கதைகள் பேசுவோம்
புத்தகங்கள் நிறைய விற்பனையாகின்றன ஆனால் தீவிரமாகப் படிப்பவர்கள் குறைந்து கொண்டேவருகிறார்கள், ஒத்த ரசனையுடையவர்கள், இலக்கியத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளவிரும்புகிறவர்கள், படைப்பிலக்கியத்தில் புதிதாக ஈடுபட விரும்புகிறவர்கள் இவர்கள் ஒன்றிணைந்து உரையாடவும் விவாதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பொதுவெளி இல்லாமல் இருக்கிறது என நண்பர்கள் பலரும் என்னிடம் ஆதங்கப்படுகிறார்கள், நான் எழுத துவங்கிய காலத்தில் இது போன்ற சந்திப்புகள், இலக்கியக்கூட்டங்கள் நிறைய நடைபெற்றன, முக்கிய எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள், குற்றாலம் கவிதைப்பட்டறை இதன் சிறந்த எடுத்துக்காட்டு இலக்கியப்பகிர்விற்கான பொதுவெளியை உருவாக்கும் …