admin

கடவுளின் நாக்கு

தி இந்து தமிழ் நாளிதழில் நாளை செவ்வாய்கிழமை (28.06,2016 ) முதல் புதிய பத்தி ஒன்றைத் துவங்குகிறேன் இந்தப் பத்தி உலகெங்குமுள்ள வாய்மொழிக்கதைகளைப் பற்றியது.

நன்றி

நேற்று (25.06.16 ) மாலை ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் என்ற எனது நாடகத்திற்குத் திரளாக பார்வையாளர்கள் வந்து சிறப்பித்தார்கள். தியேட்டர்லேப் குழுவினர் சிறப்பாக நாடகத்தை உருவாக்கியிருந்தார்கள். இயக்குனர் ஜெயராவிற்கும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். இந்த நிகழ்விற்குக் காரணமாக இருந்த தங்கப்பனுக்கும்  அனுமதி தந்த ருஷ்ய கலாச்சார மைய இயக்குனருக்கும்  நாடகத்தைக் காண வந்த அனைவருக்கும்  எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ••

Dostoyevesky’s life

தி இந்து ஆங்கில நாளிதழில் எனது நாடகம் பற்றி வெளியாகியுள்ள குறிப்பு ** A ‘shadow’ to throw light on Dostoyevesky’s life – ZUBEDA HAMID For lovers of Russian literature in the city, this Saturday offers a treat. A Tamil play on Russian writer Fyodor Dostoyevesky’s life, scripted by S. Ramakrishnan, is to be staged at the Russian Cultural …

Dostoyevesky’s life Read More »

தஸ்தாயெவ்ஸ்கி நாடகம்

எனது புதிய நாடகம்   25 .06.2016 சனிக்கிழமை  மாலை ஆறரை மணிக்கு ஆழ்வார்பேட்டையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது .தியேட்டர் லேப் நாடகக்குழு இதனை நடத்துகிறது அனைவரும் கலந்து கொள்ளலாம்.  அவசியம் வருக.

இடக்கை விமர்சனம்

இடக்கை தாளகதியில் ஒரு வாசிப்பு – பெஷாரா சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் ‘’இடக்கை’’ என்னும் நாவல் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. வாழ்க்கையின் உள்ளோடும் அவலங்களின் சாரம் தொட்டுச் செல்கிறது நாவல். மற்றும் தேடல்தான் நாவலின் மையக் கரு. ஆம், சில கதாபாத்திரங்களின் மனம், கடந்த காலத்தில் நழுவ விட்ட, வாழும் தருணங்கள் தேடி நினைவலைகளில் அலைகின்றது. பிரிந்த குடும்பத்துடன் ஒன்று கூட விழையும் முயற்சிகளாக தேடல். ஞானிகளின் தரிசனத்தில் எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள பயணப்படும் தேடல். கருவூல ரகசியம் …

இடக்கை விமர்சனம் Read More »

நாடகம்

எனது புதிய நாடகம் தஸ்தாயெவ்ஸ்கியின் நிழல்கள் ஜுன் 25 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நாடகத்தை தியேட்டர் லேப்  மற்றும் ருஷ்ய கலாச்சார மையத்தின் புஷ்கின் இலக்கியப்பேரவை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். நாடக கலைஞர் ஜெயராவ் இதனை இயக்குகிறார். ஆழ்வார்பேட்டையிலுள்ள ருஷ்ய கலாச்சார மையத்தில் இந்நாடகம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

உயிர்மையில்

இம்மாத (ஜுன் 2016 )உயிர்மையில் எனது புதிய சிறுகதை நோர்பாவின் கல் வெளியாகியுள்ளது அதே இதழில் மகாராணியின் பேனா என்ற கட்டுரையும் வெளியாகியுள்ளது. இக்கட்டுரை மணிப்பூரி எழுத்தாளர் எம்.கே. பிநோதினி தேவி பற்றியது

அந்திமழையில்

இம்மாத ( ஜுன் 2016 ) அந்திமழை இதழில் முதல்புத்தகத்தின் வாசனை என்ற சிறப்பு பகுதி இடம்பெற்றுள்ளது.  தனது முதல் புத்தகத்தை வெளியிடுவதற்கு எழுத்தாளர்கள் அடைந்த சிரமங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். உப பாண்டவம் நாவலை வெளியிடுவதற்கு நான் பட்ட அவஸ்தைகளை அதில் பதிவு செய்திருக்கிறேன் எழுத்தாளர்கள் கி.ரா, வண்ணநிலவன். அசோகமித்ரன், நாஞ்சில் நாடன், கலாப்ரியா. ஜெயமோகன். சாருநிவேதிதா, கோணங்கி , இராசேந்திர சோழன்,, சுகுமாரன்.  ஆகியோர் பங்களித்துள்ளார்கள். இப்பகுதி மிகச்சிறந்த தொகுப்பாக  உருவாக்கபட்டுள்ளது.  ஆசிரியர் அசோகனுக்கு எனது மனம் …

அந்திமழையில் Read More »

புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை, விகடன் பிரசுரம்,  தி இந்து, டிஸ்கவரி புக் பேலஸ் , பாரதி புத்தகாலயம், விஜயா பதிப்பகம்  ஆகிய அரங்குகளில் எனது புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன