admin

பிரமிள்

ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் சிறுகதையை கவிஞர் பிரமிள்மொழியாக்கம் செய்திருக்கிறார். அதற்கு அவர் வரைந்த ஒவியம். இக்கதை விருட்சம் வெளியிட்டுள்ள பிரமிள் விடுதலையும் கலாச்சாரமும் என்ற தொகுப்பிலுள்ளது ••

தேவதச்சனின் கவியுலகம்

ஏப்ரல் 23 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 வரை தேவதச்சனின் கவிதைகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இடம் :  கவிக்கோ மன்றம். ஆழ்வார்பேட்டை. சென்னை. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••

நன்றி நண்பர்களே

நேற்று (13.04.2017 ) எனது பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வாழ்த்திய நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையில் இருந்து பிறந்தநாள் கேக், மற்றும் பூங்கொத்து அனுப்பி மகிழ்வித்த சத்யமூர்த்தி அவர்களுக்கும், லண்டனிலிருந்து பிறந்தநாள் கேக், மற்றும் பூங்கொத்து அனுப்பி மகிழ்வித்த காயத்ரிக்கும், செங்கல்பட்டிலிருந்து பிறந்தநாள் கேக், மற்றும் பூங்கொத்து கொண்டுவந்து நேரில் தந்து மகிழ்வித்த டி.லட்சுமணனுக்கும், அழகான டிஜிட்டில் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசாகத் தந்த தீபாவிற்கும், தனது அலுவலகத்தில் எனது பிறந்தநாளைக் கொண்டாட …

நன்றி நண்பர்களே Read More »

தேவதச்சனோடு உரையாடல்.

கவிஞர் தேவதச்சனுடன் கவிதைகள் குறித்த விரிவான உரையாடல் ஒன்றினை நடத்திப் பதிவு செய்திருக்கிறேன். நானும் கவிஞர் மனுஷ்யபுத்திரனும் நான்கு அமர்வுகளாக இந்த உரையாடலை நிகழ்த்தினோம். தேவதச்சனின் கவிதைகள் குறித்த எனது கட்டுரைகளுடன் இந்த உரையாடலும் இணைந்து தனிநூலாக வெளியிடப்படவுள்ளது. அதிலிருந்து சிறுபகுதி •• எஸ்.ரா: உங்கள் கவிதைகளில் பால்யகாலம் தொடர்ந்து அடையாளப்படுத்தபடுகிறதே. அது வெறும் நினைவுகள் மட்டும் தானா? தேவதச்சன் – சிறுவயது நினைவுகளின் பங்கு கவிதையில் நிச்சயமாக இருக்கிறது . பத்து வயதுச் சிறுவனுக்கு உடல் …

தேவதச்சனோடு உரையாடல். Read More »

ஏப்ரல் 13

டிஸ்கவரி புக் பேலஸ்   எனது  பிறந்த நாளை வாசகர்களுடன்  கொண்டாடும் விதமாக  ஏப்ரல் 13 வியாழன் மாலை ஐந்து மணிக்கு   கேக் வெட்டிப்  பகிர்ந்து கொள்வதுடன்  ஒரு   கலந்துரையாடல் நிகழ்விற்கும் ஏற்பாடு செய்துள்ளது. நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன் ••

பிரபஞ்சன் 55

1961ல் பிரபஞ்சனின் முதற்சிறுகதை வெளியானது. கடந்த 55 ஆண்டுகளாக  எழுதிவரும் பிரபஞ்சன் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பங்களிப்பு செய்துள்ளார். அதைக் கொண்டாடும் விதமாக  எழுத்துலகில் பிரபஞ்சன் 55 என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 29  சனிக்கிழமை  ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நிகழ்வு  நடைபெறவுள்ளது. அதில் பிரபஞ்சன் படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு. புகைப்படக்கண்காட்சி, மற்றும் நாடகம், குறும்படத்திரையிடல், புத்தக வெளியீடு நடைபெறவுள்ளது. பிரபஞ்சனின் எழுத்துலக சேவையைப் பாராட்டி சிறப்பு நிதியும் வழங்கபடுகிறது.

ஆரணியில்

ஆரணி டைம்ஸ் சுதாகர் மற்றும் அவரது நண்பர்கள் ஏற்பாட்டில் அசோகமித்ரன் நினைவஞ்சலி கூட்டம் ஆரணியில் 08.04.2017 அன்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரணியில் ஒரு இலக்கிய நிகழ்வில் அரங்கு நிறைய ஆட்கள் கலந்து கொண்டது பெரிய சாதனை. நானும் பவா. செல்லதுரையும் அசோகமித்ரன் குறித்து உரையாற்றினோம்.  ஜி.குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். அன்று பகலில் நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான ஜி. குப்புசாமி வீட்டிற்குச் சென்றிருந்தேன். சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார். வெகு ருசியான உணவை அளித்த நர்மதா குப்புசாமிக்கு …

ஆரணியில் Read More »

பாண்டிச்சேரியில்

நேற்று பாண்டிச்சேரியில் பிரபஞ்சன் – 55 முழுநாள் கருத்தரங்கிற்கான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் மனுஷி பாரதி மற்றும் நண்பர்கள் ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்கள். மாலையில் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அதில் என்னோடு நண்பர் பவா செல்லதுரை மற்றும் பதிப்பாளர் வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மகிழ்வூட்டும் சந்திப்பாக அமைந்தது. நண்பர் இளவேனில் சிறப்பான இரவு உணவு தந்து அனுப்பி வைத்தார். இளவேனிலின் புகைப்படங்களைக் காணுவதற்காக இன்னொரு முறை தனியே பாண்டிச்சேரி வரவேண்டும் என …

பாண்டிச்சேரியில் Read More »

மணலின் நடுவே

William Stanley Merwin எனப்படும் w.s. மெர்வின் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர். இவரது Sand என்ற சிறுகதை இரண்டேபக்கங்கள் கொண்டது. அபாரமான இச்சிறுகதை உலகச் சிறுகதைகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. மணல்கடிகாரம் ஒன்றினுள் நிரப்பட்ட மணலிலுள் எப்படியோ ஒரு எறும்பு பிறந்து விடுகிறது. அதற்கு வெளியுலகம் என்ற ஒன்றே தெரியாது. மணல்துகள்களை தனது சகோதரர்களாக  நினைக்கிறது. மேலிருந்து கீழாக, பின்பு கீழிலிருந்து மேலாக எதற்காக இப்படி பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என  குழம்பிப் போகிறது. தன்னை எதற்காக மணல்துகள்கள் …

மணலின் நடுவே Read More »