admin

குல்தாரா

தார்பாலைவனத்தினுள் ஜெய்சால்மரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது குல்தாரா. கைவிடப்பட்ட இந்தக் கிராமத்தை ஆவிகள் வாழும் ஊர் என்கிறார்கள். எங்கும் இடிபாடுகள். ஒட்டுமொத்த ஊரும் காலியாக உள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்சால்மரின் திவான் சலீம் சிங் குல்தாராவில் வசித்து வந்த பாலிவால் பிராமணப் பெண் ஒருத்தியின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்ளக் கேட்டிருக்கிறார். அதற்குப் பாலிவால் பிரமாணர்கள் மறுக்கவே பெண்ணைத் தூக்கிக் கொண்டுபோய்த் திருமணம் செய்வதோடு ஊரையும் அழித்துவிடுவேன் என சலீம் சிங் மிரட்டியிருக்கிறார். …

குல்தாரா Read More »

கடைசி அரசன்

1206ல் நார்வேயின் அரசர் கொல்லப்படுகிறார். அவரது வாரிசான குழந்தையைக் காப்பாற்றும் விசுவாசமான வீரர்கள் பனிப்பிரதேசத்தினுள் தப்பிஒளிகிறார்கள். ஒருபுறம் சதி செய்து அரசனைக் கொன்று அரியணையில் அமர முயற்சிப்பவர்கள். மறுபக்கம் Baglers எனப்படும் திருச்சபை படைவீரர்கள் நாட்டைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இவர்களிடமிருந்து தப்பி Torstein, Skjervald என்ற இரண்டு படைவீரர்கள் எப்படிக் குழந்தையைக் காப்பாற்றுகிறார்கள் என்பதை விவரிக்கிறது The Last King திரைப்படம். 2016ல் வெளியாகியுள்ளது பனிப்பிரதேசத்தில் குழந்தையைச் சறுக்குவண்டியில் கொண்டு செல்பவர்களை எதிரிகள் துரத்துவதும், பனிப்புயலுக்குள் குழந்தை …

கடைசி அரசன் Read More »

பதின் நாவல் குறித்து

‘பதின்’பருவ உலகம் அழகானது… வீரபத்திர லெனின் இளமைப் பருவம் அழகானது, இனிமையானது, சுவையானது என்பதை யாரும் மறுக்க முடியாது. யாரிடம் கேட்டாலும் பள்ளி வாழ்க்கையே சிறப்பானது என்பர். ஏன் என்றால் அந்தப் பருவத்தில் தான் நண்பன், தோழி, வகுப்பு, பாடங்கள், திருட்டு, சண்டை என உலகத்தைப் பற்றி நாம் கற்றுக் கொள்கிறோம். நமக்கு யார் முதல் நண்பன் என நினைத்துப் பார்த்தால், பல முகங்கள் நம் கண்முன்னே வந்து நிழலாடும். கண்டிப்பு, தண்டனை, பயமுறுத்தல், கட்டாயப்படுத்துதல் போன்றவற்றை …

பதின் நாவல் குறித்து Read More »

தேவதச்சனோடு ஒரு நாள்.

கவிஞர் தேவதச்சனின் கவிதைகளைக் கொண்டாடும் விதத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றினை உயிர்மை ஏற்பாடு செய்துள்ளது. ஏப்ரல் 23 ஞாயிறு அன்று ஆழ்வார்பேட்டையிலுள்ள கவிக்கோ மன்றத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது கருத்தரங்கினை நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன். நான்கு அமர்வுகளாகக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. ஞாயிறு மாலை தேவதச்சன் கவிதைகளின் முழுத்தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது நிகழ்வு குறித்த விரிவான தகவல்கள் சில தினங்களில் அறிவிக்கபடும். நிகழ்வில் கலந்து கொண்டு தேவதச்சன் கவிதைகள் குறித்த உங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ள …

தேவதச்சனோடு ஒரு நாள். Read More »

