admin

எனக்குப் பிடித்த கதைகள் 34

பாத்திமா – ஹைஃபா பீதர்(haifa bitar) தமிழில் விக்னேஷ் பாத்திமா பிச்சை எடுக்கும் குழந்தை என்பதால் மட்டும் அவள் என் கவனத்தை ஈர்க்கவில்லை. வாழ்வின் துயரங்களுக்கு எடுத்துக்காட்டாக, சாலைகளிலும் தெருக்களிலும் போவோர் வருவோரை மறித்துப் பிச்சை எடுக்கும் எத்தனையோ குழந்தைகளை, என்னையும் மீறி நான் பார்த்துப்  பழகியிருக்கிறேன். ஆனால் பத்து வயது கூட நிரம்பியிராத இந்த பாத்திமாவினுள் உள்ள ஏதோ ஒன்று என் அறிவை முடக்கி உணர்ச்சிகளின் வசப்படுத்துகிறது. அவள் என் அலுவலகத்திற்கு வரும் போதும், அவளை …

எனக்குப் பிடித்த கதைகள் 34 Read More »

குறைந்த ஒளியில்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  புகைப்படக்கலைஞர் பிரபு காளிதாஸ் என்னைப் புகைப்படங்கள் எடுப்பதற்காக  கிழக்கு கடற்கரை சாலையில் கடப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள ஆலம்பரைகோட்டைக்கு அழைத்துச் சென்றார். காலை ஆறுமணிக்கு முன்பாக அங்கிருக்க வேண்டும் என இருள் கலையாத சாலையில் பயணம் செய்தோம். விடிகாலை வெளிச்சத்தில் அவரும் இரண்டு நண்பர்களும் நிறையப் புகைப்படங்களை எடுத்தார்கள். மிகச்சிறப்பான புகைப்படங்கள்.  இன்றுவரைஅந்தப் புகைப்படங்களைத் தான் எனது புத்தகங்களின் பின்னட்டையில் பயன்படுத்தி வருகிறேன் பிரபு தேர்ந்த ஒளிப்பதிவாளர். சிறந்த இலக்கிய வாசகர். உலக சினிமாவைத் தேடித்தேடி …

குறைந்த ஒளியில் Read More »

புகைப்படங்கள் 1

உயிர்மை பதிப்பகம் நடத்திய எனது மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்பிற்குரிய உதயசந்திரன் ஐஏஎஸ். இயக்குனர் வசந்தபாலன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்,  எழுத்தாளர் ஷாஜகான், ஒவியர் விஸ்வம், டாக்டர் திருநாவுக்கரசு. ஐஐடி சசி, மணிமாறன், வழக்கறிஞர் தேவகுமார் . பங்கேற்ற நண்பர்கள். வாசகர்கள் அனைவருக்கும் எனது மனம் நிரம்பிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வினை படப்பிடிப்பு செய்து இணையத்தில் பகிரும் ஸ்ருதி டிவிக்கும். சிறப்பான புகைப்படங்களை எடுத்து தந்த …

புகைப்படங்கள் 1 Read More »

புத்தக வெளியீட்டு விழா

நாளை ருஷ்ய கலாச்சார மையத்தில் எனது  மூன்று புத்தகங்கள் வெளியாகின்றன. நண்பர்கள், வாசகர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் மூன்று புத்தகங்களும் சேர்ந்து ரூ 500 விலைக்கு அரங்கில் கிடைக்கும்.

அழகியசிங்கரின் கட்டுரைகள்

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு விருட்சம் அழகியசிங்கரைத் தெரியும். இலக்கியத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அபூர்வமான மனிதர். கவிதைகள், சிறுகதைகள். கட்டுரைகள் எழுதி வருவதுடன் நவீன விருட்சம் என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் அதன் 100 வது இதழ் சமீபமாக வெளிவந்துள்ளது. நவீன விருட்சம் இதழில் எனது சிறுகதைகள் வெளியாகியிருக்கிறது. விருட்சம் இதழ் நடத்துகிற சிரமம் பற்றிப் பேசும்போது கூட பரிகாசமாகவே தனது கஷ்டங்களைச் சொல்லக்கூடியவர் அழகியசிங்கர். அவரது இயற்பெயர் சந்திரமௌலி. …

அழகியசிங்கரின் கட்டுரைகள் Read More »

கலாப்ரியா

நான் பெரிதும் மதிக்கும் கவிஞர் கலாப்ரியா இடதுகை பற்றி எழுதிய இக்கட்டுரை எனது நாவலுக்கு நெருக்கமாக உள்ளது. இதனை எழுதிய கலாப்ரியாவிற்கும் சுட்டிக்காட்டிய விநாயகமுருகனுக்கும் நன்றி •• தி.ஜானகிராமன் எழுதியிருப்பார், ஒரு நாள் பூராவும் உள்ளங்கை ரேகைகளையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று. பார்ப்பதற்கும், வியப்பதற்கும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அபூர்வம் எங்கேயும் எப்பொழுதும் நம்மைச் சுற்றியும் நம்மிடமுமே இருக்கிறது.நாமோ “பூர்வமானவைகளைப் பற்றியே யோசித்து, முந்தினவைகளையே நினைத்துக்’’ கவலைக் குழியில் விழுந்து கிடக்கிறோம். ஒரு தனிமையான மதியப் பொழுது, …

கலாப்ரியா Read More »

இடக்கை- நேர்காணல்

இடக்கை நாவல் குறித்த நேர்காணல்  வீடியோ ஒன்றினை எனது மகன் ஹரியும்  அவனது நண்பர்களும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். அதன் இணைப்பு edakkai video link .. https://youtu.be/r1JIy_xmJPQ நண்பர்கள், வாசகர்கள் இதனை சமூக ஊடகங்களில் பகிரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் •••