admin

திருச்சியில்

உயிர்மை மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழாவை திருச்சியில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் டிசம்பர் 8 ஞாயிறு காலை பத்துமணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் ஹாலில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது, இதில் கவிஞர் தேவதச்சன், எழுத்தாளர் ஷாஜி, எழுத்தாளர் எஸ்ஏபெருமாள், எழுத்தாளர் முருகேச பாண்டியன், பேச்சாளர் நந்தலாலா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள், விழாவினை நண்பர் துளசிதாசன் ஒருங்கிணைப்பு செய்கிறார். நண்பர்கள், இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள் …

திருச்சியில் Read More »

விருப்பமானவர்கள்

என்.விநாயக முருகன், எனக்கு பிடித்தமான கவிஞர், அவரது வலைப்பதிவுகளை விரும்பி படித்துவருகிறேன், https://nvmonline.blogspot.in/ அவரது புதிய நாவல் ராஜிவ்காந்தி சாலை வெளியாக உள்ளது என அறிந்தேன்,  வாசிக்க விருப்பமாக காத்திருக்கிறேன் எனக்கு விருப்பமான அவரது இரண்டு கவிதைகள் ••• கண்ணீர் அஞ்சலி என்.விநாயக முருகன் நான்கு நாட்கள் முன்பு தெருமுனை மின்சார கம்பத்தில் அவரை பார்த்தேன் கண்ணீர் அஞ்சலி எழுத்துகளுக்கு கீழே இரண்டு கண்கள் படம் யாருடையதென்று தெரியவில்லை அழுதுக்கொண்டிருந்தன கண்களுக்கு கீழே சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார். …

விருப்பமானவர்கள் Read More »

ரகுராஜ்பூர் போயிருந்தேன்

ஒதிஷா மாநிலத்திலுள்ள சிறு கிராமம் ரகுராஜ்பூர், பூரியிலிருந்து சந்தன்பூர் வழியாக இருபது நிமிச பயணத்திலுள்ளது, கிராமம் முழுவதும் ஒவியக்கலைஞர்கள் வாழ்கிறார்கள், சென்னையில் நவீன ஒவியர்களுக்கென உள்ள சோழமண்டலம் கடற்கரைகிராமத்தை கண்டிருக்கிறேன்,  இது பராம்பரியக் கலைஞர்களின் வசிப்பிடம், ஒடிசி நடனத்தின் தாய்வீடு இக்கிராமமே. ஒடிசி நடனக்கலைக்கு உலகப்புகழ் தேடி தந்த கேளுசரண் மொகபத்ராவின் ஊரிது, அவரது வீட்டிற்குப் போயிருந்தேன், சின்னசிறிய வீடது, முகப்பில் ஒரு சிலை வைத்திருக்கிறார்கள், பார்வை குறைந்த அவரது துணைவியார் வரவேற்று ஆசிர்வாதம் செய்து கொட்டிபுவா …

ரகுராஜ்பூர் போயிருந்தேன் Read More »

நிமித்தம் டீசர்

எனது புதிய நாவலான  நிமித்தம் குறித்து உருவாக்கபட்ட டீசர் ஒன்று யூடியுப்பில் வெளியிடப்பட்டுள்ளது •• S.RAMAKRISHNAN ‘S NIMITTAM https://youtu.be/tUGi1YLdqKo

நாவல் வெளியீட்டு விழா

உயிர்மை வெளியிட உள்ள புதிய நாவலான நிமித்தம் ஜனவரி 5ம் தேதி ஞாயிறு மாலை சென்னை அண்ணாசாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் வெளியிடப்பட உள்ளது

புதிய புத்தகங்கள்

இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்காக உயிர்மை வெளியிட உள்ள எனது புத்தகங்கள் வெளியீட்டு விழா பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன் **

கோவா திரைப்படவிழாவில்

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் பயிலும் மாணவர்  மதி எனது சிறுகதை இரண்டு குமிழ்களை குறும்படமாக இயக்கியுள்ளார், இரு குமிழ்கள் என்ற அக்குறும்படம் 11 நிமிஷம் ஒடக்கூடியது இப்படம் தற்போது கோவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற உலகத்திரைப்படவிழாவில்  நவம்பர் 29ம் தேதி காலை திரையிடப்பட உள்ளது. **

புதிய நாவல்

உயிர்மை பதிப்பகம் வெளியிடும் எனது புதிய நாவல் நிமித்தம் ஜனவரியில் வெளியாகிறது. இதன் வெளியீட்டுவிழா ஜனவரி 2014 முதல்வாரம் நடைபெறும் நிமித்தம் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதி (1) காரணம் (2) நிமித்தம் (3) சகுனம் (4) அடையாளம் (5)பொருட்டு என்ற ஐந்து பொருட்களைச் சுட்டுகின்றது (Tamil Lexicon; Vol.IV.part1p.2254) •••

தலைமுறைகள்

இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் புதிய திரைப்படமான தலைமுறைகள் விரைவில் வெளியாக உள்ளது, படத்தைப் பாலுமகேந்திரா அவர்களுடன் இணைந்து தயாரித்திருப்பவர் இயக்குனர் சசிகுமார், பாலுமகேந்திரா அவர்களின் சிறப்பு அழைப்பின் காரணமாக இன்று காலை அப்படத்தினை தனித்திரையிடலில் பார்த்தேன், தமிழ் மீதும். தமிழ் மக்கள் மீதும் பாலுமகேந்திரா அவர்கள் கொண்டுள்ள ஒப்பற்ற அன்பின் வெளிப்பாடே இப்படம். நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய அற்புதமான படம் இதுவென்பேன், தமிழ்ச்சினிமா உலகிற்கு இப்படம் அவரது கொடை, இந்திய சினிமா நூற்றாண்டிற்குத் …

தலைமுறைகள் Read More »