admin

தூண்டில்

நேற்றிரவு ஒரு கனவு வந்தது, அதில் ஒரு கண்மாய். கரையில் தூண்டிலை வைத்தபடியே மீன்பிடிப்பதற்காகக் காத்திருக்கிறேன், பள்ளிவயதில் நான் வழக்கமாக மீன்பிடிக்கப்போகும் கண்மாய் அது. கரை முழுவதும் புளியமரங்கள், மழை பெய்து கண்மாய் நிரம்பியிருக்கிறது. அசைந்து கொண்டிருக்கும் தக்கையைப் பார்த்தபடியே கரையில் உட்கார்ந்திருக்கிறேன், அந்த இடத்தில் என்னைத் தவிர யாருமேயில்லை. தண்ணீரின் மீது வெயில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. தூண்டிலை மீன் கடித்து இழுக்கிறது. தக்கை இழுபட்டு நகர்கிறது, மீன் நன்றாகக் கடிக்கட்டும் என நரம்பு கயிறை நழுவவிடுகிறேன், …

தூண்டில் Read More »

நிமித்தம் – விருது

எனது நிமித்தம் நாவலுக்கு `மாசிலா விஜயா பரிசு` கிடைத்துள்ளது. ரூபாய் பத்தாயிரம் பணமும் பாராட்டு பத்திரமும் இதற்காக அளிக்கபடுகிறது இவ்விருதை உருவாக்கியிருப்பவர் சவுதி அரேபியாவில் பணியாற்றும் டாக்டர் வ. மாசிலாமணி மற்றும் தென்றல் குடும்பத்தினர். இலக்கியம், அறிவியல், சமூகசேவை ஆகிய மூன்று துறையைச் சேர்ந்தவர்களுக்கு இவ்விருது வழங்கபடுகிறது. இந்த ஆண்டு முதல் இவ்விருது உருவாக்கபட்டுள்ளது. •••

காற்றடித்த யானை.

உருவகக்கதைகள் தமிழில் குறைவாகவே எழுதப்பட்டுள்ளன. உலக இலக்கியத்தில் இவை தனி வகைமையாகக் கருதப்படுகின்றன, குறுங்கதைகளை எழுதியவர்களில் மிரோஜெக், ஹென்ரிச் ப்யூல். யாசுனாரி கவாபதா, போர்ஹே, பார்த்தல்மே போன்றோர் முக்கியமானவர்கள். உருவக்கதைகளில் முக்கியமான படைப்பாக ஸ்லவொமிர் மிரோஜெக்கின் யானை கருதப்படுகிறது. இக்கதை தமிழில் நடை இதழில் வெளியாகி உள்ளது. ஸ்லவொமிர் மிரோஜெக். போலந்தின் முக்கியமான நாடக ஆசிரியர். அவரது நடுக்கடலில் (Out at Sea)என்ற நாடகம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு நாடகவெளி இதழில் வெளியாகியிருக்கிறது. மிரோஜெக்கின் இரண்டு குறுங்கதைகளைப் …

காற்றடித்த யானை. Read More »

ஒவியங்களும் புகைப்படங்களும்

இளம்புகைப்படக்கலைஞர்களுக்காக உலகப்புகழ்பெற்ற ஒவியங்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்த உரை ஒன்றினை சனிக்கிழமை (26/07/2014) காலை கே.கே.நகரில் உள்ள சாதனா நாலெட்ஜ் பார்க்கில் நிகழ்த்தினேன். இந்த நிகழ்விற்காகத் தமிழகம் முழுவதுமிருந்து 30 புகைப்படக்கலைஞர்கள் வந்திருந்தார்கள். எனது நண்பர்கள் புகைப்படக்கலைஞர் பிரபு காளிதாஸ், விகடன் பொன்காசி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக நண்பர் ஞாநி வருகை தந்தார். மும்பையில் வசிக்கும் புகைப்படக்கலைஞரான ஜெய்சிங் தனது நண்பர்களுடன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். ஒரு மணி நேர உரையும் அதைத்தொடர்ந்த …

ஒவியங்களும் புகைப்படங்களும் Read More »

