது புதிய பதிப்பு Read More »

நெடுங்குருதி புதிய பதிப்பு

நெடுங்குருதி நாவலின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல்  ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. விலை ரூ 500 புத்தகம் வாங்க  : www.desanthiri.com. தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 தொலைபேசி 044 23644947. அலைபேசி 9600034659 mail id:Desanthiripathippagam@gmail.com

யாமம் புதிய பதிப்பு

யாமம் நாவலின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுவருகிறது. நெட் பிளிக்ஸ் வெப்சீரியஸில் இதை திரைத்தொடராக தயாரிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன. விலை ரூ 400 புத்தகம் வாங்க  : www.desanthiri.com. •• தேசாந்திரி பதிப்பகம் டி1, …

யாமம் புதிய பதிப்பு Read More »

துயில் புதிய பதிப்பு

துயில் நாவலின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன. தமிழ் புனைகதை பரப்பில்  தனித்துவமிக்க நாவலாகக் கொண்டாடப்படுகிறது. விலை ரூ 525 புத்தகம் வாங்க  : www.desanthiri.com. தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சத்யா கார்டன் சாலிகிராமம். சென்னை 93 …

துயில் புதிய பதிப்பு Read More »

இடக்கை -விமர்சனம்

மரணத்துக்கு முன் உன் வாழ்வை திரும்பி பார் பவா. செல்லதுரை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, ‘இடக்கை’ என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. அவுரங்கசீப் பற்றிய நாவல் என உணர்ந்தாலும், அதையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் இந்நாவலில் உள்ளன. ஒரு பேரரசனின் எழுச்சியும், வீழ்ச்சியும், எப்படி ஒரு சாமானியனோடு தொடர்பு கொள்கிறது என்பதை நாவல் சொல்கிறது. ஒரு நாவலை படிக்க எடுத்தோம், ஒரே நேரத்தில் படித்து முடித்தோம் என, ‘இடக்கை’ நாவலை படித்துவிட …

இடக்கை -விமர்சனம் Read More »

மறுபதிப்புகள்

விகடன் பிரசுரம் வெளியிட்டு வந்த எனது நூல்களான துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, சிறிது வெளிச்சம். இந்திய வானம்,  கேள்விக்குறி ஆகிய நூல்களுக்கான பதிப்புரிமை முடிந்துவிட்ட நிலையில் அவற்றை தேசாந்திரி பதிப்பகம் புதிய வெளியீடுகளாக கொண்டுவரவுள்ளது. இந்த நூல்களின் கிண்டில் ஈபுக்கையும் தேசாந்திரியே வெளியிடவுள்ளது. மறுபதிப்பு செய்யப்படும்  பணி தற்போது துவங்கியுள்ளது. விரைவில் இவை வெளியாகும்.

ஆங்கிலத்தில் இடக்கை நாவல்

எனது இடக்கை நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.  ப்ரீதம் சக்கரவர்த்தி மிகச்சிறப்பாக மொழியாக்கம்  செய்திருக்கிறார். ஜீரோ டிகிரி பதிப்பகம் இதை வெளியிடுகிறது. நாவலின் பிரதியைச் செம்மைப்படுத்துவதில் வித்யா சுபாஷ். ராம்ஜி. காயத்ரி ஆகியோர் கடும் உழைப்பைத்  தந்திருக்கிறார்கள்.  சர்வதேச அரங்கில் இந்த நாவல் கவனம் பெற வேண்டும் என்ற கனவோடு ராம்ஜி இதை மிகச்சிறப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார். தமிழில் இந்நாவலின் நான்காவது பதிப்பு தற்போது வெளியாகிவுள்ளது. நல்ல வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்ற  இடக்கை நாவல் ஆங்கிலத்திலும் அதற்கான …

ஆங்கிலத்தில் இடக்கை நாவல் Read More »