admin

வாழ்த்துக்கள்

சுந்தர ராமசாமி விருது பெற்ற கவிஞர் இசைக்கும் ராஜமார்த்தாண்டன் விருது பெற்ற கவிஞர் போகன் சங்கருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இருவரின் கவிதைகளையும் நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.  எளிமையும், இயல்பான பகடியும், புதிய கவிமொழியும் கொண்ட இவர்கள் சமகால வாழ்வியலில் இருந்தே தங்களின் கவிதைகளை உருவாக்குகிறார்கள். போலி மயக்கங்களோ, மொழித்திருகல்களோ, பாவனையான தத்துவப் புலம்பல்களோ, வறட்டு உபதேசங்களோ இவர்களிடம் கிடையாது. இசையின் கவிதைகளை கலாப்ரியாவின் தொடர்ச்சியாகவே கருதுகிறேன். போகன் சங்கரின் உரைநடையும் மிகுந்த கவித்துவமாகவே இருக்கிறது.  சமீபத்தில் …

வாழ்த்துக்கள் Read More »

அறிவிப்புகள்

தினகரன் தீபாவளி மலரில் எனது சிறுகதை வெளியாகியுள்ளது தி ஹிந்து தீபாவளி மலரில் காமிக்ஸ் குறித்த எனது கட்டுரை வெளியாகியுள்ளது வீடில்லாப் புத்தகங்கள் என்ற தலைப்பில் நான் எழுதும் பத்தி தி ஹிந்து நாளிதழில் வாரம் தோறும் வியாழக்கிழமை வெளியாகிறது வீடில்லாப் புத்தகங்கள் இணைப்பு https://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6505222.ece?widget-art=four-rel

நிலா பார்ப்பவர்கள்

ஜெர்மானிய ஒவியரான காஸ்பர் டேவிட் பிரெடரிக் (Caspar David Friedrich) வரைந்த Two Men Contemplating the Moon என்ற ஒவியம் மிகவும் பிரபலமானது, இந்த ஒவியத்தை நியூயார்க் மார்டன் ம்யூசியத்தில் பார்த்திருக்கிறேன். இதே ஒவியத்தின் இரண்டு வேறுபட்ட வடிவங்களைச் சமீபத்தில் இணையத்தில் காண நேர்ந்தது. மூன்று ஒவியங்களையும் ஒருமித்துக் காணும் போது மிகுந்த சந்தோஷமும் மனஎழுச்சியும் உருவானது. நிலா பார்த்தல் என்பது எளிய செயலில்லை, ஆழமான அகத்தூண்டுதல் தரக்கூடியது என்பதை இந்த மூன்று ஒவியங்களும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன …

நிலா பார்ப்பவர்கள் Read More »

டால்ஸ்டாய்

டால்ஸ்டாய் குறித்த இந்த மௌனப்படத்தில் அபூர்வமான தருணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டால்ஸ்டாயின் இறுதிஊர்வலத்தைக் காணும் போது நெகிழ்ச்சியாக உள்ளது. https://youtu.be/oxHr1ku9DGI LEO TOLSTOY on Film

அ.ரெங்கசாமிக்கு விருது

அ.ரெங்கசாமி  மலேசியாவின் மிக முக்கிய எழுத்தாளர். நேதாஜியின் விடுதலைப்போரை முன்வைத்து இமயத்தியாகம் என்ற நாவலையும்,  ஜப்பானியர்கள் மரண ரயில்வே அமைக்கத் தமிழர்களைக்  கொண்டு சென்ற அவலக் கதையை “நினைவுச் சின்னம்” என்னும் நாவலாகவும் எழுதியிருக்கிறார் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கும் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சிக்குமான உள்நாட்டுப்போரில் சிக்கி தவித்த மலேயத் தமிழர்கள் கதையை  “லங்காட் நதிக்கரை” என்னும்  நாவலாக எழுதியிருக்கிறார். வரலாற்றுபிரக்ஞையும் கலைமேதமையும் கொண்ட அவரது படைப்புகள் மிக முக்கியமானவை. அவருக்கு வல்லினம் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. அ. ரெங்கசாமி  அவர்களுக்கு …

