தூண்டில்
நேற்றிரவு ஒரு கனவு வந்தது, அதில் ஒரு கண்மாய். கரையில் தூண்டிலை வைத்தபடியே மீன்பிடிப்பதற்காகக் காத்திருக்கிறேன், பள்ளிவயதில் நான் வழக்கமாக மீன்பிடிக்கப்போகும் கண்மாய் அது. கரை முழுவதும் புளியமரங்கள், மழை பெய்து கண்மாய் நிரம்பியிருக்கிறது. அசைந்து கொண்டிருக்கும் தக்கையைப் பார்த்தபடியே கரையில் உட்கார்ந்திருக்கிறேன், அந்த இடத்தில் என்னைத் தவிர யாருமேயில்லை. தண்ணீரின் மீது வெயில் ஊர்ந்து கொண்டிருக்கிறது. தூண்டிலை மீன் கடித்து இழுக்கிறது. தக்கை இழுபட்டு நகர்கிறது, மீன் நன்றாகக் கடிக்கட்டும் என நரம்பு கயிறை நழுவவிடுகிறேன், …