எனக்குப் பிடித்த கதைகள் 35
கார்லோவுக்கு எப்படி வாசிப்பது என்று தெரியாது கியூலியோ மோஸி ஆங்கிலத்தில்: எலிசபெத் ஹாரிஸ் தமிழில்: சுகுமாரன் கார்லோவுக்கு (அது நான்தான்) எப்படி வாசிப்பது என்று தெரியாது. அவன் மாபெரும் புத்தகங்களை வாசிக்கிறான். அந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது கார்லோவுக்கு ஒரு வார்த்தையும் புரிவதில்லை. அந்தப் புத்தகங்களில் கார்லோ எதைப் பார்க்கிறானோ அதையே நினைவில் வைத்துக்கொள்கிறான். கார்லோ வாசிக்கும்போது அடிக்கடி கண்களை மூடிக் கொள்கிறான். சில சமயங்களில் தூங்கி விடுகிறான். தூங்கும்போது பொருட்களைப் பார்க்கிறான். விழித்தெழுந்ததும் மறுபடியும் வாசிப்பைத் தொடர்கிறான். …