admin

சாரல் விருது

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு 2014 ஆம் ஆண்டின் சாரல் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. சிறந்த எழுத்தாளர்களைத் தேடிக் கௌரவிக்கும் ஜேடி ஜெர்ரி இருவரும் பாராட்டிற்குரியவர்கள் கவிஞர் விக்கிரமாதித்யன்  பதினாறுக்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளும், இரண்டு சிறுகதை தொகுப்பும், ஏழு கட்டுரை தொகுப்புகளும் எழுதியிருக்கிறார். அண்ணாச்சிக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் ••

சிற்றிதழ்கள்

வலசை, மந்திரச் சிமிழ் என்ற இரண்டு முக்கியமான சிற்றிதழ்கள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கின்றன,  தொடர்ந்து  தீவிரமான இலக்கியப்பங்களிப்பு செய்து வரும் முக்கியமான சிற்றதழ்கள் இவை. இரண்டும் காத்திரமான உலக இலக்கியப்படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்வதுடன் மாற்று அரசியல், கலை மற்றும் பண்பாட்டுத் தளத்தில் நடைபெறும் முக்கியச் சிந்தனைப்போக்குகள், நேர்காணல்கள் என விரிந்த அளவில் தனிக்கவனத்துடன் நேர்த்தியான வடிவமைப்பில் உருவாக்கபட்டுள்ளன,  தன்னலமற்ற உழைப்பும் தீவிர அக்கறையும் கொண்டவை இந்தச் சிற்றிதழ்கள், வலசை இதழை கொண்டு வந்திருக்கும்  நண்பர்கள் …

சிற்றிதழ்கள் Read More »

புத்தகக் கண்காட்சியில்

சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்கள் எந்த அரங்கில் கிடைக்கின்றன என்பது குறித்தும் இந்த புத்தகக் கண்காட்சியில் என்ன புதிய புத்தகங்கள் வாங்கலாம்  என்றும்  நண்பர்கள்  பலர் தொடர்ந்து  மின்னஞ்சலில் கேட்டு வருகிறார்கள்,அவர்களுக்காக எனது பரிந்துரை, இது கடந்த நான்கு நாட்களில் புத்தக கண்காட்சியில் சுற்றித் தேர்வு செய்தவை,  இதில் உங்களுக்கு விருப்பமானவற்றை வாங்கிக் கொள்ளவும் ••• 1) ஒநாய் குலச்சின்னம்  -ஜியாங் ரோங் -தமிழில் சி மோகன், அதிர்வு வெளியீடு, முக்கியமான மொழியாக்க நாவல் 2) …

புத்தகக் கண்காட்சியில் Read More »

SHIRLEY’S LIKE THAT

எனது ஷெர்லி அப்படித்தான் சிறுகதையை நண்பர் கமல்நாத் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார், அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. இக்கதை  உயிர்மை வெளியிட்டுள்ள எனது காந்தியோடு பேசுவேன் சிறுகதைத்தொகுபபில் உள்ளது ••• SHIRLEY’S LIKE THAT Calling bell’s chime heard. Shirley Frank was standing at the doorstep. The scent of the lavender perfume that she was wearing had entered before her. She should be the …

SHIRLEY’S LIKE THAT Read More »

நிமித்தம் விழா

நேற்று எனது புதிய நாவல் நிமித்தம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது, விழாவில் தோழர்  டி. லட்சுமணன் நாவலை வெளியிடதென்னக ரயில்வே உயர்அதிகாரி இளங்கோவன் அதைப்பெற்றுக் கொண்டார், எழுத்தாளர் சா. கந்தசாமி சிறப்புரை ஆற்றினார், மாற்றுதிறனாளிகள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவராகச் செயல்பட்டு வரும் தோழர் டி.லட்சுமணன் தனது களஅனுபவங்களின் பின்புலத்தைக் கொண்டு நாவலை வாசித்து ஆற்றிய உரை முக்கியமானது, எளிமையும் நேர்மையும் கொண்ட அவரது உரை மிகுந்த வரவேற்பை பெற்றது தென்னக ரயில்வே உயரதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் …

நிமித்தம் விழா Read More »