மௌனியோடு ஒரு மாலை

நேற்று  மௌனி குறித்து எழுத்தாளர் கி. அ. சச்சிதானந்தம் நிகழ்த்திய உரை கேட்பதற்காகப் போயிருந்தேன். அழகியசிங்கர் கோவிந்தராஜன் இருவரும் இணைந்து விருட்சம் சார்பில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். கூட்டம் கேட்க பதினைந்து பேர் வந்திருந்தார்கள். அதில் சரிபாதி எழுத்தாளர்கள். எழுத்தாளர் இரா.முருகன். திரைப்பட இயக்குனர் அம்ஷன்குமார், ராஜ்கமல் கண்ணன், சிறகு ரவிச்சந்திரன், ராஜகோபால் முதலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மௌனியின் மகள் ஞானம், தனது கணவருடன்  கூட்டத்தில் கலந்து கொண்டார், நிகழ்வின் இறுதியில் ஞானம் தன் தந்தையைப் …

மௌனியோடு ஒரு மாலை Read More »

சாமுராயும் கதை சொல்லியும்

நெடுங்காலத்தின் முன்பு நாடோடியாகச் சுற்றிக் கதை சொல்வதில் தேர்ந்த கதை சொல்லி ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள்   தனது பயண வழியில் மிகுந்த பசியை அடைந்தார். சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அருகில் சாமுராய்களுக்கான பயிற்சிக்கூடம் ஒன்றிருப்பதை அறிந்து அங்கே சென்றார். சாமுராய்களின் பயிற்சிக்கூடத்தில் உணவும், தங்குமிடமும் வேண்டுமென்றால் அங்கேயுள்ள யாராவது ஒருவருடன் சண்டை போட வேண்டும் என்பது விதி கதைசொல்லி அந்தப் பயிற்சிக்கூடத்திற்குள் போய்த் தான் சண்டை போட வந்துள்ளதாகக் கூறினார் யாருடன் சண்டை போடப்போகிறீர்கள் …

சாமுராயும் கதை சொல்லியும் Read More »

இந்தியாவிற்கு இடமில்லை

உலகக் கால்பந்து போட்டிகள் ஏற்படுத்திய உற்சாகத்தில்  ஒரு இணையவிளம்பரம் சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது.தேடிப்படிக்க வேண்டிய பட்டியலிது. ஒரே வருத்தம் இந்தப் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஒரு நாவல் கூட இடம்பெறவில்லை. 1.            BRAZIL                                  BUDAPEST – CHICO BUARQUE 2.            CHILE                                    BY NIGHT IN CHILE – ROBERTO BOLANO 3.            COLUMBIA                         MEMORIES OF MELANCHOLY WHORES – GABRIEL GARCÍA MÁRQUEZ 4.            JAPAN                                  1Q84 – HARUKI MURAKAMI 5.            ITALY   …

இந்தியாவிற்கு இடமில்லை Read More »

வால் ஆட்டாத நாய்

பஞ்ச கல்யாணி என்றொரு படம் 1979ல் வெளியாகி வசூலை அள்ளி குவித்தது. படம் ஒடிய நாட்களில் அதில் நடித்த கழுதையைத் தியேட்டர் தியேட்டராக அழைத்துக் கொண்டு போய்க் காட்டிக் கொண்டாடினார்கள்.அக்கழுதையைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் கூட்டம், தள்ளுமுள்ளு. நிறையப் பேர் அதனோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.அதன்பிறகு அக்கழுதை வேறு திரைப்படங்களில் நடிக்கவுமில்லை, யாரும் அதைக் கண்டுகொள்ளவும் இல்லை. என்ன ஆகியிருக்கும் அதன் வாழ்க்கை. ஆட்டுக்கார அலமேலுவில் நடித்த ஆடு தன் நட்சத்திர அந்தஸ்தை என்ன செய்திருக்கும். அந்த ஆடு …

வால் ஆட்டாத நாய் Read More »

எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள்

சிறப்பு மிக்க எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்களைத் திரையிடும் நிகழ்வினை சாகித்ய அகாதமி  ஏற்பாடு செய்துள்ளது வருகின்ற ஜுலை 27  ஞாயிறு காலை முதல் மாலை வரை சென்னை அண்ணாசாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது இந்தத் திரையிடலில் ஜெயகாந்தன். சுனில் கங்கோபாத்தியாய, மஹா சுவேதாதேவி, வைக்கம் முகமது பஷீர். கமலா தாஸ், இந்திரா பார்த்தசாரதி ஆகிய ஆறு முக்கிய எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் இடம்பெறுகின்றன. நிகழ்விற்கு கே.சீனிவாச ராவ் வரவேற்புரை வழங்குகிறார். கி.நாச்சிமுத்து தலைமை …

எழுத்தாளர்களின் ஆவணப்படங்கள் Read More »