admin

நிமித்தம் விமர்சனம்

– தமிழ்மகன் ‘பொய், விதை இல்லாத தாவரம்’ என்று ஒரு வரி நாவலில் வருகிறது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் முளைக்கக் கூடியது பொய். காது கேளாத ஒருவன் பொய்யைத் துணைக்கு அழைத்துக்கொள்ளும் துயரத்தை விவரிக்கும்போது இப்படிச் சொல்கிறார் ராமகிருஷ்ணன். ஒருவன் எதன் பொருட்டோ வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள பொய்யைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நிரந்தரமின்மை தருகிற அச்சம்தான் பொய்யின் வேர். மனக்குறைபாடுகளும் உடற்குறைபாடுகளும் ஏற்படுத்துகிற அவநம்பிக்கை பலருக்கு இப்படியான அச்சத்தைத்தான் வளர்க்கிறது. தேவராஜ் என்ற காதுகேளாத முதிர் இளைஞனின் திருமண …

நிமித்தம் விமர்சனம் Read More »

உயர்த்திப் பிடித்த வெளிச்சம்

ஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என அறிந்த மறுகணம் அவர் வீட்டில் இருந்தேன். கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை. அவரது உடலே கிடத்தப்பட்டிருந்தது. அந்த மௌனம், பெரும் துக்கத்தை உருவாக்கியது. தாங்க முடியாத மனவலியோடு அவரது வீட்டு வாசலில் இரவெல்லாம் அமர்ந்திருந்தேன். சலனமற்ற நீண்ட இரவு. நினைவுகள் கொப்பளிக்கின்றன. ஜே.கே. வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். மனம் அதில் ஒன்றமுடியாமல் தத்தளித்தது. இந்த இழப்பு எளிதானது அல்ல. எத்தனையோ வாசகர்களைப்போல நானும் அவரது வாசகன். அவர் …

உயர்த்திப் பிடித்த வெளிச்சம் Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 5

பந்தயம் – ஆன்டன் செகாவ் . சிறுகதை. தமிழில்: பாஸ்கரன் இலையுதிர் காலத்தில் ஒருநாள் இரவு;  லேவாதேவி செய்துகொண்டிருந்த கிழவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதே இலையுதிர்காலத்தில், தாம் அளித்த விருந்தை எண்ணியவாறே படிப்பு அறையில் ஒரு மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு உலவிக் கொண்டிருந்தார். அந்த விருந்தில் பல அறிஞர்கள் கலந்து கொண்டனர். ருசிகரமான விவாதங்கள் நடந்தன. பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண் டிருக்கையில், மரண தண்டனையைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. விருந்தினர்களில் படித்தவர்களும் பத்திரிகைக்காரர்களும் …

எனக்குப் பிடித்த கதைகள் 5 Read More »

ஒளியிலே தெரிவது

To collect photographs is to collect the world.  Photographs really are experience captured, and the camera is the ideal arm of consciousness in its acquisitive mood. – Susan Sontag ஆனி லெய்போவிட்ச் அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண் புகைப்படக்கலைஞர். நாற்பது வருஷங்களுக்கும் மேலாகப் புகைப்படக்கலையில் தீவிரமாக இயங்கி வரும் அவரைப்பற்றி Annie Leibovitz: Life Through a Lens என்ற ஆவணப்படம் ஒன்றினை பார்த்தேன், இந்த ஆவணப்படம் …

