admin

தமிழ் இலக்கிய விருது

திருச்சி சமயபுரத்திலுள்ள எஸ்.ஆர்.வி. பள்ளி, சிறந்த எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், சமூக சேவை செய்யும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் விதமாக வாழ்நாள் தமிழ் விருது, தமிழ் இலக்கிய விருது, சமநோக்கு விருது, படைப்பூக்க விருது என நான்கு விதமான விருதுகளை அளித்துவருகிறார்கள். இந்த ஆண்டிற்கான தமிழ் இலக்கிய விருது எனக்கு அளிக்கபடுவதாக எஸ். ஆர். வி. பள்ளி அறிவித்திருக்கிறது. இந்த விருதினை எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன் , வண்ணநிலவன் ஆகியோர் கடந்த காலங்களில் பெற்றிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் அசோகமித்ரன். எஸ். …

தமிழ் இலக்கிய விருது Read More »

புத்தக வெளியீட்டு விழாவில்

மதுரையில் நடைபெற்ற எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த தஞ்சை பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலை. தோழர் எஸ். ஏ. பெருமாள். எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித். கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், எழுத்தாளர் எஸ்வி வேணுகோபால். டாக்டர் வெங்கடாசலம், எழுத்தாளர் ஷாஜகான், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், ஆகியோருக்கும், உயிர்மை பதிப்பகத்திற்கும், நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும், செல்விக்கும், தொகுத்து வழங்கிய கவிஞர் ஆத்மார்த்திக்கும், , வருகை தந்த வாசகர்கள், நண்பர்கள் …

புத்தக வெளியீட்டு விழாவில் Read More »

காஃப்கா எழுதாத கடிதம்

காஃப்கா எழுதாத கடிதம் என்ற எனது கட்டுரைகளின் தொகுப்பு ஆகஸ்ட் 30 மாலை ஆறுமணிக்கு மதுரை தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள நார்த்கேட் ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளது. உயிர்மை பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது. காஃப்கா எழுதாத கடிதம் கட்டுரைத்தொகுப்பில் 28 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெர்மென் மெல்வில், தோரோ, ஹெர்மன் ஹெஸ்ஸே, ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க், மிரோஜெக், ரேமண்ட் கார்வர், விளாதிமிர் மெக்ரே ,வியோலெட் லெடுக், செல்மா லாகர்லெவ். …

காஃப்கா எழுதாத கடிதம் Read More »

நீரிலும் நடக்கலாம்

ஆகஸ்ட் 30 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு மதுரை தமுக்கம் மைதானம் எதிரில் உள்ள நார்த்கேட் ஹோட்டலில் எனது புதிய சிறுகதை தொகுதி வெளியிடப்படவுள்ளது. உயிர்மை பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது. நீரிலும் நடக்கலாம் என்ற இந்தச் சிறுகதைத்தொகுப்பில் பதினைந்து கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 1.            ஆண் மழை 2.            கற்பனைச் சேவல் 3.            நீரிலும் நடக்கலாம். 4.            அவளது வீடு 5.            செகாவின் விருந்தாளி 6.            தனலட்சுமியின் துப்பாக்கி 7.            பதினாறு டயரிகள் 8.            எம்பாவாய் 9.            ஒரு …

நீரிலும் நடக்கலாம் Read More »

வாழ்த்துகள் சீனிவாசன்

பிரண்டலைன் இதழ் சென்னை375 யைக் கொண்டாட சிறப்பிதழ் ஒன்றினை வெளியிட்டுள்ளது. சென்னை நகரின் வரலாற்றை அழகான கறுப்பு வெள்ளை புகைப்படங்களுடன், அறியப்படாத தகவல்களுடன் அற்புதமாகத் தயாரித்திருக்கிறார்கள். அசோகமித்ரன், தியோடர் பாஸ்கரன், எஸ்.முத்தையா. டி.எஸ்.சுப்ரமணியன், வி.ஸ்ரீராம் ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதன் அட்டை வடிவமைப்பையும், உள்ளோவியங்களையும் நண்பர் சீனிவாசன் நேர்த்தியாக வரைந்திருக்கிறார். சிறப்பிதழ் ஆசிரியர் விஜயசங்கருக்கும்,சிறப்பான ஒவியங்களைத் தந்த சீனிவாசனுக்கும் எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள். ••

