admin

பால்யத்தின் சிற்றலைகள்

பேரலைகளின் சீற்றத்தை விடவும் சிற்றலைகளின் நடனம் வசீகரிக்கக் கூடியது. நாவலிலும் அப்படித்தான். போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள் போன்ற அடர்த்தியான, பல்வேறு பின்னல்களும் அடுக்குகளும் கொண்ட நாவல்கள் தரும் வாசிப்பு அனுபவம் ஒருவிதம் என்றால் ஒட்டுச்சில்லை வீசி எறியும்  போது அது தண்ணீரில் எழும்பும் சிற்றலை போலச் சிறியதும் பெரியதுமாக வாழ்வு அனுபவங்களைத் தொடுத்து எழுதப்படும் நாவல்கள் முற்றிலும் புதுவகை வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. தமிழில் இந்த வகை நாவலுக்கு உதாரணமாகக் காசியபனின் அசடு மற்றும் ஹெப்சிபா …

பால்யத்தின் சிற்றலைகள் Read More »

எஹுதா அமிக்ஹாய்

சமகால உலகக்கவிஞர்களில் மிக முக்கியமானவர் எஹுதா அமிக்ஹாய் (Yehuda Amichai). இவரது தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் தொகுப்பை சமீபத்தில் வாசித்தேன். மனஎழுச்சியூட்டும் அற்புதமான தொகுப்பு. இஸ்ரேலைச் சேர்ந்த அமிக்ஹாய் கவிதைகள் ஹீப்ரூ மொழியின் மரபான கவித்துவத்தையும் நவீனபார்வையையும் ஒன்று கலந்ததாகும். இவரது கவிதையின் தனித்துவமாக நான் கருதுவது உருவகங்கள். நவீன கவிதையுலகில் இவர் அளவிற்கு உருவகங்களைப் புதுமையாக கையாளும் ஒருவரை அறிந்ததில்லை. தினசரி வாழ்க்கையிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் சமய நம்பிக்கைகளிலிருந்தும் புராணீகத்திலிருந்தும் இவர் உருவாக்கும் உருவகங்கள் கவிதையின் மினுங்கும் …

எஹுதா அமிக்ஹாய் Read More »

குவிகம் இலக்கியச் சந்திப்பு

குவிகம் இலக்கிய வாசல்  மாதந்தோறும் நடத்தி வரும் இலக்கியச்சந்திப்பு நிகழ்வில் ஆகஸ்ட் 20  சனிக்கிழமை  நான் உரையாற்றுகிறேன், நிகழ்ச்சி டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மாலை 6 : 30 மணிக்கு நடைபெறுகிறது

மக்கள் தொலைக்காட்சியில்

ஜெயராவ் இயக்கத்தில் நான் எழுதிய தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் என்ற நாடகத்தை இன்று இரவு 7 : 30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்கிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடகமது. தமிழ் தொலைக்காட்சி ஒன்று தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை குறித்த நாடகம் ஒன்றை ஒளிபரப்பு செய்வது இதுவே முதல்முறை. மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றிகள்

அஞ்சலி

கவிஞர், நா.முத்துக்குமார் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அருமை நண்பனை நினைத்து அடக்கமுடியாமல் கண்ணீர் பீறிடுகிறது. என் அஞ்சலியையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

கி.ராஜநாராயணனுக்கு விருது

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இலக்கியச் சாதனை சிறப்பு விருது 2016 வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் மற்றும் தேர்வுக் குழுவினர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். தமிழ் இலக்கியச் சாதனை 2016 விருதுக் கேடயமும், ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. விருது விழா சென்னை, கவிக்கோ மன்றத்தில் 27 ஆகஸ்டு 2016 சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது. கனடா …

கி.ராஜநாராயணனுக்கு விருது Read More »

மாற்றம்

மதுரையில் ஆகஸ்ட் 13 மாலை நடைபெறுவதாக இருந்த இடக்கை நாவலுக்கான  விமர்சன அரங்கம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை புத்தகக் கண்காட்சியைஒட்டி செப்டம்பர் முதல்வாரம்  இந்த நிகழ்வு நடைபெறும். ••

ஈரோடு புத்தகத் திருவிழாவில்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் செவ்வாய்கிழமை( 09 .08.2016 ) உரையாற்றினேன். பெரும்திரளான கூட்டம். புத்தகக் கண்காட்சியை மிகச்சிறப்பாக ஸ்டாலின் குணசேகரன் ஏற்பாடு செய்துள்ளார். காலையில் நண்பர்களை சந்தித்து அறையில் உரையாடிக் கொண்டிருந்தேன். மதியம் வேடியப்பன் மற்றும் அண்ணன் அறிவுமதியோடு ஐயப்பா மெஸ்ஸிற்கு சாப்பிடச் சென்றேன். அறைக்குத் திரும்புவதற்குள் நான்கு இளைஞர்கள் கோவையில் இருந்து வந்து காண்பதற்காக நின்றிருந்தார்கள். அவர்களுடன் புத்தக கண்காட்சியினுள் சென்று அரங்கினைப் பார்வையிட்டேன். ஈரோடு சிந்தனைப் பேரவையின் தன்னார்வத் தொண்டர்கள் மிகுந்த பாராட்டிற்குரியவர்கள்.  காலை ரயில் …

ஈரோடு புத்தகத் திருவிழாவில் Read More »

மலையாளத்தில்

என்னுடைய சிறுகதை ஒன்றை shafi cherumavilayi மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். Prabhatha Rashmi  இதழில் வெளியாகியுள்ளது. சஃபிக்கு  மனம் நிரம்பிய நன்றி. ••

திருவண்ணாமலையில்

ஆகஸ்ட் 1 இரவு திருவண்ணாமலையில்  பவா. செல்லதுரை ஏற்பாடு செய்திருந்த நிலம் இலக்கியக் கூட்டத்தில் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றி உரையாற்றினேன். எனக்கு  மிகவும் விருப்பமான எழுத்தாளரைப் பற்றிப்  பேசியது சந்தோஷம் அளித்தது. மார்க்வெஸின் புகழ்பெற்ற சிறுகதைகளையும், எழுத்துமுறையின் சிறப்புகளையும் லத்தீன் அமெரிக்க அரசியல் சூழலையும் பற்றி விரிவாகப் பேசினேன்.  பார்வையாளர்கள் நிரம்பியிருந்தார்கள். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக  திருச்சியிலிருந்து ஒரு வாசகர் வந்திருந்தார். இரண்டு பேர் சேலத்திலிருந்து வந்திருந்தார்கள்.  திருவண்ணாமலையில் தேர்ந்த …

திருவண்ணாமலையில் Read More »