admin

ஜெயமோகனுக்கு இயல் விருது

2014 ஆம் வருடத்திற்கான இயல் விருது பெறும் நண்பர் ஜெயமோகனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள். 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தனது படைப்புகளின் வழியே தமிழ் இலக்கியத்திற்கு வளமை சேர்த்து வரும் மகத்தான படைப்பாளி விருது பெறுவது சந்தோஷம் தருகிறது. ***

எச்சரிக்கை

எனது ஈமெயில் ஐடியை இன்று மாலை ஐந்துமணிக்கு மும்பையைச் சேர்ந்த ஒரு ஐபி முகவரியிலிருந்து ஹேக் செய்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குப் போலியான மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். Pay attention to this news or Read this article என மருத்துவத் தகவல் மற்றும் நலம் விசாரிப்பு சார்ந்த செய்தி கொண்ட ஆங்கில மின்னஞ்சல் எனது மெயில்ஐடியிலிருந்து வந்திருந்தால் அதை உடனே நீக்கிவிடவும். அது ஒரு வைரஸ். தற்போது எனது மின்னஞ்சலை மீட்டுவிட்டேன் ***

பூமணிக்கு விருது

பூமணி எழுதிய ‘அஞ்ஞாடி’-நாவலுக்கு 2014-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள். நவீனத் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமிக்க படைப்பாளியாக கொண்டாடப்படும் பூமணி வெக்கை,பிறகு , நைவேத்தியம்,  ஆகிய முக்கிய நாவல்களையும் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். கருவேலம் பூக்கள் திரைப்படத்தை என்எப்டிசிக்காக இயக்கியிருக்கிறார். இவரது அஞ்ஞாடி நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி 1984 வரை நீள்கிறது. சிவகாசிக்கலவரம் குறித்த விரிவான களஆய்வினை மேற்கொண்டு பூமணி இந்நாவலை …

பூமணிக்கு விருது Read More »

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்

புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவனைக் கோடை விடுமுறையில் அவனது அம்மா பொதுநூலகம் ஒன்றிற்கு அழைத்துப் போகிறாள். அங்கே முதன்முறையாகக் காமிக்ஸ் புத்தகம் ஒன்றினை வாசிக்கத் துவங்குகிறான் நந்து. அந்த நூலகத்தில் பெனி என்ற சிறுவன் அறிமுகமாகிறான். அவன் நூலகத்தின் அடியிலுள்ள ரகசிய நூலகம் ஒன்றினைப் பற்றிக் கூறி அதனுள் அழைத்துப் போகிறான் அந்த ரகசிய நூலகம் விசித்திரமானது. உலகில் எங்கே புத்தகம் தூக்கி எறியப்பட்டாலும் அது …

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் Read More »

அண்டசராசரம்

இந்திய தேசிய ராணுவம் மற்றும் நேதாஜியின் சுதந்திரப்போர் குறித்து சிறார்கள் அறிந்து கொள்ளும்படியாக  துப்பறியும் கதையாக எழுதப்பட்ட நாவலிது. உயிர்மை பதிப்பகம் இதனை வெளியிடுகிறது இந்திய தேசிய ராணுவத்திற்காக நேதாஜி உருவாக்கிய ஆசாத் வங்கியில் (Azad Hind Bank) இருந்த பணமும் சேமிப்பும் அவரது மரணத்தின் பிறகு என்னவாகின என்ற புதிர் இன்றும் தொடர்ந்து கொண்டேவருகிறது. நேதாஜியின் அஸ்தியோடு அவரது சேமிப்பாக மிஞ்சிய ரூ 200 மட்டுமே ஜப்பானியர்களால் ஒப்படைக்கபட்டதாக ஒ.பி.மத்தாய் தனது குறிப்பில் கூறுகிறார். பலகோடி …

அண்டசராசரம் Read More »

உயிர் பெறும் ஒவியம்

அகிரா குரசேவாவின் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் வான்கோவின் ஒவியம் ஒன்றினைப் பார்வையிடும் ஒருவன் அந்த ஒவியத்திற்குள் சென்று அதே நிலக்காட்சிகளை நேரில் காண்பதுடன் வான்கோவைச் சந்தித்துப் பேசுவான். அக்காட்சியில் ஒவியன் வான்கோவாக நடித்திருப்பவர் இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸசி. வான்கோவின் ஒவியம் உயிர்பெற்றுக் காட்சியாக விரியும் அற்புதத்தைத் திரையில் கண்ட போது சிலிர்ப்பாகயிருந்தது. அதே அனுபவத்தை ஒரு முழுத் திரைப்படமாகத் தந்தால் எப்படியிருக்கும் என்பதன் உதாரணமே சமீபத்தில் வெளியாகியுள்ள The Mill and the Cross. நெதர்லாந்தின் புகழ்பெற்ற ஒவியரான …

உயிர் பெறும் ஒவியம் Read More »

படிப்பான்

எனது நண்பன் தேவா பழனிச்சாமி லண்டனில் மென்பொருள்துறையில் பணியாற்றுகிறான்.  தமிழ் ஈபுத்தகங்கள் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ள அவன் தற்போது படிப்பான் என்ற App ஒன்றை உருவாக்கியிருக்கிறான். இது ஆப்பிள் ஸ்டோரில்  தரவிறக்கம் செய்து கொள்ளக் கிடைக்கிறது துவக்க முயற்சியாக எனது இரண்டு புத்தகங்கள் இதில் உள்ளன. ஒன்று இலவசமானது. மற்றொன்றின் விலை £ 0.69 https://itunes.apple.com/gb/app/padippan/id834333236?mt=8 This app is designed for both iPhone and iPad Free Category: Books Released: 05 December 2014 Version: 1.0.2 …

படிப்பான் Read More »

துயில்

சென்னை புத்தகக் கண்காட்சிக்காக உயிர்மை பதிப்பகம் எனது துயில் நாவலின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது. நேர்த்தியான கட்டமைப்புடன்  கிளாசிக் பதிப்பாக வெளியாகியுள்ள இதன்  விலை ரூ 460. ஆன்லைனிலும் உயிர்மை பதிப்பகத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது ••

புல்லினும் சிறியது

இயற்கையியலாளர் ஹென்றி டேவிட் தோரோ பற்றி  எழுதியுள்ள புல்லினும் சிறியது எனது நூலை பூவுலகின் நண்பர்கள் வெளியிடுகிறார்கள். இது அமெரிக்காவிலுள்ள தோரோவின் வால்டன் குளத்தைப் பார்வையிட்ட எனது அனுபவத்தையும் தோரோவின் வாழ்க்கையையும் விவரிக்ககூடியது

ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது

சென்னை புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது என்ற எனது புதிய நூலை பூவுலகின் நண்பர்கள் வெளியிடுகிறார்கள். இது சமீபத்திய எனது ஹிரோஷிமா பயணம் குறித்த அனுபவப் பதிவாகும்