சஞ்சாரம்
எனது புதிய நாவல் சஞ்சாரம் உயிர்மை பதிப்பக வெளியீடாக ஜனவரி 2015, 4ம் தேதி மாலை சென்னை புக் பாயிண்ட் அரங்கில் வெளியிடப்பட உள்ளது
எனது புதிய நாவல் சஞ்சாரம் உயிர்மை பதிப்பக வெளியீடாக ஜனவரி 2015, 4ம் தேதி மாலை சென்னை புக் பாயிண்ட் அரங்கில் வெளியிடப்பட உள்ளது
நாளை (29.11.2014) அண்ணாபல்கலைகழகத்தில் நடைபெறுகிற WORLD VEGFEST விழாவில் விகடன் பதிப்பகம் வெளியிட்டுள்ள எனது உணவு யுத்தம் நூல் வெளியிடப்பட உள்ளது. உணவு யுத்தம் நூலை வெளியிடுபவர் : முனைவர் அவ்வை நடராஜன் அவர்கள் பெற்றுக்கொள்பவர் : சாது சிவராமன் அவர்கள் இடம் : TAG வளாகம். கிண்டி. அண்ணாபல்கலைகழகம் சென்னை நேரம்: மாலை 4 மணி நாள்: 29.11.2014 சனிக்கிழமை நிகழ்வில் உணவுயுத்தம் என்ற தலைப்பில் நான் உரையாற்றுகிறேன் *** WORLD VEGFEST என்பது சர்வதேச …
டோக்கியோவில் இருந்த முன்மாதிரிப் பள்ளி டோமாயி . இங்கே படித்த டெட்சுகோ குரோயாநாகி தனது பள்ளி நினைவுகளை முன்னிறுத்தி எழுதிய டோட்டோ-சான் – ஜன்னலில் ஒரு சிறுமி மிக முக்கியமான சிறார் நூலாகும், ( Totto-chan, the Little Girl at the Window) ஜப்பானில் இந்தப் புத்தகம் ஒரே ஆண்டில் 45,00,000 பிரதிகள் விற்பனையாகி வரலாறு படைத்துள்ளது கோபயாஷி என்பவர் நடத்திய இப் பள்ளி மற்ற பள்ளிக்கூடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இங்கே வகுப்பறையாக கைவிடப்பட்ட ரயில்பெட்டிகள் …
கடந்த சனிக்கிழமை அன்று தியேட்டர் லேப் சார்பாக நண்பர் ஜெயராவ் எனது ஐந்து சிறுகதைகளையும் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ஐந்து கவிதைகளையும் நாடகமாக நிகழ்த்திக்காட்டினார். அரங்கு நிரம்பிய கூட்டம். இந்த நிகழ்விற்குத் தோழர் மகேந்திரன் தலைமை வகித்து உரையாற்றினார். இவை இளம் நடிகர்களுக்கான நடிப்பு பயிற்சிக்காக உருவாக்கபட்டவை. குறைந்த வசதிகளைக் கொண்டு எளிய முறையில் இவை மேடையேற்றப்பட்ட போதும் மூலப்பிரதியை சரியாக உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நிகழ்த்தபட்டன என்பது சந்தோஷம் அளித்தது நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் பிரதிகளை …
“தி இந்து” தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா நவம்பர் 16 ஞாயிறு அன்று திருப்பூரில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன் •• தஞ்சை புத்தகக் கண்காட்சியில் நவம்பர் 21 வெள்ளிக்கிழமை மாலை ஆறுமணிக்கு நான் சிறப்புரை ஆற்றுகிறேன் ••
தமிழ் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் இன்று ரோஜா முத்தையா நூலகத்தில் Dravidian Proof Of the Indus script via Rig Veda என்ற அற்புதமான ஆய்வுரையை வழங்கினார். இந்த நிகழ்விற்கு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் தலைமையேற்றிருந்தார். சிந்து சமவெளி ஆய்வில் இது ஒரு மைல்கல் என்றே சொல்வேன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஐராவதம் மகாதேவன் தொடர்ந்து சிந்துசமவெளி குறித்த தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவரது ஆய்வு முடிவுகள் தமிழின் தொன்மை குறித்து புதிய வெளிச்சத்தை காட்டுகின்றன, …
