admin

ஷெர்லி அப்படித்தான்

அந்திமழை இதழில் வெளியான எனது புதிய சிறுகதை, **** காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டது. வாசலில் ஷெர்லி பிராங் நின்று கொண்டிருந்தாள், அவள் பூசியிருந்த லாவெண்டர் செண்டின் நறுமணம் அவள் வீட்டிற்குள் வருவதற்கு முன்னதாகவே நுழைந்திருந்தது. இவ்வளவு அடர்த்தியான வாசனை திரவியத்தைப் பூசிக் கொள்கிற ஒரே பெண் அவளாகத் தானிருக்ககூடும் ஷெர்லி பிராங் வாசலில் நின்று கொண்டிருக்கிறாள் என்றால் அன்று ஏழாம் தேதி என்று அர்த்தம், ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி அன்று மாலை நான்கு …

ஷெர்லி அப்படித்தான் Read More »

சிரிக்கும் வகுப்பறை

குழந்தைகளுக்காக நான் எழுதிய சிரிக்கும் வகுப்பறை என்ற நாவல் குறித்து புதிய தலைமுறை இதழில் பத்திரிக்கையாளர் கருணாகரன் சிறப்பானதொரு அறிமுகக் கட்டுரை எழுதியுள்ளார், இந்த நூலை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நிகழ்வுகள்

சத்யஜித் ரே குழந்தைகளுக்காக எழுதிய பெலுடா கதைவரிசைகளின் வெளியீட்டு விழா வருகின்ற நவம்பர் 11 மாலை ஆறுமணிக்கு  சென்னை  தி.நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராயர் ஹாலில் நடைபெற உள்ளது, பாரதி புத்தகாலயம் இந்த விழாவினை ஏற்பாடு  செய்துள்ளது அந்த விழாவில் கலந்து கொண்டு பெலுடா கதைகள் பற்றி பேச இருக்கிறேன் ••• புதிய புத்தகங்கள் சென்னையில் நான் நிகழ்த்திய ஏழு உலக இலக்கியப்பேருரைகள் புத்தக வடிவம் பெறுகின்றன, எனது உரையுடன் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாறு  மற்றும் அவர் …

நிகழ்வுகள் Read More »

கதை சொல்லிகள் இருக்கிறார்களா

சமீபத்தில் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன், ஒரு மாணவன் எழுந்து தமிழ்நாட்டில் கதைசொல்லி என யாராவது இருக்கிறார்களா எனக்கேட்டான், எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள், அரசியல்வாதிகள் தனது பேச்சின் ஊடே கதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன், ஆங்கிலத்தில் கதைகள் சொல்லும் கதை சொல்லிகள் பலர் கோடை முகாம்களை நடத்துவதை அறிவேன், ஆனால் தமிழில் கதை சொல்வதை முழுநேர வேலையாகக் கொண்ட ஒருவரை இதுவரை நான் கண்டதேயில்லை என்று சொன்னேன், என் பதிலைக் கேட்டு அந்தச் சிறுவன் அமர்ந்துவிட்டான், ஆனால்  ஏன் அப்படி …

கதை சொல்லிகள் இருக்கிறார்களா Read More »

இயக்குனரின் நாற்காலி

கிறிஸ்தோபர் பிளம்மர் கனடாவின் மிகச்சிறந்த நாடக நடிகர், இவர் நடித்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மிகவும் பிரபலமானவை, திரையுலகிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார் , அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்புத்துறையில் உள்ள பிளம்மர் தி லாஸ்ட் ஸ்டேஷன் திரைப்படத்தில் லியோ டால்ஸ்டாயாக அற்புதமாக நடித்திருக்கிறார், இவர் நடித்த Man in the Chair நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த Feel Good Movie  என்பேன். Michael Schroeder இப்படத்தை இயக்கியுள்ளார் சினிமாவிற்காக தனது வாழ்க்கையை …

இயக்குனரின் நாற்காலி Read More »

புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே

மாலனின் சிறுகதைத் தொகுப்பை மறுபடி படித்துக் கொண்டிருந்தேன், நுட்பமாகவும், தனித்துவமிக்கதாகவும் உள்ள இவரது சிறுகதைகள் மறுவாசிப்பில் மிகவும் நெருக்கமாக இருந்தன, மாலனின் கதைகளில் வரும் மனிதர்கள் பெரும்பகுதி நடுத்தர வர்க்கம்,  அவர்களின் அக,புற பிரச்சனைகளும் அது உருவாகி வெளிப்படும் விதமும் விசித்திரமாக இருக்கின்றன, அசோகமித்ரன் காட்டிய மத்தியதர உலகம் ஒரு பக்கம், ஆதவன் காட்டிய உலகம் இன்னொரு பக்கம் என்றால் இரண்டின் சாயலுமின்றி நடுத்தர வர்க்க உலகின் திண்டாட்டங்களை, சின்னஞசிறு சந்தோஷங்களை. வெளிப்படுத்த முடியாத துக்கங்களை தனது …

புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே Read More »

நயாகரா முன்னால்

‘வாழ்விலே ஒரு முறை’ என அசோகமித்திரன் கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். நயாகரா அருவியின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது இந்தியாவில் எத்தனையோ அருவிகளைக் கண்டிருக்கிறேன் என்றபோதும் நயாகராவின் முன்னால் நின்றபோது பேச்சற்றுப்போய் கண்களின் போதாமையை உணர்ந்தவனைப் போல பிரமித்து நின்றிருந்தேன். வாழ்வில் ஒரு முறை நயாகராவைப் பார்ப்பது பேறு. பலமுறை காணக் கிடைத்தவர்கள் பெரும் அதிர்ஷ்ட சாலிகள். இயற்கை எவ்வளவு விந்தையானது என்பதற்கு நயாகராவே சாட்சி. டொரண்டோவிற்கு வந்து இறங்கிய நாளே …

நயாகரா முன்னால் Read More »

WILL SPEAK WITH GANDHI

எனது காந்தியோடு பேசுவேன் சிறுகதை தனிவெளியீடாக ஐந்தாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் காந்தியவாதிகளால் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது, அந்த முயற்சியை மேற்கொண்ட நண்பர் மூர்த்திக்கு எனது மனம் நிறைந்த நன்றி. காந்தியோடு பேசுவேன் சிறுகதையை நண்பர் கமல் ஆங்கிலத்தில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ••• WILL SPEAK WITH GANDHI I had alighted at Wardha only on that morning. This is the first time I am visiting the Gandhi …

WILL SPEAK WITH GANDHI Read More »

அலிஸ் மன்றோ

இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கனடாவின் மிக முக்கிய எழுத்தாளரான அலிஸ் மன்றோவிற்குக் கிடைத்திருக்கிறது, நம்காலத்தின் மிக முக்கிய சிறுகதை ஆசிரியர் அலிஸ் மன்றோ, அவரது சில சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன, நோபல் பரிசு பெறும் 13வது பெண் இவராகும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக அலிஸ் மன்றோவின் நேர்காணல் ஒன்றினை அ.முத்துலிஙகம் எடுத்திருக்கிறார், அது காலச்சுவடு இதழில் வெளியாகி உள்ளது,  உங்கள் பார்வைக்காக அதை மீள்பிரசுரம் செய்கிறேன் **** நேர்காணல்: அலிஸ் மன்றோ காத்திராப்பிரகாரம் …

அலிஸ் மன்றோ Read More »

மறைக்கப்பட்ட இந்தியா

ஜுனியர் விகடனில் தொடராக வெளிவந்த எனது இந்தியாவின் இரண்டாவது பாகம்,  மறைக்கபட்ட இந்தியா என்ற பெயரில் தனி நூலாக வெளியாகி உள்ளது, விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த நூலின் விலை ரூ 275. நவம்பரில் இந்த நூலின் அறிமுக விழா சென்னையில் நடைபெற உள்ளது •• நாளை (அக்டோபர் 7 திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு ) திண்டுக்கல் புத்தக கண்காட்சியில் காலம் தோறும் கதைகள் என்ற தலைப்பில் பேசுகிறேன் ••