நிமித்தம் வெளியீட்டுவிழா

நண்பர்களே வருகின்ற ஞாயிறு மாலை  ஆறுமணிக்கு (05.01.2014 ) சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் எனது நாவல் நிமித்தம் வெளியிடப்பட இருக்கிறது, இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••

வாழ்த்துகள் ஜெயமோகன்

முழு மகாபாரதத்தையும் நாவல் வடிவில் தொடர்ச்சியாகப் பத்து நூல்களாக வெளியிடும் மகத்தான முயற்சியில் நண்பர் ஜெயமோகன் இறங்கியிருக்கிறார்,  வெண்முரசு என்பது இதன் தலைப்பு, அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாக உள்ளது இது ஒரு பெரும்கனவு, அவரால் முடியும் என்றே தோன்றுகிறது, ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் எனப் பத்துவருடங்கள் தொடர்ச்சியாக அவர் மேற்கொள்ளப் போகும் எழுத்துசாதனைக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் இந்திய மொழிகளில் இது போன்ற …

வாழ்த்துகள் ஜெயமோகன் Read More »

அனுபவச்சுவடுகள்

டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன் ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் இயக்குனர், ஜெயகாந்தனின் நெருக்கமான தோழர், நவீன கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர், உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர், அவரது அனுபவச்சுவடுகள் என்ற நூலை சமீபமாக வாசித்தேன், கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கேஎஸ்ஸின் பள்ளி வாழ்க்கை துவங்கி பிலிப்பைன்ஸில் அவர் பணியாற்றிய காலம், அவரது நண்பர்கள், சந்திப்புகள், நினைவில் நிற்கும் ஆளுமைகள் எனப் பல்வேறு நிகழ்வுகளின் நினைவுத்தொகுப்பே இந்த நூல், இதன் தனிச்சிறப்பு தனது நினைவுகளை மட்டும் …

அனுபவச்சுவடுகள் Read More »

காட்சியாகும் கதை

புத்தாண்டு தினத்தை ஒட்டி சென்னை வானொலி அலைவரிசை ஒன்றில் காட்சியாகும் கதை என்ற தலைப்பில் தமிழ் இலக்கியமும் தமிழ்சினிமாவும் பற்றி ஒரு மணி நேர உரை நிகழ்த்தியிருக்கிறேன், இது டிசம்பர் 31 இரவு பத்துமணி முதல் 11 மணி வரை ஒலிபரப்பாகும், இந்த நிகழ்ச்சி மதுரை கோவை திருச்சி நெல்லை உள்ளிட்ட எல்லா வானொலிகளிலும் ஒலிபரப்புச் செய்யப்படும் இதன் இரண்டாவது பகுதி புத்தாண்டு தினத்தன்று காலை பத்து மணி முதல் பதினோறு மணி வரை சென்னை வானொலி அலைவரிசை …

காட்சியாகும் கதை Read More »

நன்றி வெங்கட்

நான் வெயில்காலத்தில் பிறந்தவன், வெயிலேறிய கிராமத்தில் வளர்ந்தவன், ஆகவே ஒவ்வொரு ஆண்டின் குளிர்காலமும் எனக்கு ஒவ்வாதவை, அதைக் கடந்து செல்வதற்காக நிறைய முன்தயாரிப்புகள், பிரயாசைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது குறிப்பாகக் குளிர் எனக்கு ஒத்துக் கொள்வதில்லை, பின்னிரவுகளில் விழித்து எழுந்து உட்கார்ந்து கொண்டு எப்போது சூரியன் உதயமாகும் எனக் கதகதப்பிற்குக் காத்துக் கொண்டிருப்பது விநோதமான அனுபவம், இந்தக் குளிர்காலமும் அப்படித்தான் துவங்கியிருக்கிறது, இரண்டு முறை மருத்துவரிடம் சென்று குளிர்காய்ச்சலுக்கான மருந்துகளைப் பெற்றுவந்துவிட்டேன், காய்ச்சல் குறைந்துவிட்டது ஆனால் மனநிலை பிடிப்பற்று …

நன்றி வெங்கட் Read More »