அ.ரெங்கசாமிக்கு விருது Read More »

நாளை மற்றுமொரு நாளே

கடந்த நான்கு நாட்களாக ஊட்டியிலிருந்தேன், எங்குத் திரும்பினாலும் ஒரே கூட்டம், நெரிசல், வாகன ஒசை. சென்னை ரங்கநாதன் தெருவிற்குள் இருப்பது போலவே உணர்ந்தேன். ஊட்டியின் பரபரப்பிலிருந்து தப்பி அவலாஞ்சிக்குள் போய்விட்டேன், இருபுறமும் சைப்ரஸ் மரங்கள். கண்படும் இடமெல்லாம் பசுமை, நீரோடைகள்.பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூத்திருந்தது. அப்பர் பவானி வரை சென்று வந்தேன். வழியெங்கும் மிக அரிய, விதவிதமான மரங்கள். மஞ்சளும் நீலமுமாகப் பூத்துச் சொரியும் செடிகள், பவானி ஆலயத்தின் அருகே விழுந்து கொண்டிருக்கும் …

நாளை மற்றுமொரு நாளே Read More »

வேண்டுகோள்

தசைச்சிதைவு நோயால் பாதிக்கபட்ட வானவன் மாதேவி, வல்லபி இருவரும் ஆதவ் அறக்கட்டளை என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.  உயிருககுப் போராடிய நிலையிலும் இவர்கள் மேற்கொண்டு வரும் சேவை மகத்தானது. தன்னைப் போலவே தசைச்சிதைவு நோயால் போராடும் பலருக்கும் மருத்துவ உதவி அளித்து வருகிறார்கள் அந்தப்பணிக்கு நிறைய பொருளுதவி தேவைப்படுகிறது. விருப்பமுள்ள நண்பர்கள் உதவி செய்யும்படியாக கேட்டுக் கொள்கிறேன் •• அன்பு நண்பர்களுக்கு, வணக்கம், என் பெயர் வானவன் மாதேவி. எனது தங்கை பெயர் இயல் இசை வல்லபி. நானும் …

வேண்டுகோள் Read More »

காற்றினிலே வெறும் காற்றினிலே

துலாபாரம் படத்தில் இடம்பெற்ற இப்பாடலை இன்றெல்லாம் திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். தேவராஜன் மாஸ்டர் இசையில் ஜேசுதாஸின் குரல் மனதை என்னவோ செய்கிறது ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது, யாரிடத்தில் கேள்வி கேட்பது ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும் வேறுபட்டால் என்ன செய்வது தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம், இறைவனுக்கு வேஷமென்னவோ? ஆடவைத்து பாடுவான் மூடுதிரை போடுவான் மேடை அவன் மேடையல்லவோ வாழ்க்கையின் பாதை அவன் பாதையல்லவோ பாடலின் வரிகள்  மனதை மேலும் …

காற்றினிலே வெறும் காற்றினிலே Read More »

திரைக்கதை எழுதலாம்

திரைக்கதை எழுதலாம் வாங்க என்ற ராஜேஷ் எழுதிய  நூலை வாசித்தேன். இதன் சில கட்டுரைகளை தினகரன் வெள்ளிமலர் இணைப்பிதழில் முன்னதாக வாசித்திருக்கிறேன். புத்தகமாக வாசிக்கையில் திரைக்கதை குறித்துத் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான புத்தகமிது என்று உணர்ந்தேன்.வாழ்த்துகள் ராஜேஷ். ஸிட் பீல்டினை முன்வைத்து தமிழ்சினிமாவின் முக்கியக் கூறுகளை அழகாக விவரித்திருக்கிறீர்கள் ‘கருந்தேள்’ ராஜேஷ் எழுதும் சினிமா விமர்சனங்களைத் தொடர்ச்சியாக வாசித்து வருபவன் நான். சினிமா குறித்து ஆழ்ந்து அறிந்தவர் ராஜேஷ்.  தனது வலைத்தளத்தில் ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்து …

திரைக்கதை எழுதலாம் Read More »