admin

விமர்சனப் போட்டி

அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி •••• அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி . இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை  அந்திமழை அழைக்கிறது. பரிசு விவரங்கள்: •         முதல் பரிசு – ரூ.10000 •         இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு] •         மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள …

விமர்சனப் போட்டி Read More »

வாழ்த்துகள் லிங்கம்

உலகப் புத்தக தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வில் வேலூர் லிங்கம் சிறந்த வாசகர் விருது பெறுகிறார். இந்த விருதிற்கு முழுத்தகுதி கொண்டவர் லிங்கம். தேர்ந்த இலக்கியப்புத்தகங்களை தேடித்தேடி வாசிக்க கூடியவர். அவரது வீடே ஒரு நூலகம் போலதானிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து வரும் லிங்கம் இந்த விருது பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.  அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள் விருது வழங்கும் நிகழ்வு ஏப்ரல்23 மாலை 5 …

வாழ்த்துகள் லிங்கம் Read More »

நிலாச்சோறு

கூடி உண்ணும் போது உணவிற்குத் தனிசுவை வந்துவிடுகிறது. அதுவும் நிலாவெளிச்சத்தில் அனைவரும் ஒன்று கூடி அருகமர்ந்து உண்ணுவது இன்பமானது. சிறுவயதில் பல இரவுகள் அனைவரும் ஒன்றுகூடி அமர ஆச்சி சோற்றை உருட்டி உருட்டி தருவார். அந்த உருண்டைக்கென்றே தனிருசியிருந்தது. அந்தக் காலத்தில் சித்ரா பௌணர்மி நாளில் ஆற்றின் கரைகளுக்குச் சென்று உணவருந்தும் வழக்கமிருந்தது. வண்டி போட்டுக் கொண்டு ஆற்றின் கரைதேடி போவோம். மணலில் அமர்ந்தபடியே நிலவின் வெண்ணொளியை ரசித்தபடியே சாப்பிட்ட நினைவு அடிமனதில் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது திடீரென …

நிலாச்சோறு Read More »

விடுதலை நாயகன்

ஸ்பானிய காலனியாக இருந்த நாடுகளின் விடுதலைக்குப் போராடி லத்தீன் அமெரிக்க நாடுகள் யாவும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர கனவு கண்டவர் சிமோன் பொலிவார். இவரது வாழ்க்கை வரலாறு The Liberator என்ற திரைப்படமாக வெளிவந்துள்ளது. பொலிவார் வெனிசூலாவின் உயர்குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி. கிரியோல் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஸ்பானிய அரசில் உயர்பதவிகளை வகித்தார்கள். சிமோனின் குடும்பத்திற்குப் பெரிய பண்ணைகளும், சுரங்கங்களுமிருந்தன. அதில் வேலை செய்யப் பண்ணையடிமைகள் இருந்தார்கள். வெளிநாட்டில் ஆரம்பக் …

விடுதலை நாயகன் Read More »

தியான நடை

வேகமும் பரபரப்புமாக நகரும் வாழ்க்கைக்கு எதிராக மிகமிக மெதுவாக நடந்து போகிறார் ஒரு பௌத்த துறவி. ஒவ்வொரு எட்டையும் எடுத்து வைப்பது கவனமாக, மிகப்பெரிய செயல்போலிருக்கிறது. உண்மையில் நடத்தலை ஒரு தியான வழியாகக் கருதுகிறது பௌத்தம். WALKING MEDITATION எனப்படும் தியானமுறையில் காலை தரையில் ஊன்றி உடலின் முழுமையை உணருவதும் ஒவ்வொரு அடியிலும் முழு விழிப்புணர்வுடன் நடத்தலும் பயிற்றுவிக்கபடுகிறது. தெற்கு பிரான்சிலுள்ள Marseilles கடற்கரை நகரில் பௌத்த துறவி மிகமெதுவாக நடப்பதே படம். அவரைப் பின்தொடருகிறார் ஒரு …

தியான நடை Read More »

நன்றி

நேற்று எனது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்து கொண்ட நண்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி. பிறந்த நாளுக்காக வாழ்த்து தெரிவித்த எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள் ஊடகத்துறை நண்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் தீராத நன்றிகள். நேற்றை நிகழ்விற்கு எழுத்தாளர் வண்ணநிலவன் வந்து என்னை வாழ்த்தியது மறக்கமுடியாத நிகழ்வு.அவருக்கு என் அன்பும் நன்றியும். நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்து உதவிய ஆடிட்டர் சந்திரசேகருக்கு நன்றிகள். நிகழ்வை முழுமையாக ஸ்ருதி டிவி நேரலையாக ஒளிபரப்பியது. காணொளிகளும் …

நன்றி Read More »

போர்ஹே

பறவையியல் விவாதம் —– ஹோர்ஹே லூயி போர்ஹே நான் கண்களை மூடியபோது ஒரு பறவைக் கூட்டத்தைக் கண்டேன். ஒரு விநாடி அல்லது அதற்கும் குறைவான நேரமே அந்தக் காட்சி இருந்தது. எத்தனைப் பறவைகளைப் பார்த்தேன் எனத் தெரியவில்லை. அந்த எண்ணிக்கை அறுதியானதா? அறுதியற்றதா? இந்த சிக்கல் கடவுள் உள்ளாரா? இல்லையா என்பதோடு தொடர்புடையது. கடவுள் இருந்தால் இந்த எண்ணிக்கை அறுதியானது. ஏனெனில் நான் எவ்வளவு பறவைகளைப் பார்த்திருப்பேன் எனத் தெரியும் அவருக்கு. கடவுள் இல்லை என்றால் எண்ணிக்கையும் …

போர்ஹே Read More »

ஆனந்தா ஆற்றில் இறங்காதே

கவிஞர்  ஷங்கர்ராமசுப்ரமணியன் வலைப்பக்கத்தில் வாசித்த இக்கட்டுரை மிகவும் பிடித்திருந்தது. சமகால தமிழ்கவிதையுலகில் ஷங்கர் தனித்துவமானர்.  அவரது சிறந்த கவிதைகளும் இந்த வலைப்பக்கத்திலுள்ளன. •• ஒரு நாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் வனத்தைக் கடந்துகொண்டிருந்தார். அது கடுமையான கோடைக்காலம் என்பதால் புத்தருக்குத் தாகமாக இருந்தது. அவர், ஆனந்தனிடம், “கொஞ்சம் திரும்பிப் போனால், மூன்று நான்கு மைல் தூரத்தில் நாம் கடந்த ஒரு சிறு நீரோடை வரும். அதில் இந்தப் பிச்சைப் பாத்திரத்தில் நீர் மொண்டு வா. நான் மிகுந்த …

ஆனந்தா ஆற்றில் இறங்காதே Read More »