admin

நூறு பொருள்களில் உலக வரலாறு

மனிதகுல வரலாறு குறித்துத் தோழர் எஸ்ஏ பெருமாள் வகுப்பு எடுப்பதில் விற்பன்னர், அவரது உரையில் கற்காலம் துவங்கி இன்றைய இணையம் வரையான மனிதகுல வளர்ச்சி மற்றும் அறிவியலின் வரலாறு. தொழில்நுட்பம் உருவானவிதம், கண்டுபிடிப்புகளின் வரலாறு எனச் சுவைபடக் கூறுவார், முதன்முதலாக ஜார்ஜ் தாம்சனின் மனிதகுல சாரம் நூலைப்பற்றி அவரது உரையில் தான் அறிந்து கொண்டேன். ஜார்ஜ் தாம்சன் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மார்க்சிய ஆய்வாளர், கிரேக்க மொழியில் தேர்ந்தவர், பண்டை கிரேக்க சமூக உருவாக்கம் குறித்துத் …

நூறு பொருள்களில் உலக வரலாறு Read More »

வெள்ளைக் காகிதம்

பிரெஞ்சு கவிஞரும், ஒவியரும், திரைப்பட ஆளுமையுமான ழான் காக்தூ (Jean Cocteau) எழுதிய The white paper  ஒரினச்சேர்க்கையில் நாட்டம் கொண்ட ஒருவனைப் பற்றியது. Gay literature எனப்படும் தற்பால்சேர்க்கை இலக்கியத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது இந்நூல் இன்று ஒரினச்சேர்க்கை குறித்துப் பொதுவெளியில் திறந்த உரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன, அதைக் குற்றம் எனக்கருதாமல் அணுக வேண்டிய மனநிலை குறித்துத் தொடர்ந்து பேசியும் விவாதித்தும் வருகிறார்கள், அப்படியும் சமூகம் ஒரினச்சேர்க்கையை இயற்கைக்கு மீறிய தவறான செயல் என்ற கண்ணோட்டத்தில் தான் …

வெள்ளைக் காகிதம் Read More »

பாரீஸில் கால்வினோ

இதாலோ கால்வினோவின் Hermit in Paris படித்துக் கொண்டிருந்தேன், அவரது வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள், அவரது நேர்காணல். மற்றும் பயண அனுபவங்களின் தொகுப்பு நூலிது. கால்வினோவின் புனைவெழுத்தை போலவே அவரது கட்டுரைகளும் மிகச் சுவாரஸ்யமானவை. கதை சொல்லும் முறையைப் புத்துருவாக்கம் செய்தவர்களில் கால்வினோ முக்கியமானவர், இவரது Invisible Cities மிக விருப்பமான புத்தகங்களில் ஒன்று. ஒரு எழுத்தாளனுக்கு அவன் வாழும் நகரம் எவ்வளவு முக்கியமானது என்பது குறித்துக் கால்வினோ The Writer and the …

பாரீஸில் கால்வினோ Read More »

விலாஸ் சரங்

விலாஸ் சரங் (Vilas Sarang) மராத்தியின் முக்கிய எழுத்தாளர், கவிஞர். ஆங்கிலப்பேராசிரியரான இவரது சிறுகதைகள் உலக அளவில் பேசப்படுகின்றன, The Women in Cages என்ற இவரது சிறுகதை தொகுப்பு மிக முக்கியமானது, 26 சிறுகதைகள் இத் தொகுப்பில் உள்ளன. இதில் “An Interview with M Chakko” என்றொரு சிறுகதையுள்ளது, இச்சிறுகதை மிகவும் முக்கியமானது, சாக்கோ என்ற நபர் கப்பல் பயணத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரு தீவினைச் சென்றடைகிறான், அந்தத் தீவில் பெண்களுக்குப் பாதி …

விலாஸ் சரங் Read More »

எனது நாடகங்கள்

ஒரியண்ட் பிளாக்ஸ்வான் மற்றும் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரி இணைந்து வெளியிட்டுள்ள FOUR TAMIL PLAYS நூலில் எனது நாடகங்களாக அரவான், மற்றும் உருளும்பாறைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதனை  கே. லதா, பத்மா வி.மெகர்டிச், தன்யா சி.லாரன்ஸ் மூவரும் இணைந்து தொகுத்திருக்கிறார்கள். இந்த நாடகங்கள் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்பவர்களுக்குப் பாடமாக வைக்கபட்டுள்ளது. இத்தொகுப்பில் ந.முத்துசாமியின் இரண்டு நாடகங்களும் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் இந்த நாடகங்களை மொழியாக்கம் செய்த பேராசிரியர் பத்மா, பேராசிரியர் பிரேமா ஜெகநாதன் ஆகியோருக்கு …

