admin

இருவேறு உலகம்.

The Best Years of Our Lives 1946ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம். ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்ற படம். இதனை வில்லியம் வைலர் இயக்கியுள்ளார் இரண்டாம் உலகப் போரிலிருந்து மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் வீடு திரும்புகிறார்கள். அவர்கள் சிறிய வணிக விமானத்தில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மூவரும் ராணுவத்தின் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு பதவிகளை வகித்தவர்கள். அவர்கள் புதிய கனவுகளுடன் வீடு திரும்புகிறார்கள். அந்தப் பயணத்தில் மூவரும் நண்பர்களாகிறார்கள். ஆகாயத்தில் பறந்தபடியே …

இருவேறு உலகம். Read More »

ஆழ்ந்த இரங்கல்கள்

அன்பிற்குரிய நண்பர் அம்மாசத்திரம் சரவணன் மறைவு மிகுந்த மனவருத்தம் தருகிறது.   தினமதி நாளிதழில் சரவணன் பணியாற்றிய நாட்களில் அவரது அறையில் தங்கியிருக்கிறேன். அவருடன் திருபுவனம் சென்று நண்பர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன். சரவணன் மிகுந்த நேசத்துடன் பழகுவார். அவரது மறைவு தாளாத மனத்துயரை அளிக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு சரவணன் ஒரு இரவு போனில் அழைத்திருந்தார். பழைய நாட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் ஊடாக மறைந்த திருபுவனம் கனகு பற்றிப் பேசி கண்ணீர் சிந்தினோம். சொந்த …

ஆழ்ந்த இரங்கல்கள் Read More »

நட்சத்திரங்களின் இடைவெளி

அனதோல் பிரான்ஸின் பால்தஸார் சிறுகதையைப் புதுமைப்பித்தன் மொழியாக்கம் செய்திருக்கிறார். இயேசு பிறந்த போது அவரைக் காண காணிக்கையுடன் வந்த மூன்று ஞானியர்களில் ஒருவர் தான் இந்தப் பால்தஸார். மற்ற இருவர் காஸ்பர் (Caspar), மற்றும் மெல்கியர் (Melchior) ஆகும். மூவரும் நட்சத்திரங்களின் வழிகாட்டுதலில் பயணம் செய்தவர்கள். இவர்கள் குறித்துப் பல்வேறு புனைவுகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் அனதோல் பிரான்ஸின் கதை வியப்பூட்டக்கூடியது இக்கதை பால்தஸாரின் காதலை விவரிக்கிறது. அதுவும் பால்தஸார் பித்தாக அரசி பெல்கிஸைக் காதலிக்கும் போது அவள் …

நட்சத்திரங்களின் இடைவெளி Read More »

சாய்ந்தாடும் குதிரை

எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு சாய்ந்தாடும் குதிரை. டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் சார்பில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

நாவல்வாசிகள்

டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. அதில் ஐந்து புதிய நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் நடத்தும் இந்த வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் மகத்தான இந்திய நாவல்களைக் கொண்டாடும் நாவல்வாசிகள் இந்து தமிழ்திசை நாளிதழில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

பொம்மைகளின் பேரரசன்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா டிசம்பர் 25 வியாழன் மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் எனது ஐந்து நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. பொம்மைகளின் பேரரசன் சிறார்களுக்கான புனைகதை. இதில் வரும் பொம்மைகளின் பேரரசன் முடிவில்லாத பயணத்தை மேற்கொள்கிறான். அவன் சொல்லும் கதைகளின் வழியே விசித்திரமான வாழ்க்கையும் மனிதர்களும் அறிமுகமாகிறார்கள். நட்சத்திரங்களின் வீட்டைத் தேடும் ஆடும். கதை கேட்கும் மீன்களும், முதலையை வரையும் ஓவியனும். எரிமலைக்குள் கதை சொல்லும் பூர்வகுடிகளும் …

பொம்மைகளின் பேரரசன் Read More »

மஞ்சள் தருணங்கள்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா டிசம்பர் 25 வியாழன் மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் எனது ஐந்து நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. அயல்மொழித் திரைப்படங்கள் குறித்து எனது இணைய தளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் 50 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

கவிதைகள் : சில பார்வைகள்

எனது கவிஞனும் கவிதையும் நூல் குறித்து மதிப்பிற்குரிய வெ. இறையன்பு IAS தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ராணி வார இதழில் அவர் எழுதி வரும் தொடரின் ஒரு பகுதியாக இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. இறையன்பு அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி. நன்றி வாராந்திரி ராணி.

டிசம்பர் 25 புதிய புத்தக வெளியீடு

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா டிசம்பர் 25 வியாழன் மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் எனது ஐந்து நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. குற்றமுகங்கள் குற்றம் என்பது ஒரு ரகசிய முகமூடி. அதை யார் எப்போது அணிந்து கொள்வார்கள் என்று தெரியாது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைக் காலனிய குற்றப்புனைவுகள் என்று வரையறுக்கலாம். காலனிய ஆட்சியின் போது நடைபெற்ற பல்வேறு குற்றங்களைப் புனைவின் வழியே புதிய கதைகளாக்கியிருக்கிறேன்.

ரயில் கடவுளிடம் ஒரு பிரார்த்தனை

The Most Precious of Cargoes என்ற பிரெஞ்சு அனிமேஷன் திரைப்படம் ஆஷ்விட்ஸ் யூதப் படுகொலையை மையமாகக் கொண்டது. ஆனால் வதைமுகாமின் துயரக் கதையைச் சொல்வதில்லை. முற்றிலும் மாறுபட்ட ஒரு நிகழ்வின் வழியாக யூத வெறுப்பு அந்த நாளில் எப்படி வேரோடியிருந்தது என்பதையும் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கிய இருவரையும் பற்றி விவரிக்கிறது. மரபான தேவதைக் கதையைப் போலத் துவங்கும் திரைப்படம் வரலாற்றின் இருண்டபக்கத்தை ஆராய்கிறது அனிமேஷன் திரைப்படத்தின் மூலம் வரலாற்றையும் அதன் அறியப்படாத உண்மைகளையும் பேச முடியும் …

ரயில் கடவுளிடம் ஒரு பிரார்த்தனை Read More »