admin

நிலவழி

சமகால இந்திய இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்கள், நாவல்கள் குறித்த  புதிய பத்தி ஒன்றை உயிர்மை இதழில் எழுதத் துவங்கியுள்ளேன். நிலவழி என்ற இத் தொடரின் வழியே குறுக்குவெட்டுத் தோற்றத்தில் இந்திய இலக்கியத்தின் இன்றைய போக்கினை ஆராய முயற்சிக்கிறேன். முதல் கட்டுரையாக அஸ்ஸாமிய எழுத்தாளரான இந்திரா கோஸ்வாமி குறித்தும் அவரது புகழ்பெற்ற நாவலான தென் காமரூபத்தின் கதை குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறேன்

அசோகமித்ரன் சந்திப்பு

டிஸ்கவரி புக் பேலஸ் எனது நான்கு நூல்களை வெளியிட்டுள்ளது. சிறார்களுக்காக நான் எழுதிய படிக்கத்தெரிந்த சிங்கம், மீசையில்லாத ஆப்பிள் ஆகிய புத்தகங்களும், இன்றில்லை எனினும் என்ற கட்டுரைத் தொகுப்பும், ஆதலினால் நூலின் மறுபதிப்பும் வெளியாகியுள்ளன. இந்த நூல்களை எழுத்தாளர் அசோகமித்ரன் அவர்களைச் சந்தித்து நேரில் கொடுத்தேன். என்னோடு டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனும் வந்திருந்தார். இலக்கியக்கூட்டங்களுக்கு  நாற்பது ஐம்பது பேர்களுக்கு மேல் வருவது ஆச்சரியமாக இருக்கிறது என அசோகமித்ரன் பேசத் துவங்கினார். ஆன்டன் செகாவ்வைப் பற்றி அவர் …

அசோகமித்ரன் சந்திப்பு Read More »

பசுமை உணவகம்

சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தினைக் கடந்தவுடன் வருகிற முதல் இடப்புற தெருவான 16 வது குறுக்குத்தெருவில் க  (Green cafe ) என்ற பெயரில் Organic Veg. restaurant ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நண்பர் பவா.செல்லதுரையின் பரிந்துரையால் நேற்று மாலை அங்கே குடும்பத்துடன் சாப்பிடச் சென்றிருந்தேன். சென்னையில் இதுவரை நான் சாப்பிட்ட சைவ உணவகங்களில் மிகச்சிறந்த ஒன்று இதுவென்பேன். சிறுதானியங்களைக் கொண்டு இத்தனை விதங்களில் உணவு தயாரிக்கமுடியும் என்பது ஆச்சரியமளிக்கிறது. சுவையும் தரமும் இனிய உபசரிப்பும் கொண்ட சிறப்பான …

பசுமை உணவகம் Read More »

இரும்புக்கை மாயாவி

பள்ளிநாட்களில் நான் படித்த காமிக்ஸ் புத்தகங்கள் தற்போது புதுப்பொலிவுடன் மீண்டும் புதிய பதிப்பாக வெளிவந்துள்ளன. முத்துகாமிக்ஸ் வெளியிட்ட காமிக்ஸ் புத்தகங்களின் ரசிகன் என்ற முறையில் இவற்றை மீண்டும் வாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக நேற்றிரவு இரும்புக்கை மாயாவியின் நாச அலைகளை வாசித்தேன். முதல்முறையாகப் படித்த போது அடைந்த சந்தோஷம் இன்றும் அப்படியே இருப்பது வியப்பளித்தது. இரும்புக்கை மாயாவி பற்றி ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். புத்தரின் கார்டூன் மொழி என்ற அச்சிறுகதை எஸ்.ராமகிருஷ்ணன் தொகுதி 1 ல் …

இரும்புக்கை மாயாவி Read More »

சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன்

அம்ஷன் குமார் சினிமா எவ்வாறு தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கிறது என்பது பற்றி ஒரு தலைமுறைக்கே அது குறித்த எண்ணங்களைத் தோற்றுவித்த ஆசானாக விளங்கினார் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் எழுத வந்த காலத்தில் தமிழில் பத்திரிகை உலகும் சினிமா உலகும் பெரும் தொழில் நிறுவனங்களாக ஆகிவிட்டிருந்தன. பல இலக்கிய எழுத்தாளர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பெரும் பத்திரிகைகளில் தங்கள் படைப்புகளை வெளியிட்டனர். நாவல்கள், கதைகள் மட்டுமின்றி கட்டுரைகளும் அவற்றில் வந்தன. இலக்கியச் சிறப்பு மிக்க உ.வே.சாமிநாத அய்யரின் சுயசரிதை ‘என் …

சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன் Read More »

காணொளிகள்

உயிர்மை நடத்திய எனது புதிய நாவல் ‘இடக்கை’, புதிய சிறுகதைத் தொகுப்பு ‘என்ன சொல்கிறாய் சுடரே’ ஓவியங்கள் தொடர்பான் நூல் ‘ஆயிரம் வண்ணங்கள்’ நூல்கள் வெளியீட்டு விழா காணொளிகள் அனைத்தும் ஒரே சுட்டியில் https://www.shruti.tv/?p=8101 நன்றி  : ஸ்ருதி டிவி

மண்ணின் இசையாய்…

( சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக் கட்டுரை) சுப்பாராவ் கர்னாடக சங்கீதம் இந்த மண்ணின் இசையா? இல்லை அதுவும் கைபர் கணவாய் வழியே வந்ததா? என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. நல்ல ரசனையும், ஆழ்ந்த வாசிப்பும், பரந்த பார்வையும் கொண்ட பல முற்போக்காளர்கள் கூட கர்னாடக சங்கீத விஷயத்தில் சறுக்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அது இந்த மண்ணின் இசையல்ல, அது இந்த மக்களின் இசையல்ல, அது மேட்டுக்குடியினரின் இசை, உழைக்கும் வர்க்கத்திற்கு, பிராமணரல்லாத, இடைநிலைச்சாதியினருக்கு சம்பந்தமில்லாத ஒரு …

மண்ணின் இசையாய்… Read More »

ஜெயகாந்தன் நினைவு நாள்

ஏப்ரல் 8, எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவு நாளை முன்னிட்டு டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளேன். இதில் ஜேகே குறித்த இரண்டு டாகுமெண்டரி படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. அத்துடன் ஜெயகாந்தனின் கதையுலகம் பற்றி  நான் உரையாற்றுகிறேன் இடம்  : டிஸ்கவரி புக் பேலஸ்.  கே.கே. நகர் சென்னை நேரம் : மாலை ஆறு மணி நாள் : 08- 04- 2016

பெண்ணால் முடியும்.

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கோவிந்த நிகாலனி இயக்கிய Sanshodhan என்ற ஹிந்திப்படத்தைப் பார்த்தேன். NFDC & UNICEF இணைந்து தயாரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்றில் வித்யா என்ற இளம்பெண் தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து உறுப்பினராகிச் சந்திக்கும் பிரச்சனைகளை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் நிகாலனி. செய்திதுறையின் விளம்பரப் படம் போல நிறையக் காட்சிகள் பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் மகளிர் பங்கெடுப்பு பற்றிய விளக்கமாக இருந்த போதும் ராஜஸ்தானிய கிராமிய வாழ்க்கையைக் காட்சிபடுத்தியதிலும் கல்விக்காகக் …

பெண்ணால் முடியும். Read More »