admin

இந்திய வானம்

ஆனந்த விகடனில் தொடராக வந்த இந்திய வானம் தற்போது விகடன் பிரசுர வெளியீடாக வந்துள்ளது. சென்னை புத்தக கண்காட்சியில் விகடன் அரங்கில் இந்நூல் விற்பனைக்கு கிடைக்கிறது

இடக்கை – நாவல்

தே. இலட்சுமணன் தமிழகத்தில் முன்னணியில் நிற்கும் எழுத்தாளர்களில் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் அண்மையில் எழுதி வெளியிட்ட நாவல் “இடக்கை”. இந்த நாவல் பற்றிய எனது விமர்சனம் “புத்தகம் பேசுது” ஏப்ரல் இதழில் வெளிவந்துள்ளது. அந்த நாவலில் சமுதாயத்தில் மிகக் கீழ்  ஜாதியாக தள்ளப்பட்டுள்ள “தூமகேது” என்ற பெயர் கொண்ட பாத்திரமும் மன்னன் அவுரங்கசீப்பின் அந்தரங்கப்பணிப் பெண்களில் ஒருத்தியான அஜ்யா என்ற பெயர் கொண்ட அரவாணி  பாத்திரமும் மனதில் நிற்பவைகளாக நாவல் படைக்கப்பட்டுள்ளன, புத்தக அறிமுகத்தில் அஜ்யா பற்றி …

இடக்கை – நாவல் Read More »

படிக்கத் தெரிந்த சிங்கம்

படிக்கத் தெரிந்த சிங்கம் – எஸ்.ராமகிருஷ்ணன் (சிறார் நாவல்) விழியன் ** எஸ்.ரா கதை சொல்லி கேட்பது ஒரு சுவாரஸ்யம். சுவாரஸ்யம் என்பதைவிட ஒரு மயக்கம் கொடுத்துவிடும். பிரசாத் ஸ்டுடியோ வாசலில் ஒருமுறை சந்தித்தபோது படிக்கத் தெரிந்த சிங்கத்தின் ஒன் லைனைரை கூறினார். குழந்தைகள் தினசரிகளை வாசிக்க வைக்க ஒரு சிறார் நாவல் என்றார். எஸ்.ரா செய்யப்போகும் மாயத்திற்காக காத்திருந்தேன். விறுவிறு வாசிப்பு. எட்டு வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கான புத்தகமாக வந்துள்ளது. அதைவிட சிறிய …

படிக்கத் தெரிந்த சிங்கம் Read More »

கோணங்கியுடன்

இரண்டு நாட்கள் கோணங்கியுடன் சுற்றித்திரிந்தேன். நானும் அவரும் ஒன்றாக திரிந்த நாட்கள்  மறக்கமுடியாதவை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இணைந்து சுற்றியிருப்போம். எத்தனையோ இலக்கியவாதிகளைத் தேடிச் சென்று சந்தித்திருக்கிறோம். வரலாற்றுபுகழ்மிக்க இடங்களை தேடி அலைந்திருக்கிறோம். எவரெவர் வீடுகளிலோ தங்கிப்பேசி கடந்து போயிருக்கிறோம். இன்று அவரது பாதையும் பயணமும் வேறு. ஆனாலும் மனதில் அந்த நெருக்கம் மறையவேயில்லை. இருவரும் ஒன்றாக சாத்தூர்  சென்று  நண்பர் தியாகுவை அழைத்துக் கொண்டு பாபநாசம் சென்றோம். அங்கே ஒரு அறை எடுத்துக் கொண்டு …

கோணங்கியுடன் Read More »

கோடைப்பயணம்

நாளை முதல் பதினைந்து நாட்கள்  கோடைப் பயணம் புறப்படுகிறேன். ஜுன் 7 அன்று சென்னை திரும்புவேன். ராஜபாளையத்தில் ஜுன் 4  அன்று நண்பர் சா. தேவதாஸ் ஒரு இலக்கியக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார்.  இடம் நேரம் குறித்து சில நாட்களில் பதிவிடுகிறேன் ஜுன் 5 மதுரையில் நண்பர் முருகேச பாண்டியன் மகள் திருமண நிகழ்விலும் ஜுன் 6 கவிஞர் கலாப்ரியா மகள் திருமண நிகழ்விலும் கலந்து கொள்ள இருக்கிறேன் ••

இமயத்தின் மணியோசை.

இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்ட ஆங்கிலப்படம் BLACK NARCISSUS, 1947ல் வெளியானது. மைக்கேல் போவல் இயக்கியுள்ளார். சிறந்த கலையமைப்பு. ஒளிப்பதிவு என இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள இப்படத்தைச் சமீபத்தில் பார்த்தேன். இமயமலையின் மோபு என்ற இடத்தில் கன்னியர் மடம் ஒன்றை உருவாக்க முயலும் கன்னியாஸ்திரிகளின் கதையே பிளாக் நார்சிசஸ். இளவரசன் திலீப் ராய் பயன்படுத்தும் வாசனைத்திரவியத்தின் பெயரது. மையக்கதையின் குறியீடாகவே அந்த வாசனை திரவியம் அடையாளப்படுத்தபடுகிறது. இளமையின் அடையாளமாக உள்ள அந்த வாசனைதிரவியத்தின் மணத்தைக் கன்னியாஸ்திரிகள் விரும்புகிறார்கள். …

இமயத்தின் மணியோசை. Read More »

மூன்றாம் பதிப்பு

நான் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் நூலின் மூன்றாம் பதிப்பு  வெளியாகியுள்ளது.  இரண்டு  தொகுதிகள் சேர்த்து விலை : ரூ 800 டிஸ்கவரி புக் பேலஸ் இதனை வெளியிட்டுள்ளது நூலை வாங்குவதற்கு அணுகவும் Discovery Book Palace (P)Ltd No.6, Magavir Comlex, 1st Floor Munusamy Salai, K K Nagar West Chennai – 600078 (Near Pondichery Guest house) Ph”+91 44 65157525 , Cell +91 9940446650 Mail: discoverybookpalace@gmail.com