admin

நேர்காணல்

ஞாயிறு(05.04.2015) அன்று தி இந்துவில் வெளியான எனது நேர்காணல். இதன் முழுமையான வடிவம் ‘தி இந்து’ சித்திரை மலரில் வெளியாகிறது. நேர்காணல் செய்தவர் கவிஞர் சங்கர ராம சுப்ரமணியன் ••• தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ் உரைநடையிலும் சிறுகதைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். உலக இலக்கியங்கள், சர்வதேசத் திரைப்படம் ஆகியவற்றின் மீது தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உண்டு. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய ‘உப பாண்டவம்’ …

நேர்காணல் Read More »

சிஹாபுதினின் கதைகள்

சமகால மலையாளச் சிறுகதை இலக்கியத்தில் புதியதொரு எழுத்துவகையை உருவாக்கியவர் சிஹாபுதின் பொய்த்தும்கடவு. நாவலாசிரியர், கவிஞர், பத்திரிக்கையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இயக்குனர் எனப் பன்முகப்பட்ட ஆளுமை. இவரது பனிரெண்டு சிறுகதைகளின் தொகுப்பாக யாருக்கும் வேண்டாத கண் வெளியாகியுள்ளது. தினசரி வாழ்க்கையைக் கவிதைகள் கையாளுவது போல உருவகத்தளத்திலோ, அரூபமாக்கியோ, பன்முகப்படுத்தியோ சிறுகதைகளாக உருவாக்குகிறார் சிஹாபுதின். இது ஒருவகை மாய யதார்த்த எழுத்து. ஆனால் கேப்ரியல் கார்சியா மார்க்குவெஸ் வகையிலிருந்து மாறுபட்டது. கவித்துவமான, இந்திய புராணீக மரபிலிருந்து உருவாகி வந்த நீட்சி போன்ற …

சிஹாபுதினின் கதைகள் Read More »

இசையின் வழி

கண்டிப்பான ஆசிரியர்களே மிகச்சிறந்த மாணவர்களை உருவாக்க கூடியவர்கள் என்பார்கள். அதிலும் இசை கற்றுக் கொள்ளும் போது சரியான குரு கிடைத்து விட்டவர்கள் பாக்கியசாலிகள். உலகப்புகழ் பெற்ற இசை மேதையான பீத்தோவனைச் சிறுவயதில் அவரது தந்தை ஒரு நாளைக்குப் பலமணிநேரம் தொடர்ச்சியாக ப்யானோ மற்றும் வயலின் வாசிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவாராம். கால் கடுக்க நின்றபடி வயலின் வாசிக்கும் போது வலி பொறுக்க முடியாமல் பீத்தோவன் அழுதால் பிரம்படி விழும். காரணம் பீத்தோவனை இளம்வயதிலே மேதையாக முன்னிறுத்த வேண்டும் என்ற …

இசையின் வழி Read More »

உனக்கு 34 வயதாகிறது

– சிறுகதை “உனக்கு 34 வயசாச்சி, நினைவிருக்கில்லே“ என்று அப்பா அவளிடம் கேட்டபோது சுகந்தி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். சற்று ஆத்திரத்துடன் தலையைத் திருப்பி அப்பாவை பார்த்து முறைத்தபடியே அதுக்கு என்ன என்று கேட்டாள். அப்பா பேப்பர் படிப்பது போலத் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். அது ஒரு தந்திரம், சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயல். அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்பதால் அப்பாவோடு சண்டை போட அவளுக்கு விருப்பமில்லை, ஒய்வு நாளாக இருந்தால் நிச்சயம் இது சண்டையில் தான் போய் முடிந்திருக்கும். …

உனக்கு 34 வயதாகிறது Read More »

காதலின் சங்கீதம்

வாங் கார் வாயின் IN THE MOOD FOR LOVE படத்தில் இடம் பெற்றுள்ள Yumeji’s theme கேட்டிருக்கிறீர்களா. காதலைக் கொண்டாடும் மிகச்சிறந்த பின்னணி இசைக் கோர்வை. மனம் சலித்துப்போகும் நேரமெல்லாம் இதை திரும்பத் திரும்ப கேட்கிறேன். வாங் கார் வாயின் “IN THE MOOD FOR LOVE ஆசிய சினிமாவின் சாதனை. ஹாங்காங்கில் 1960களில் நடைபெறுகிற மாறுபட்ட காதல் கதை. ஒளிப்பதிவாளர் Christopher Doyle, வண்ணங்களை பயன்படுத்தும் வித்திலும் காட்சிக்கோணங்களிலும் புதியதொரு அனுபவத்தை உருவாக்கி தருகிறார், …

