admin

கதைகள் பேசுவோம்

புத்தகங்கள் நிறைய விற்பனையாகின்றன ஆனால் தீவிரமாகப் படிப்பவர்கள் குறைந்து கொண்டேவருகிறார்கள், ஒத்த ரசனையுடையவர்கள், இலக்கியத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளவிரும்புகிறவர்கள், படைப்பிலக்கியத்தில் புதிதாக ஈடுபட விரும்புகிறவர்கள் இவர்கள் ஒன்றிணைந்து உரையாடவும் விவாதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பொதுவெளி இல்லாமல் இருக்கிறது என நண்பர்கள் பலரும் என்னிடம் ஆதங்கப்படுகிறார்கள், நான் எழுத துவங்கிய காலத்தில் இது போன்ற சந்திப்புகள், இலக்கியக்கூட்டங்கள் நிறைய நடைபெற்றன, முக்கிய எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள், குற்றாலம் கவிதைப்பட்டறை இதன் சிறந்த எடுத்துக்காட்டு இலக்கியப்பகிர்விற்கான பொதுவெளியை உருவாக்கும் …

கதைகள் பேசுவோம் Read More »

நோய்மையை விசாரிக்கும் துயில்

ந.முருகேசபாண்டியன் மதங்களுக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு காலந்தோறும் தொடர்கின்றது. உடல்ரீதியிலும் மனரீதியிலும் வாடி வதங்கிடும் மனிதனுக்கு ஆறுதல் அளிக்க கடவுள் தேவைப்படுகிறார். உடல்கள் அனுபவிக்கும் இன்பங்கள் கீழானவை என்ற கருத்தை வலியுறுத்துகிறது மதம். இந்நிலையில் ஏதோவொரு காரணத்தால் உடல் நலிவடைந்து நோய்க்குள்ளாகும்போது, கடவுள் தந்த தண்டனையாகக் கருதுவது வழக்கினில் உள்ளது. தங்கள் நோயைப் போக்க கடவுளிடம் மன்றாடுவது உலகமெங்கும் நடைபெறுகிறது. இத்தகைய துயில்தரு மாதா ஆலயம் உள்ள தெக்கோடு கிராமத்தில் ஆனி மாதம் திருவிழா …

நோய்மையை விசாரிக்கும் துயில் Read More »

ஈரோட்டில்

கல்லூரி நிகழ்வு ஒன்றிற்காக ஈரோடு வருகை தர இருக்கிறேன், 18 மற்றும் 19ம் தேதிகளில் ஈரோட்டில் இருப்பேன், சந்திக்க விரும்பும் நண்பர்களை வரவேற்கிறேன் தொடர்பு கொள்வதற்கு கிருஷ்ணன் : 9865916970

புறக்கணிப்பின் வலிகளும் உதிரும் ஞாபகங்களும்

மணிமாறன் ••• எனது புதிய நாவல் நிமித்தம் குறித்து தமுஎகச அமைப்பை சார்ந்த இலக்கிய விமர்சகரான விருதுநகர் மணிமாறன் எழுதியுள்ள விமர்சனக் கட்டுரையிது. ••• திருமணம், குழந்தைபேறு, சொந்தவீடு இவையே எளிய மனிதர்களின் உயர்ந்த லட்சியமாக இன்றுவரையிலும் பார்க்கப்படுகிறது. இவற்றை அடைவதற்கான வழியொன்றும் எல்லோருக்கும் எளிதாக அமைந்து விடுவதில்லை. முயற்சிகள், தோல்விகள், பரிகசிப்புகள் எனத் தினமும் கடந்து வர வேண்டியிருக்கிறது. அதிலும், உரிய காலத்தில் நிகழாத நாற்பது வயதைக் கடந்த பிறகும் கூடத் திருமணம் கைகூடாமல் இருப்பதற்கு எத்தனையோ …

புறக்கணிப்பின் வலிகளும் உதிரும் ஞாபகங்களும் Read More »

திருச்சியில்

திருச்சியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜான் வெஸ்லி பள்ளி மைதானத்தில் ரோட்டரி கிளப் நடத்தும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் நாளை மாலை (13.02.14) ஆறுமணிக்கு நான் உரையாற்றுகிறேன் மாலை 5மணி முதல் உயிர்மை புத்தகக் கடையில் இருப்பேன்,  (உயிர்மை ஸ்டால் எண் 53.) சந்திக்க விரும்பும் நண்பர்களை வரவேற்கிறேன் ***