மலைமேல் நெருப்பு

அனிதா தேசாயின் Fire on the mountain நாவலை அசோகமித்ரன் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். மலைமேல் நெருப்பு சாகித்ய அகாதமி பரிசுபெற்ற நாவல். அசோகமித்ரனின் மொழியாக்கம் வெகுசிறப்பானது. சாகித்ய அகாதமி இந்நாவலை வெளியிட்டுள்ளது. மலைப்பிரதேசமான கசவுலியிலிருந்த கரிக்னானோவில் குடியிருக்கிறாள் நந்தா கவுல். வயதானவள். மேல்தட்டுவர்க்கத்தைச் சேர்ந்தவள். கர்னலின் மனைவி. தேவதாரு மரங்கள் அடர்ந்த பகுதியில் உள்ளது அவளது வீடு. முதுமையைத் தனியே கழிக்கும் அவளுக்கு ஒரு நாள் ஒரு தபால் வந்து சேருகிறது. அதில் அவளது கொள்ளுப் …

மலைமேல் நெருப்பு Read More »

கவிஞர் திருலோக சீதாராம் விழா

ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளை கவிஞர் திருலோக சீதாராம் நூற்றாண்டுவிழாவை  ஏப்ரல் 1 சனிக்கிழமை மாலையில்  கொண்டாடுகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். நிகழ்வு நடைபெறுமிடம் : பி.எஸ்.மேல்நிலைப்பள்ளி ராமகிருஷ்ணா மடம் சாலை மயிலாப்பூர் நேரம்:  மாலை 6 மணி அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் •• •••

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமையான எழுத்தாளர் அசோகமித்ரன் இன்று (23.03.2017 ) காலமானார். சென்னை நகரின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்ததில் அவருக்கு நிகர் எவருமில்லை. சினிமாவின் மறுபக்கம் பற்றி அவர் எழுதிய கரைந்த நிழல்கள் நாவல் தமிழின் மகத்தான படைப்பு. ஒற்றன், தண்ணீர், மானசரோவர் எனத் தனது முக்கிய நாவல்களின் வழியே தமிழ் புனைவெழுத்தின் உச்சங்களை அவர் படைத்துக் காட்டியுள்ளார். கணையாழியில் அவர் ஆசிரியராக இருந்த நாட்களில் நான் எழுதத் துவங்கினேன். எனது முதல்கதையைத் தேர்வு …

அஞ்சலி Read More »

தனுஷ்கோடி

மோவி என்ற மதுரையைச் சேர்ந்த பத்திரிகையாளர்  https://thetimestamil.com இணையத்தில் எழுதியுள்ள குறிப்பிது. ••• மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கலைக் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் திரு ஆத்மனாதன். . சில ஆண்டுகளாக தனுஷ்கோடி பற்றிய தீவிர ஆய்வில் இருந்தார். இன்று தனது ஆய்வுக்கட்டுரையை மதுரை காமராஜர் பல்கலையில் சமர்பித்துள்ளார். அவருடன் உரையாடிய போது •• அன்று அதிகாலை மணி மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. பாம்பன் – தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயில் பாம்பன் ரயில் நிறுத்ததில் நின்றுகொண்டிருந்தது. …

தனுஷ்கோடி Read More »

ஐன்ஸ்டீன் கடிதங்கள்

உலககெங்கும் பள்ளி மாணவர்களின் லட்சியமனிதர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் . ஜீனியஸ் என்பதற்கு அடையாளமாக ஐன்ஸ்டீனைத் தான் காட்டுகிறார்கள்.  தீவிர வாசிப்பில் ஈடுபாடு கொண்ட ஐன்ஸ்டீன் தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை விரும்பிப் படித்தார். அவரது புகழ்பெற்ற மேற்கோள் “Dostoevsky gives me more than any scientist“ ஐன்ஸ்டீன் தஸ்தாயெவ்ஸ்கியைப் புரிந்து கொண்ட விதம் பற்றி ஆராய்கிறது B. G Kuznetsov எழுதிய Einstein and Dostoyevsky புத்தகம் பள்ளி மாணவர்கள் ஐன்ஸ்டீனுக்கு எழுதிய கடிதங்களும் அவற்றிற்கு அவர் எழுதிய …

ஐன்ஸ்டீன் கடிதங்கள் Read More »