நிமித்தம் விமர்சனம்
– தமிழ்மகன் ‘பொய், விதை இல்லாத தாவரம்’ என்று ஒரு வரி நாவலில் வருகிறது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் முளைக்கக் கூடியது பொய். காது கேளாத ஒருவன் பொய்யைத் துணைக்கு அழைத்துக்கொள்ளும் துயரத்தை விவரிக்கும்போது இப்படிச் சொல்கிறார் ராமகிருஷ்ணன். ஒருவன் எதன் பொருட்டோ வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள பொய்யைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நிரந்தரமின்மை தருகிற அச்சம்தான் பொய்யின் வேர். மனக்குறைபாடுகளும் உடற்குறைபாடுகளும் ஏற்படுத்துகிற அவநம்பிக்கை பலருக்கு இப்படியான அச்சத்தைத்தான் வளர்க்கிறது. தேவராஜ் என்ற காதுகேளாத முதிர் இளைஞனின் திருமண …