தோக்கியோ சுவடுகள்3

இரண்டாம் நாளின் மாலையில் முழுமதி அறக்கட்டளையோடு தொடர்புடைய பல்வேறு துறையைச் சேர்ந்த நண்பர்கள் அனைவருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அது ஒரு உற்சாகமான சந்திப்பு . நிமித்தம் நாவல், மற்றும் எனது படைப்புகள் பற்றித் துவங்கி மெல்ல கிளைவிட்டு,  பிள்ளைகளுக்குத் தூய தமிழ் பெயர் வைப்பது தேவையா, ஆங்கில வழிக்கல்வி சரியானதா, தீவிர இலக்கியம் ஏன் புரியவில்லை, தமிழ் மொழியின் எதிர்காலம் எப்படியிருக்கும், பௌத்தம் ஏன் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்தது. அம்பேத்காரின் சிந்தனைகள் குறித்த பார்வைகள், …

தோக்கியோ சுவடுகள்3 Read More »

தோக்கியோ சுவடுகள் 2

தோக்கியோவில் இருந்து ஒரு மணி நேரப்பயணத்தில் உள்ளது காமகுரா, அங்கே பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று வெட்டவெளியில் அமைக்கபட்டிருக்கிறது, 13.35 மீட்டர் உயரமுள்ள வெண்கல புத்தரின் சிலையது, (Kamakura Daibutsu) ஜப்பானின் தேசிய அடையாளங்களில் ஒன்று அந்தப் புத்தர், 1252ம் ஆண்டு அதைச் செய்திருக்கிறார்கள், ஜப்பானில் உள்ள இரண்டாவது பெரிய புத்தர் சிலை இதுவே, முதற்சிலை நாராவில் உள்ளது, ஆகவே பிரம்மாண்டமான புத்தனைக் காண்பதில் இருந்து பயணத்தைத் துவங்கலாம் என முடிவு செய்து கொண்டு வெளியே வந்தபோது …

தோக்கியோ சுவடுகள் 2 Read More »

தோக்கியோ சுவடுகள் 1

இலவம்பஞ்சு பறப்பது போலக் காற்றில் பனி விழுந்து கொண்டிருந்தது. மூன்று அடுக்கு குளிராடைகளைத் தாண்டி குளிர் உடலை நடுக்கிக் கொண்டிருந்தது, கண்ணாடி தடுப்பின் பின்னால் நின்றபடியே பனிப்பொழிவை பார்த்துக் கொண்டிருந்தேன், சகுரா எனப்படும் பூக்கள் மலர்கிற காலத்தில் ஜப்பானைக் காண வேண்டும், அது பேரழகானது என்றார்கள், அன்று பனி, வானெங்குமிருந்து பூக்கள் உதிர்வதைப் போலவே இருந்தது கரிசலின் வெயில் குடித்து வளர்ந்த சிறுவன் நான், இது போன்ற பனிப்பொழிவைக் காண்பது எனக்கெல்லாம் புது அனுபவம், வெளிநாட்டுப் பயணத்தில் …

தோக்கியோ சுவடுகள் 1 Read More »

ஜப்பான் பயணம்

ஜனவரி முப்பது முதல் பிப்ரவரி ஏழு வரை ஜப்பான் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன், இதில் டோக்கியோவில் நடைபெற உள்ள இலக்கியவிழாவில் கலந்து கொள்கிறேன். ஜப்பானில் வசிக்கின்ற தமிழர்கள் நடத்தும்  பொங்கல் கொண்டாட்ட நிகழ்விது, இதனை முழுமதி கல்வி அறக்கட்டளை ஒருங்கிணைப்பு செய்கிறது. **

அ. முத்துலிங்கம்

கோவையில் நடைபெற்ற தாயகம் கடந்த தமிழ்  என்ற இலக்கிய நிகழ்விற்காகக் கனடாவில் இருந்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஆற்றியுள்ள உரையின் காணொளியை இணையத்தில் பார்வையிட்டேன் , இந்தக் காணொளியில் முத்துலிங்கம் மிகவும் அற்புதமாகப் பேசியிருக்கிறார். அவர் சொல்லும் தமிழ் அகதியின் கதையும் , ஆறுமணி சிட்டுக்குருவியும் மனதைத் தொடுகிறது. https://youtu.be/O3_ZJ6U9zNw KOVAIMUTTUSPEECH