ஊரும் உறவும்
திதி என்ற கன்னடப்படத்தைப் பார்த்தேன். சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற பிரக்ஞையே உருவாகவில்லை. மாறாக ஒரு கிராமத்தில் நம் கண்முன்னே எல்லாச் சம்பவங்களும் நடப்பதாகவே இருந்தது. ஆவணப்படத்தைக் கூட இவ்வளவு துல்லியமாக எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. நடித்திருப்பவர்கள் அத்தனை பேரும் கிராமத்து மனிதர்கள். வெகு யதார்த்தமாகப் படமாக்கபட்டிருக்கிறது. இவ்வளவு நிஜமாக ஒரு படத்தை உருவாக்கிவிட முடியும் என்பது சாதனையே. இதனாலே Locarno International Film Festival லில் இரண்டு முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது. படத்தின் இயக்குனர் …