கதைகள் செல்லும் பாதை 6
தூண்டிலில் சிக்கிய நினைவுகள் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று சா. கந்தசாமி எழுதிய தக்கையின் மீது நான்கு கண்கள். மீன்பிடிக்கச் செல்லும் தாத்தாவோடு செல்லும் சிறுவனின் உலகம் அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும். சமீபத்தில் படித்த சீனக்கதை கந்தசாமியின் சிறுகதையை நினைவுபடுத்தியது. வேறுவேறு தேசங்களில் எழுதப்பட்ட கதை. இரண்டிலும் தாத்தா கதாபாத்திரம் அற்புதமாக உருவாக்கபட்டுள்ளது. தாத்தா என்பது வெறும் சொல்லில்லை. தாத்தாவோடு பேரனுக்குள்ள உறவு என்பது தந்தையை விட நெருக்கமானது. தாத்தாக்கள் உலகை பற்றிய புதிய புரிதலை உருவாக்கிவிடுகிறார்கள். …