வாழ்த்துகள் ஜெயமோகன்

முழு மகாபாரதத்தையும் நாவல் வடிவில் தொடர்ச்சியாகப் பத்து நூல்களாக வெளியிடும் மகத்தான முயற்சியில் நண்பர் ஜெயமோகன் இறங்கியிருக்கிறார்,  வெண்முரசு என்பது இதன் தலைப்பு, அவரது இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாக உள்ளது

இது ஒரு பெரும்கனவு, அவரால் முடியும் என்றே தோன்றுகிறது, ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். ஒவ்வொரு நாளும் ஓர் அத்தியாயம் எனப் பத்துவருடங்கள் தொடர்ச்சியாக அவர் மேற்கொள்ளப் போகும் எழுத்துசாதனைக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இந்திய மொழிகளில் இது போன்ற ஒரு அரியமுயற்சி இதுவரை நடைபெற்றதில்லை, வெண்முரசு நாவலின் துவக்க அத்தியாயம் முதற்கனல் வாசித்துப் பார்த்தேன், மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, ஒவியமும் அற்புதமாக உள்ளது, ஒவியர் ஷண்முகவேலிற்கு எனது பாராட்டுகள்

மகாபாரதத்தின் தீவிர வாசகன் என்ற முறையில் ஜெயமோகனின் இந்த முயற்சி எனக்கு மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது,

மகத்தான கனவுகளே எழுத்தாளனை வழிநடத்துகின்றன

ஜெயமோகனின் இந்த மாபெரும் கனவு வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு என் அன்பையும், ஆதரவையும் பகிர்ந்து கொள்கிறேன்

0Shares
0