admin

உருமாறும் புத்தகங்கள்

இத்தாலிய எழுத்தாளர் உம்பர்தோ ஈகோவும் பிரெஞ்சு எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான ஜீன் கிளாட் கேரியரும் சந்தித்துப் புத்தகங்கள் குறித்து உரையாடிதன் தொகுப்பாக வெளிவந்துள்ளது This is Not the End of the Book. இரண்டு அறிவுஜீவிகளின் சந்திப்பும் உரையாடலும் எத்தனை ஆழமானதாக, விரிந்த தளத்தில் இருக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு உதாரணம். இருவரது பேச்சின் பொதுவிஷயமாக அமைத்திருப்பது நூலகமும் அரிய நூல்களும். இருவருமே முதன்முதலாக அச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட 1500 காலகட்டத்தைச் சேர்ந்த அரிய …

உருமாறும் புத்தகங்கள் Read More »

நீதியின் பதாகை

இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பரிந்துரையிலுள்ள Three Billboards Outside Ebbing, Missouri படத்தை நேற்று பார்த்தேன். இப்படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றுள்ளது. நிச்சயம் இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆஸ்கார் விருதுகள் கிடைக்ககூடும். குறிப்பாக நீதிக்காகப் போராடும் தாயாக நடித்துள்ள Frances McDormand விருதை வெல்வார் என நம்புகிறேன். ஏழு மாதங்களுக்கு முன்பு, வன்புணர்ச்சி செய்து கொலை செய்யப்பட்ட தனது மகளுக்கு நீதி வேண்டும் எனக் கேட்டு மில்ட்ரட் போராடுகிறாள். காவல்துறை குற்றவாளி யாரெனக் கண்டறிந்து …

நீதியின் பதாகை Read More »

அஞ்சலி

இயல் விருது வாங்குவதற்காக கனடாவிற்குச் சென்றிருந்த போது கவிஞர் செழியனைச் சந்தித்து உரையாடினேன். இலங்கையிலிருந்து தான் உயிர்தப்பிவந்த நிகழ்வை  வேடிக்கையான சம்பவத்தை நினைவுகூறுவது போல சிரிப்போடு விவரித்தார். கேட்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. நாடகங்கள் குறித்து   நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். ‘அரங்காடல்’  கனடாவில் வாழும் புலம் பெயர் தமிழர்களால் நடத்தப்படும் தீவிர நாடக முயற்சி. மனவெளி கலைக் குழுவினர் இதை ஒருங்கிணைப்பு செய்து நடத்துகிறார்கள். அதில் செழியனின் நாடகங்கள் மேடையேற்றப்பட்டிருக்கிறது அவரது கவிதைநூல் ஒன்றை எனக்குப் …

அஞ்சலி Read More »

தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்

சென்னை புத்தகக் கண்காட்சியின் போது பெங்களுரிலிருந்து  வந்த வாசகர் ஒருவர் எனக்கு இரண்டு கன்னடப்படங்களின் டிவிடி பரிசாகத் தந்தார். கூடவே ஒரு கடிதமும் தந்திருந்தார். அவற்றை எங்கோ தவறவிட்டுவிட்டேன். அந்த வாசகர் பெயர் நினைவில்லை. எனக்கு ஒருமுறை மின்னஞ்சல் அனுப்பியதாக நேர்பேச்சில் நினைவு கூர்ந்தார்.  மின்னஞ்சலில் தேடி அவரை அடையாளம் காண இயலவில்லை.  ஒருவேளை அவர் இதை வாசிப்பார் என்றால் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கேரள புத்தகக் கண்காட்சி

கேரள சாகித்ய அகாதமி சார்பில் திருச்சூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவதற்காகச் சென்றிருந்தேன். தமிழகத்தில் எத்தனையோ புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் புத்தகக் காட்சிகள் எதையும் எழுத்தாளர் எவரும் துவக்கி வைத்ததேயில்லை. தமிழகம் தரத்தயங்கிய கௌரவத்தைக் கேரளம் தந்திருக்கிறது. எழுத்தாளர்களை, கலைஞர்களை மதித்துக் கௌரவிப்பதில் கேரளம் முன்னோடி என்பதற்குச் சாட்சியாகவே இதைக் காண்கிறேன். விமான டிக்கெட் கொடுத்து ஐந்து நட்சத்திரவிடுதியில் தங்கவைத்துச் சிறப்பு விருந்தினராகச் …

கேரள புத்தகக் கண்காட்சி Read More »

திருச்சூரில்

திருச்சூரில் நடைபெறவுள்ள கேரள சாகித்ய அகாதமி நிகழ்வில் கலந்து  கொள்வதற்காக நாளை திருச்சூர் செல்கிறேன். இரண்டு நாட்கள் அங்கேயிருப்பேன்.

ஆட்கள் தேவை

தேசாந்திரி பதிப்பகத்தில் பணியாற்ற ஆபீஸ் பாய், மற்றும் இன்டிசைன் தெரிந்த வடிவமைப்பாளர், புரூப் ரீடர் தேவை. அனுபவம் உள்ளவர்கள் 9600034659 என்ற எண்ணுக்குத் தொடர்பு  கொள்ளவும்

தமிழின் வரலாறு

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாட்டின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்து மிகச்சிறப்பான நூலாக எழுதியிருக்கிறார் டேவிட் சுல்மான். தமிழாய்வில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அறிஞர். ஜெருசலம் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் மற்றும் சமய ஒப்பீட்டுத் துறையில்  பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதன் உயராய்வு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். 2000 வருட தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவது எளிதானதில்லை. தனது ஆழ்ந்த வாசிப்பு மற்றும் ஆய்வின் வழியே தமிழ் இலக்கிய வரலாற்றின் மீது புது வெளிச்சம் பாய்ச்சுகிறார் சுல்மான். தமிழ் மொழி …

தமிழின் வரலாறு Read More »

‘பத்மாவத்’: வரலாற்றின் மீது படரும் வெளிச்சம்

மிகுந்த சர்ச்சைகளுக்கும் போராட்டங்களுக்கும் உள்ளான ‘பத்மாவத்’ திரைப்படத்தைப் பார்த்தேன். வரலாற்றைப் படமாக்குவது எளிதில்லை. பெரும்பொருட்செலவில் பலநூறு மனிதர்களை ஒருங்கிணைத்துப் பிரம்மாண்டமாக படம் இயக்குவது பெரும் சவால். சஞ்சய் லீலா பன்சாலி இதில் பெரும் வெற்றிப் பெற்றிருக்கிறார் . கொண்டாட்டம்தான் படத்தின் ஆதாரத் தொனி. ஒளிரும் ஓவியங்களாக காட்சிகள் நகர்கின்றன. பிரம்மாண்ட அரங்குகள். வியப்பூட்டும் போர்களக் காட்சிகள், இனிமையான ஆடல்பாடல், சிறந்த நடிப்பு என இப்படம் பொழுதுபோக்கு சினிமாவின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது. வீண்சந்தேகத்தின் பெயரால் உருவான எதிர்ப்புகள், போராட்டங்கள் …

‘பத்மாவத்’: வரலாற்றின் மீது படரும் வெளிச்சம் Read More »

பத்மவிபூஷண் விருது

இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருது  இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்குமுள்ள தமிழ் மக்களை தனது இசையால் ஆற்றுப்படுத்தும் இசைமேதைக்கு இந்த விருது அளிக்கபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இசைஞானிக்கு என் மனம் நிரம்பிய அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்