ஒளியிலே தெரிவது Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 4

மணல் புத்தகம்-சிறுகதை : போர்ஹேஸ் தமிழில் : க.செண்பகநாதன் …… மணலைக் கயிறாகத் திரித்து ….. (-ஜார்ஜ் ஹெர்பர்ட் – 1593-1623) கணக்கிலடங்காத புள்ளிகளை ஒருங்கே கொண்டது ஒரு கோடு; எண்ணிக்கையற்ற பல கோடுகளை கொண்டது ஒரு சமவெளி; கணக்கிலடங்கா சமவெளிகள் ஒரு கண பரிமாணம்; எண்ணற்ற கணபரிமாணங்கள் பெருத்த அதிகனமான பரிமாணமாகும்…. இவ்வாறாக கூறுவது சரியானதல்ல – இது நிலவியல் கணக்கைப் போல் இருப்பதால் கதையை கூறுவதற்கு உகந்த முறையல்ல. கற்பனைக் கதையே மெய்யான கதையென்ற …

எனக்குப் பிடித்த கதைகள் 4 Read More »

எனக்குப் பிடித்த கதைகள்- 3

யுத்தம்– லூய்கி பிரண்ட்லோ (luigi pirandello) தமிழில் நிருத்தன் ரோமிலிருந்து இரவு நேர பெரு ரயிலில் புறப்பட்டவர்கள் இந்த பழைய ஃபாப்ரியனோ புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கி, சல்மோனாவுக்கு அந்த பழங்கால இணைப்பு ரயில் பெட்டியில் விடியல்வரை – பயணத்தை தொடர காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த விடியலில், புகை அப்பி நெடி அடிக்கும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் – ஏற்கனவே ஐந்துபேர் தங்கள் இரவை கழித்து இருந்த அந்த கம்பார்ட்மெண்டில் துக்கம் அனுஷ்டித்தபடிவந்த அந்த …

எனக்குப் பிடித்த கதைகள்- 3 Read More »

பிறந்த நாள்

இன்று (13.04.2015) எனது பிறந்த நாள். தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்துகளைத் தெரிவித்த எழுத்தாளர்கள், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி. ••

எனக்குப் பிடித்த கதைகள் 2

பூங்காக்களின் தொடர்ச்சி ஹுலியோ கொர்த்தஸார்              மொழிபெயர்ப்பு: ராஜகோபால் சிலநாட்களுக்கு முன்புதான் அவன் அந்த நாவலைப் படிக்கத் தொடங்கினான். அவசர வியாபாரச் சந்திப்புகளின் நிமித்தம் அதை அவன் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. அவனுடைய எஸ்டேட்டிற்குத் திரும்பும் வழியில் ரயிலில், அதை அவன் மீண்டும் திறந்தான். கதை நிகழ்வில், கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் மெதுவாக ஆர்வம் வளார்வதற்குத் தன்னை அனுமதித்துக் கொண்டான். பிற்பகலில், அவன் சார்பாகச் செயலாற்றும் அதிகாரத்தை வழங்கும் ஒரு கடிதத்தை …

எனக்குப் பிடித்த கதைகள் 2 Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 1

பால்மணம் ஜப்பானியச் சிறுகதை எழுதியவர்- அகுடாகாவா[ RYUNOSUKE  AKUTAGAWA] தமிழாக்கம்: கவிஞர் வைதீஸ்வரன் ஷின்சுகே பிறந்ததிலிருந்து தாய்ப்பாலைச் சுவைத்ததேயில்லை. அவன் பிறந்ததிலிருந்தே அவன் தாய் மிகவும்   பலஹீனமானவளாக  பால்சுரப்பில்லாமல் இருந்தாள். குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக செவிலித்தாயை ஏற்பாடு செய்யவேண்டுமென்றால் அதற்குப் பணம் தேவையாக இருந்தது. அவளுக்கு அவ்வளவு   வசதியில்லை. ஆகை யால் ஷின்சுகே பசும்பால் குடித்துத்தான் வளரவேண்டியிருந்தது.  இப்படி தாய்ப்பால் சுவையறியாமல் வளர்ந்த குழந்தைப் பருவத்தை  நினைத்து  அவன் எப்போதும் சபித்துக் கொள்ளாமல் இருந்ததே யில்லை தினமும் …

எனக்குப் பிடித்த கதைகள் 1 Read More »