admin

பாலை மலர்

Desert flower  என்ற ஜெர்மன் திரைப்படத்தை இன்று பார்த்தேன், Waris Dirie  என்ற உலகப்புகழ்பெற்ற விளம்பர மாடலின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கியிருக்கிறார்கள். வாரிஸ் சோமாலியாவைச் சேர்ந்தவர், படத்தின் துவக்கத்தில் ஆடு மேய்க்கிற ஒரு சிறுமியாக அறிமுகமாகிறார் வாரிஸ். ஆட்டுக் குட்டியை தோளில் சுமந்தபடியே அவர் பரந்த நிலப்பரப்பை கடந்து போகும் முதற்காட்சியிலே படம் நம்மை உள் இழுத்துவிடுகிறது. ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் குரூர சடங்கான பெண்உறுப்பின் கந்து முனையை வெட்டி அகற்றி விடும் கொடுமைக்கு வாரீஸ் உள்ளாகிறார். …

பாலை மலர் Read More »

இலக்கிய இதழ்

புகழ் பெற்ற கலை இலக்கிய இதழான Journal of Arts and Ideas யின் பழைய இதழ்கள் ஆன்லைனில் வாசிக்க கிடைக்கின்றன. https://dsal.uchicago.edu/books/artsandideas/ 1983ம் ஆண்டு Journal of Arts and Ideas வெளியிட்ட மார்க்வெஸ் சிறப்பிதழ் அற்புதமானது. அதில் Writers’ Kitchen: An Interview with Marquez என்ற விரிவான நேர்காணல் உள்ளது. அது தான் நான் வாசித்த மார்க்வெஸின் முதல்நேர்காணல். முக்கியமான நேர்காணல்களில் இதுவும் ஒன்று. https://dsal.uchicago.edu/books/artsandideas/toc.html?issue=2

யாமம் பிரெஞ்சில்

எனது யாமம் நாவலை பிரெஞ்சில் வெளியிடுவதற்கு அங்குள்ள மிக முக்கிய பதிப்பகம் ஒன்று உரிமை கேட்டுள்ளது. பத்து இந்திய எழுத்தாளர்களின் நாவல்கள் பிரெஞ்சில் வெளிவர உள்ளன, அதில் ஒன்றாக யாமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்குள் அதன் மொழியாக்க பணிகள் நடைபெற்று 2015 இறுதியில் பிரெஞ்சில் வெளியாகயுள்ளது •••

விளக்கு விருது

நண்பர் கோணங்கிக்கு விளக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது சந்தோஷம் தருகிறது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்

புலியின் முன்னால் மன்றாடுகிறவன்

(இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லி மிருகக்காட்சி சாலையில் ஒரு மனிதனை புலி அடித்துக் கொன்றுவிட்டது, அந்த சம்பவத்தைக் காணொளியாக ஒரு நண்பர் அனுப்பி பார்க்கச் சொல்லியிருந்தார். நேற்று காலை அதைப் பார்த்த நிமிசத்தில் மனது பாரம் கொண்டுவிட்டது. அப்புலியின் முன்னால் நான் நிற்பதை போலவே உணர்ந்தேன். அந்த மனிதன் புலியின் முன்னால் உயிருக்கு மன்றாடும் காட்சி கண்ணீரை வரவழைத்தது,  அது குறித்த பதிவிது) •••••• அந்த மனிதனின் பெயர் புலிக்குத் தெரியாது, அவன் ஒரு மனிதன், அது …

புலியின் முன்னால் மன்றாடுகிறவன் Read More »

விருட்சம் பரிசு

நவீன விருட்சம் இலக்கிய இதழ் சார்பாக ஒவ்வொரு மாதமும் தமிழில் வெளியாகிற சிறுகதைகளிலிருந்து சிறந்த ஒன்றினைத் தேர்வு செய்து பரிசு வழங்கி வருகிறார் எழுத்தாளர் அழகியசிங்கர். சென்ற மாதத்தின் சிறந்த கதையாக நான் எழுதிய எம்பாவாய் சிறுகதை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இக்கதை உயிர்மை இதழில் வெளியாகி வாசகர்களின் மிகுந்த பாராட்டினைப் பெற்றது. •••

வீடில்லாத புத்தகங்கள்

தி இந்துவில் வியாழன் தோறும் வீடில்லாத புத்தகங்கள் என்ற தலைப்பில் ஒரு பத்தி எழுதுகிறேன். இன்று முதல் அந்தப் பத்தி துவங்குகிறது. இணைப்பு : https://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/article6421560.ece?homepage=true

முரகாமியின் தனிமை

‘கார்டியன்’ இதழில் வெளியாகியுள்ள முரகாமியின் நேர்காணலில் இரண்டு விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. ஒன்று எவ்வளவு காலத்திற்கு இலக்கியம் வாசிக்கபடும் என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் 5 சதவீதம் பேரே தீவிரமாகப் புத்தகம் படிப்பவர்கள், அவர்கள் டிவியில் உலகப்கோப்பை போட்டிகளோ, சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்கள், ஒருவேளை புத்தகம் படிப்பதே தடைசெய்யப்பட்டால் கூட அவர்கள் காட்டிற்குள் சென்று தாங்கள் படித்த புத்தகங்களை நினைவு கொண்டபடியிருப்பார்கள், அவர்கள் மீது நம்பிக்கை வைத்தே …

முரகாமியின் தனிமை Read More »

நிகழ்வுகள்

சென்னை அண்ணாநகரில் எழுத்தாளர் தமிழ்மகன் நடத்தும் பொக்கிஷம் புத்தகக் கடையில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நாகிப் மாஃபஸ் எழுதிய அரேபிய இரவுகளும் பகல்களும் நாவல் குறித்து உரையாற்றினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். நாவல்குறித்து வாசகர்களின் கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது. மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் நிகழ்வில் கலந்து கொண்டு தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். டிஸ்கவரி புக் பேலஸ், பனுவல், அகநாழிகை, பொக்கிஷம் என சென்னையில் உள்ள புத்தக கடைகள் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளை நடத்திவருவது …

நிகழ்வுகள் Read More »

கனவினைப்பின் தொடர்ந்து

கனவினைப்பின் தொடர்ந்து என்ற குழந்தைகளுக்கான சரித்திர நூலை வாசித்தேன். த.வெ.பத்மா எழுதிய The Forbidden Temple: Stories from the Past நூலை எழுத்தாளர் ஜே. ஷாஜஹான் மொழியாக்கம் செய்திருக்கிறார். எதிர் வெளியீடாக வெளியாகியுள்ளது அமெரிக்காவில் வசிக்கும் த.வெ.பத்மா கணிதம் மற்றும் வரலாறு சார்ந்து குழந்தைகளுக்கான புத்தகங்களை தொடர்ந்து எழுதிவருகிறார்.  இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவரது MATHEMATWIST: number tales from around the world கணிதம் குறித்த சுவாரஸ்யமான கதைகளின் தொகைநூலாகும். கற்காலத்தில் குழந்தைகள் …

கனவினைப்பின் தொடர்ந்து Read More »