உலக கவிதைகள் 1- சியோ ஜியோங்-ஜூ
சியோ ஜியோங்-ஜூ கொரியாவின் முக்கிய கவிஞர். (Seo Jeong-ju) ஐந்து முறை நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யப்பட்டவர், மிதாங் என்ற புனைபெயரில் எழுதியிருக்கிறார். பதினைந்து கவிதை தொகுதிகள் வெளியாகியுள்ளன. கொரிய நவீன கவிதையின் தந்தையாக கருதப்படுகிறார். கவிதைகள் குறித்து சிறப்பாக உரைகளையும் ஆற்றியிருக்கிறார். இவரது Poems of a Wanderer தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அற்புதமான கவிதைகள். தமிழில் இவரது கவிதைகள் ஏதும் வெளியாகியுள்ளதாக தெரியவில்லை. சங்க தமிழ் கவிதையின் சாயலை இவரிடம் காணமுடிகிறது. குறிப்பாக இயற்கையின் …