admin

இடக்கை – விமர்சனம்

கவிஞர் கார்த்திகா முகுந்த் சரித்திர காலத்தில் வாழ்ந்தும் சரித்திரங்களில் இடம் பெற்றிராத எளிய மக்களை மையமாகக் கொண்டு வாசிக்கையில் ‘இடக்கை’ ஒரு புதிய வாசிப்பனுபவத்தைத் தருகிறது. சரித்திரங்கள் குறித்த எனது பார்வைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. இதுவும் ஒரு வகையில் சரித்திரமாகத் தோன்றுகிறது; எழுதப்படாத எளிய மக்களின் சரித்திரம். நாவலில் குறிப்பிட்ட காலத்துக்குப் பின்  பற்பல ஆண்டுகளுக்குப் பிறகும் தங்கள் நிலையில் மாற்றம் இல்லாமல் வாழும் மக்களின் சரித்திரம். சில சமயங்களில் கதை நடைபெறும் காலத்தில் …

இடக்கை – விமர்சனம் Read More »

கோவை வாசகர் சந்திப்பு

கோவை வாசகர் சந்திப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வினை எழுத்தாளர் இரா.முருகவேள் ஒருங்கிணைத்து நடத்தினார்.  இளம்வாசகர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் விஜயா வேலாயுதம் அவர்கள் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சி தந்தது. காஸ் வனவியல் அருங்காட்சியகத்திலுள்ள சிற்றரங்கில் நிகழ்வு நடைபெற்றது. இந்தியாவில் மிகவும் பழமை  வனவியல் அருங்காட்சியகமிது . 1902-ம் ஆண்டில் அப்போதைய வனத்துறை அலுவலர் ஹாரஸ் ஆர்ச்சிபால்ட் காஸ் என்பவரால், அருங்காட்சியகம் உருவாக்கபட்டுள்ளது..பல்வேறு வகையான பறவை, விலங்கினங்கள், மரங்கள், தாவர வகைகள் இங்கே பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.  பிரிட்டீஷ் …

கோவை வாசகர் சந்திப்பு Read More »

சிறப்பு நூலகம்

கோவை ஆர்.எஸ். புரம் கவுலி பிரவுன் ரோட்டிலுள்ளது மாவட்ட மைய நுாலகம்.  தமிழகத்தில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன நுாலகப்பிரிவு இங்கே திறக்கப்பட்டுள்ளது. கோவைக்குச் சென்றிருந்தபோது நண்பர் PUCL சந்திரசேகர் அந்நூலகத்தைப் பார்வையிட அழைத்துச் சென்றார்.  சந்திரசேகர், நூலகத்திற்கு தன்னார்வத்துடன்  பல்வேறு சேவைகள் செய்து வருபவர். தீவிர வாசகர். களச்செயல்பாட்டாளர். முற்றிலும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட நூலகப்பிரிவு மிக அழகாக வடிவமைக்கபட்டுள்ளது. பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் புத்தகங்கள். பிரைலி கம்யூட்டர்கள் ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகள், செவித்திறனை இழந்த குழந்தைகள் …

சிறப்பு நூலகம் Read More »

கோவையில்

கோவையிலுள்ள  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முத்தமிழ் விழாவில் கலந்து கொள்ள நாளை( 16. 04. 2016 )கோவை வருகிறேன். மாலையில் நண்பர்கள், வாசகர்களுடன் ஒரு சந்திப்பிற்கு எழுத்தாளர் இரா.முருகவேள் ஏற்பாடு செய்துள்ளார் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

பிறந்த நாள்

இன்று எனது பிறந்தநாள். தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்திய  நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் மிகுந்த நன்றி. பிறந்த நாளில் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது நண்பர்களும் வாசகர்களும் ஒன்றிணைந்து தேசாந்திரி என்ற இலக்கிய அமைப்பினை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை நான் வழிநடத்த இருக்கிறேன். இதன்வழியே இந்தியப்பயணங்கள், சிறுகதை, கவிதை, நாவல், திரைக்கதை பயிற்சிமுகாம்கள், புத்தக அறிமுகக் கூட்டங்கள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், சிறார்களுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி, குறும்படத்திரையிடல் எனப் பல்வேறு நிகழ்வுகளையும் முன்னெடுத்துச் செயல்படுத்த இருக்கிறார்கள். தேசாந்திரியோடு இணைந்து …

பிறந்த நாள் Read More »

டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு

சம்யுக்தா மாயாவின் முதல் கவிதைத் தொகுப்பு டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு. இவரது கவிதைகள் எதையும் இதற்கு முன்பாக நான் வாசித்ததில்லை. தொகுப்பாக இவரது கவிதைகளை ஒருசேர வாசித்த போது பெருமகிழ்ச்சி அடைந்தேன். மிகச்சிறந்த கவிதைகளை எழுதியிருக்கிறார். இக் கவிதைகளின் தனித்துவம் எளிய வார்த்தைகளின் வழியே உருவாகும் மகத்தான அனுபவங்களாகும். புதிய கவித்துவ மொழியில் உணர்ச்சிபூர்வமாக கிளைவிடுகின்றன வரிகள்.  அதில் வெளிப்படும் படிமங்களும் உவமைகளும் சிறப்பாக உள்ளன. எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று அரூப முத்து. முதல் இரண்டு …

டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு Read More »

சிறார் நூல்கள்

சிறார்களுக்காக நான் எழுதியுள்ள நூல்களைப் பற்றிய விபரங்களைத் தனியே அனுப்பித் தர இயலுமா என கோவையிலிருந்து ஒரு நூலகர் கேட்டிருந்தார். நேற்று அவருக்காக இந்தப்பட்டியலை மெயிலில் அனுப்பி வைத்திருந்தேன். தேவைப்படும் வாசகர்களுக்காக இதனைப் பகிர்ந்து கொள்கிறேன் 1)   ஏழு தலை நகரம் – விகடன் வெளியீடு-சிறார் நாவல் 2)   கால்முளைத்த கதைகள்-  உயிர்மை வெளியீடு – சிறார் கதைகள் 3)   கிறுகிறுவானம்- பாரதி புத்தகாலயம் – சிறார் நாவல் 4)   அக்கடா – வம்சி பதிப்பகம் -சிறார் …

சிறார் நூல்கள் Read More »

சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம்

ஆர்.பாலகிருஷ்ணன். ஐ.ஏ.எஸ் ஒடிஸா அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.  மதுரையில் தமிழ் இலக்கியம் பயின்ற பாலகிருஷ்ணன் தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இடப் பெயர்களின் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.  சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை  கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்துள்ளார். அக்கட்டுரை சிந்துவெளி ஆய்வுலகில் மிகுந்த பாராட்டினைப் பெற்றுள்ளது. தனது …

சிந்துவெளி ஆய்வில் புதிய வெளிச்சம் Read More »