எனது நாடகங்கள் Read More »

காகமும் நரியும்

பாட்டியிடமிருந்து காகம் வடையைத் திருடிய சிறார்கதையை நாம் அறிவோம், நூற்றாண்டுகாலமாக அக்கதை தமிழகத்தில் பிரபலமாக இருந்த போதும் அதற்கு எங்கேயாவது யாராவது சிலை செய்திருப்பார்களா என யோசித்தேன், நான் அறிந்தவரை அப்படி எதுவுமில்லை. ஆனால் இக்கதையின் மாறுபட்ட பிரெஞ்சுவடிவத்தில் காகத்திடமிருந்த வெண்ணைய்யை நரி தந்திரமாக ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்கிறது. லா ஃபோந்தேன் 1668ல் வெளியிட்ட இந்தப் பிரெஞ்சுக்கதையை அவர் ஈசாப் கதையில் இருந்து மீள்உருவாக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாரீஸில் உள்ள Ranelagh பூங்காவில்  லா ஃபோந்தேன் சிலையின் …

காகமும் நரியும் Read More »

சுவரோவியங்கள்

DAVID DE LA MANO என்ற ஸ்பானிய ஒவியர் சுவரோவியங்கள் வரைவதில் சிறந்தவர், ஸ்பெயினின் Salamanca நகரின் முக்கிய வீதிகளில் இவர் வரைந்துள்ள  சுவரோவியங்கள் சிலவற்றை இணையத்தில் கண்டேன். மரபான ம்யூரல்களில் இருந்து பெரிதும் மாறுபட்ட இந்த ஒவியங்கள் அற்புதமான கலைவெளிப்பாடாக உள்ளன. நிழல்உருவங்களைப் பிரதானமாக வரையும் இவர் கறுப்பு வெள்ளையில் வரைந்துள்ள சுவரோவியங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. Greek pottery களில் காணப்படும் ஒவியமரபின் நீட்சியைப் போன்றுள்ளன இவரது ஒவியங்கள். இயற்கையும் மனிதர்களும் ஒன்றினையும் புள்ளியே …

சுவரோவியங்கள் Read More »

நன்றி

உதவியாளர்கள் தேவை என்ற அறிவிப்பிற்கு நூற்றுமுப்பது பேர் விண்ணப்பம் அனுப்பியிருந்தார்கள். அதில் இருவர் தேர்வு செய்யப்பட்டனர் மற்றவர்களை இணைத்துக் கொள்ள இயலவில்லை. அனைவரின் அன்பான ஒத்துழைப்புக்கும் நன்றி ••

உரத்தநாட்டில்

நாளை (05/07/2014) உரத்தநாட்டில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியின் துவக்கவிழாவில் உரையாற்றுகிறேன். இதற்காக இன்றிரவு தஞ்சை செல்கிறேன். வோட்ஸ்வொர்த் புத்தக நிலையம் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. இடம்   : ரெங்கமணி கல்யாண மண்டபம் உரத்தநாடு

கெடை காடு

சமீபத்தில் ஏக்நாத் எழுதிய கெடை காடு நாவலைப் படித்தேன். இன்று பெரும்பான்மை நாவல்கள் நகர்மய வாழ்க்கையை எழுதிக் கொண்டிருக்கையில் மண்மணத்துடன், கிடைமாடுகளின் யதார்த்தமான வாழ்க்கையைச் சிறப்பாக எழுதியிருக்கிறார் ஏக்நாத். மலை கிராமங்களில் இருந்து மாடுகளைக் கெடை காடு நோக்கி அழைத்துச் செல்வது கண்கொள்ளாத காட்சியாக விரிகிறது. ஒநாய் குலச்சின்னம் நாவலை வாசிக்கும் போது மங்கோலிய வேட்டை நிலத்தை எவ்வளவு நுட்பமாக எழுதிப்போகிறாரே என வியந்தேன், அந்த விவரணைகளுக்கு இணையாகக் கிடை மாடுகளின் வாழ்க்கையை அதன் தனித்துவமான அனுபவங்களைத் …

கெடை காடு Read More »