எனது புதிய நாவல் சஞ்சாரம் உயிர்மை பதிப்பக வெளியீடாகச் சென்னை புத்தகக் கண்காட்சியினை ஒட்டி வெளியாக உள்ளது. *** 2005 முதல் 2013 வரையான எனது சிறுகதைகள் ஒன்றாகத் தொகுக்கபட்டு எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள்- தொகுதி 2 , உயிர்மை பதிப்பக வெளியீடாக வர உள்ளது. *** ஜுனியர் விகடனில் நான் எழுதி வந்த உணவு யுத்தம் விகடன் பிரசுர வெளியீடாக இம்மாதம் வெளியிடப்பட இருக்கிறது *** பூவுலகின் நண்பர்கள் எனது இரண்டு புத்தகங்களைச் சென்னை புத்தகக் …
திருப்பூரிலுள்ள காது கேளாதவர்களுக்கான சிறப்புப் பள்ளிக்குச் சென்றிருந்தேன். தன்னார்வ அமைப்பு நடத்தும் இதில் முந்நூறு மாணவர்களுக்கும் மேலாகப் படிக்கிறார்கள். காலையில் சிறார்பள்ளிக்குச் சென்றிருந்தேன், அங்கிருந்த மாணவர்களுடன் கதை சொல்லிப் பேசி மகிழ்ந்தது சந்தோஷம் தருவதாக அமைந்தது. அன்று மாலை கோதபாளையம் கிராமத்திலுள்ள பள்ளி வளாகத்தில் எனது நிமித்தம் நாவலுக்கான விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளி நிறுவனர் முருகசாமி இப்பரிசை வழங்கினார், அவரை ஒட்டு மொத்த பள்ளியும் அப்பா என்றே அழைக்கிறார்கள், அவரும் காதுகேளாதவர். தன்னுடைய இடைவிடாத …
கலை விமர்சகர், நண்பர் தேனுகா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன்.மிகச்சிறந்த கலை ஆளுமை தேனுகா. கும்பகோணம் செல்லும் ஒவ்வொரு முறையும் அவசியம் அவரைச் சந்தித்துவிடுவேன். தமிழகத்தின் அரிய கலைச்செல்வங்கள் குறித்து நிறையப் பேசியும் எழுதியும் வந்தவர் தேனுகா. அவரோடு ஒன்றாகப் பயணித்துத் தாராசுரம் கோவில் சிற்பங்களைக் கண்டிருக்கிறேன்.ஒரு நாள் முழுவதும் அந்தச் சிற்பங்களின் சிறப்புகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்தியக்கலைகள், இசைமரபுகள், ஒவியம், நடனம், உலக இலக்கியம் என அவர் ஆழ்ந்த வாசிப்பும் …
திருப்பூரில் இயங்கி வரும் காது கேளாதோருக்கான சிறப்புப் பள்ளி எனது நிமித்தம் நாவலுக்கு யாவரும் கேளிர் என்ற விருதை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது நிமித்தம் நாவல் காது கேளாதவர் பிரச்சனையை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட நாவல். அதைப் பாராட்டும் விதமாக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இதற்கான விழா அக்டோபர் 29 அன்று காலை பள்ளிவளாகத்தில் நடைபெற உள்ளது. ••• திருப்பூரைச் சார்ந்த கே. முருகசாமி அவர்களால் 1997ஆம் ஆண்டு இப்பள்ளி துவங்கப்பட்டது. முருகசாமி அவர்களுக்கும் காது கேட்காது. …