‘சொந்தக்குரல்’ சிறுகதை பற்றிய என் குரல்

பிச்சினிக்காடு இளங்கோ நாள்தோறும் கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும், கவிதையில் சிந்தித்துக்கொண்டிருந்தாலும் என்னுடைய வாசிப்பு இப்போது சிறுகதைகள் பக்கம் திருப்பப்பட்டிருக்கிறது. அப்படியொரு கட்டாயத்தை நானே எனக்கு உருவாக்கிகொண்டேன்.நூல்களைப்படித்த விவரங்களைக் குறித்துவந்திருப்பதுபோல், படித்த சிறுகதைகளைப்பற்றிய விவரங்களையும்கூட குறித்துவைத்திருக்கிறேன்.நினைவில் வைத்துச்சொல்வதற்கு கைவசம் ஒரு சிறுகதைகூட இல்லை. ஆனால்,என்னுடைய கதைகளைத்தான் சொல்லமுடியும். காரணம் அவை என்னுடைய கதைகள். நினைவிலிருந்து நழுவும் நிலை கதைகளுக்கு ஏற்படுவதால் அதைத் தவிர்க்கவே உடனடியாக இப்படிப்பதிவுசெய்கிறேன். அப்படித்தான் ஒரு சிறுகதை வாசிப்பாளனாக என்னை நிலைநிறுத்துகிறேன். அண்மையில் சிங்கப்பூர் கிளிமண்டி நூலகத்தில் …

‘சொந்தக்குரல்’ சிறுகதை பற்றிய என் குரல் Read More »

அறிவிப்புகள்

எனது நாவல் யாமம் தெலுங்கில் வெளியாகி உள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பாலாஜி. •• சென்னை வீக் எண்ட் கிளிக்கர்ஸ் நடத்தும் புகைப்படக்கண்காட்சி ஆகஸ்ட் 25 முதல் 31 வரை லலித் கலா அகாதமியில் நடைபெற உள்ளது. அதில் ஆகஸ்ட் 25 மாலை 5.30 மணிக்கு புகைப்படநூலை வெளியிடுகிறேன், அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது. •• ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5 காலை 10.30 மணிக்குத் திருச்சி St. Joseph’s College ல் …

அறிவிப்புகள் Read More »

அஞ்சலி

எனதருமை நண்பரும் நான் சென்னையில் வாழ்வைத் துவங்குவதற்குக் காரணமாக இருந்தவருமான இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் மகன் பாலகைலாசம் ஆகஸ்ட் 15 அன்று காலமானார். உடல்நலக்குறைவின் காரணமாக அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்ற சேதி கேள்விபட்ட நாளில் இருந்தே காண வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தேன், ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அவரது மரணம் என்னை நிலை குலையச்செய்துவிட்டது. அழுதுவீங்கிய கண்களுடன் வீட்டில் முடங்கிக்கிடந்தேன். என்னால் நண்பர்களின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது. சொல்லவும் முடியாமல் மீளவும் முடியாமல் …

அஞ்சலி Read More »

மதுரையில் புத்தக வெளியீடு

மதுரை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எனது இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 30 சனிக்கிழமை அன்று மாலை மதுரையில் நடைபெற உள்ளது இடம் : நார்த்கேட் ஹோட்டல், மதுரை. (தமுக்கம் மைதானம் எதிரில்) நேரம் : மாலை ஆறுமணி நாள்  : 30.08.2014 *** நீரிலும் நடக்கலாம் எனது சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு, பதினாறு சிறுகதைகளை உள்ளடக்கியது •• காஃப்கா எழுதாத கடிதம் காஃப்கா, வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ழான் காக்தூ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், …

மதுரையில் புத்தக வெளியீடு Read More »