காதலின் சங்கீதம் Read More »

செகாவ் வாழ்கிறார்

“இந்த பூமியில் மனிதனுக்குத் தேவை ஏழடி நிலம் தான்“ “இல்லை, சவத்திற்குத் தான் ஏழடி நிலம் வேண்டும், மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது“ எனத் தனது குறிப்பேடு ஒன்றில் செகாவ் கூறுகிறார். இந்தக் குறிப்பை வாசிக்கும் போதெல்லாம் மனது மிகுந்த கிளர்ச்சி அடைகிறது. டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதை How Much Land Does A Man Need , இதில் ஆறு அல்லது ஏழு அடி தான் ஒரு மனிதனுக்குக் கடைசியில் தேவை என்பதை டால்ஸ்டாய் வலியுறுத்துகிறார். …

செகாவ் வாழ்கிறார் Read More »

ராதிகா சாந்தவனம்

கவிஞர் முத்துபழனியின் ராதிகா சாந்தவனம் படித்துக் கொண்டிருக்கிறேன். 584 பாடல்களைக் கொண்ட “ராதிகா சாந்தவனம்” சந்தியா முல்சந்தானியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Appeasement of Radhika” என்னும் நூலாகப் பென்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதன் சில கவிதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, அவற்றை இணையத்திலும் சிற்றிதழ்களிலும் வாசித்திருக்கிறேன். ஆனால் முழு நூலும் மொழியாக்கம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. முத்துப்பழனி (1730-1790) தஞ்சையை ஆண்ட பிரதாபசிங்க மன்னரின் அரண்மனையில் தேவதாசியாக இருந்தவர். இவர் தெலுங்கில் எழுதிய ‘ராதிகா சாந்தவனம்’ ஒரு சிருங்காரக் …

ராதிகா சாந்தவனம் Read More »

இணையத்தில் தமிழ்

அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவர்  தனது குழந்தைகள் தமிழ் கற்பதற்கும், தமிழ் இலக்கியம் சார்ந்த முக்கிய இணையதளங்கள், மின்புத்தகங்கள் குறித்தும் தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அனுப்பிய தகவல்களை இங்கேயும் பகிர்ந்துள்ளேள் தமிழ் கற்க University of Pennsylvania’s Website for Learning and Teaching Tamil https://ccat.sas.upenn.edu/plc/tamilweb/ தமிழ் கற்போம் https://www.youtube.com/playlist?list=PL0F1C7C9E9E75626E https://www.youtube.com/playlist?list=PL41DA461A06758121 https://www.southasia.sas.upenn.edu/tamil/les.html https://www.digitaldialects.com/Tamil.htm தமிழ் கற்போம் மென்பொருள் https://ccat.sas.upenn.edu/plc/tamilweb/software/tamila2z.html தமிழ் கற்போம் புத்தகம் www.tamilvu.org/coresite/download/ABC_Tamil.pdf நல்ல தமிழ் அறிவோம் https://www.youtube.com/playlist?list=PL47kBp0-hhovn0kvUtibNQq2eotokcGsf *** குழந்தைகள் கதைகள் …

இணையத்தில் தமிழ் Read More »

வாழ்த்துகள் மணிகண்டன்

கவிஞரும் தீவிர இணையச் செயல்பாட்டாளருமான வா.மணிகண்டன் பெங்களூரு வாசகர் சந்திப்பில் தொடர்ச்சியாகச் சிறுகதைகளை முன்வைத்துக் கூட்டங்களை நடத்திவருகிறார். இந்த முயற்சிக்கு உறுதுணையாக நான் தொகுத்த நூறு சிறந்த சிறுகதைகள் நூலில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து விவாதித்து வருகிறார்கள். 100 சிறந்த சிறுகதைகள் நூலை உருவாக்கும் போது இப்படியான செயல்பாடுகளுக்குத் துணையாக இத் தொகுப்பு அமைய வேண்டும் என்பதே எனது முக்கிய விருப்பமாக இருந்தது அதைச் சாத்தியப்படுத்தியிருக்கும் மணிகண்டனுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் …

வாழ்த்துகள் மணிகண்டன் Read More »