admin

க்யூகோவின் மகள்

காதலுக்காகத் தன்னை அழித்துக் கொண்ட தேவதாஸைத் தான் நமக்குத் தெரியும், தான் காதலித்தவனை அடைவதற்காக தன் அழகினைச் சிதைத்துக் கொண்டு, காதலன் செல்லும் ஊர் ஊராக மறைந்திருந்து பின்தொடர்ந்து, அவமானங்களுக்கு உள்ளாகி காதலில் தோற்றுப்போய், மனச்சிதைவு ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும்  மனநலக்காப்பாகத்தில் வாழ்ந்து மடிந்த அடேலைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது, அடேல், பிரெஞ்சு இலக்கியத்தின் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர் விக்டர் க்யூகோவின் மகள், இவளின் காதல் துயரம் க்யூகோவின் எல்லா புனைவுகளையும் விட விசித்திரமானது, அடேலின் காதலைப்பற்றி …

க்யூகோவின் மகள் Read More »

வாழ்வின் சில உன்னதங்கள்

பழைய புத்தகக் கடைகளுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது, எந்த ஊருக்குப் போனாலும் அங்கே பழைய புத்தகக் கடை இருக்கிறதா எனத் தேடுவது எனது வழக்கம், அப்படித் தேடி நிறையப் பொக்கிஷங்களை வாங்கியிருக்கிறேன், பழைய புத்தகங்களை விற்பவர்கள் தனிரகத்தை  சேர்ந்தவர்கள், அவர்களின் மனப்போக்கினை நாம் முடிவு செய்யவே முடியாது, சில வேளைகளில் ஐம்பது பக்க அளவுள்ள புத்தகத்திற்கு இருநூறு கேட்பார்கள், சில நேரம் ஆயிரம் பக்க நூலை பத்து ரூபாய்க்குத் தந்துவிடுவார்கள், நன்றாக சிரித்துப் பேசுவார்கள், …

வாழ்வின் சில உன்னதங்கள் Read More »

வாழ்த்துகள்

தமிழ் பேராய விருது பெற்றுள்ள தமிழ் இலக்கிய ஆளுமை கோவை ஞானி, நண்பர்கள் ஜெயமோகன், அ.முத்துலிங்கம், முனைவர் சுசிலா ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் ஜெயமோகனின் அறம் சமகாலத்தில் வெளியான மிகமுக்கியமான சிறுகதைத் தொகுதி, அதற்கு இவ்விருது கிடைத்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது. சிறந்த அயலக எழுத்தாளருக்கான விருது அ.முத்துலிங்கத்திற்கு கிடைத்திருப்பது மிகத்தகுதியான ஒன்று, நாம் பெருமையோடு கொண்டாட வேண்டிய முக்கியமான படைப்பாளி அவர். **

அஸ்தபோவில் இருவர்

சிறுகதை உடல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது, டால்ஸ்டாய் ரயிலினுள் ஒடுங்கி உட்கார்ந்திருந்தார், அவரது மகள் சாஷாவும் மருத்துவர் துஷானும் அருகில் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தார்கள், தளர்ந்து போன அவரது உடலை குளிர்காற்று ஊசிமுனை போல குத்திக் கொண்டிருந்த்து, அவரது கால்முட்டிகளில் கடுமையாக வலி, உதடுகள் வெடித்து சிவந்து, கண்கள் சோர்ந்து அயர்ந்து போயிருந்தன, நுரையீரலில் புகைபடிந்தது போல மூச்சுவிடுவதற்கே கனமாகிக் கொண்டிருந்தது. அவராக கழுத்தடியில் தொட்டு பார்த்துக் கொண்டார், உள்ளுற காய்ச்சல் அடிப்பது போலவே தோன்றியது, நாக்கில் …

அஸ்தபோவில் இருவர் Read More »

லூரே கேவன்ஸ்

இந்தியாவில் எத்தனையோ குகைகளைக் கண்டிருக்கிறேன், ஆனால் வர்ஜினியாவின் லூரேபகுதியில் அபேலேசியன் மலைத்தொடரில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள குகைதளம் போல ஒன்றை என் வாழ்நாளில் கண்டதில்லை, அதை லூரே கேவன்ஸ் (Luray Caverns )என்று அழைக்கிறார்கள் நானும் நிர்மலும் பாலாஜியும் அதைக்காண்பதற்காக சென்றிருந்தோம், பூமி மட்டத்திற்கு 134 அடி கீழே உள்ளது  இக்குகைத்தளம், . ஒரு பரந்த தெரு ஒன்றினுள் நடந்து சுற்றுவது போல மேலும் கீழுமாக அகன்று விரிந்திருக்கிறது குகை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மழையில் …

லூரே கேவன்ஸ் Read More »

பொய்விசாரணை

தியேட்டர் லேப் சார்பில் நண்பர் ஜெயராவ் இயக்கியுள்ள பொய்விசாரணை என்ற நாடகம் வருகின்ற சனிக்கிழமை (27.07.2013) மாலை ஏழுமணிக்குத் தியேட்டர்  லேப் அரங்கில் நடைபெற உள்ளது, இது எனது சிறுகதை ஆம் புரூனோ அவர்கள் குற்றவாளிகளேயின் நாடகவடிவமாகும், இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் நடைபெறும் இடம் Theatre lab 6, Mahaveer Complex, Munusamy Salai, K. K. Nagar .Chennai, (Near Ponicherry Guest House. ) Ph.9688858882 நாள்  27.07.2013. …

பொய்விசாரணை Read More »

ஈரோட்டில்

வருகின்ற 24.07.2013 புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு ஈரோடு செங்குந்தர்  பொறியியல் கல்லூரி தமிழ் மன்ற விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறேன். ***

இக்யூவின் காதல்பாடல்கள்

ஜென் கவிஞர்கள் நாடோடிகளாக இருந்த காரணத்தால் அவர்கள் பயண வழியில் வேசைகளுடன் தங்கி இரவைக் கழித்துப் போவது இயல்பே, ஆனாலும் அந்த இன்பத்தைப் பற்றியோ பரத்தமை பற்றியே ஜென் கவிதைகளில் அதிகம் பாடப்படவேயில்லை, இதில் ஒரேயொரு விதிவிலக்கு, இக்யூ ஸோஜன் ( Ikkyu) தன்னை Crazy Cloud”, என்று அழைத்துக் கொண்ட தனித்துவமிக்க ஜென்கவிஞர் இவர். வெளிப்படையாக பரத்தைகளோடு கூடி இருப்பதுடன் அவர்களை புகழ்ந்து பாடி, பாலின்பத்தை குறை கூறும் கள்ளத்துறவிகளையும் இக்யூ கேலி செய்கிறார், பௌத்த …

இக்யூவின் காதல்பாடல்கள் Read More »

கரமசோவைப் பின்தொடரும் போது

தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவல் தமிழில் கவிஞர் புவியரசு அவர்களின் மொழியாக்கத்தில் வெளியாகி ஒரு ஆண்டிற்கும் மேலாகி விட்டது , அந்த நூலின் வெளியீட்டு விழாவில் நான் தஸ்தாயெவ்ஸ்கி குறித்துச் சிறப்புரை ஆற்றினேன், புவியரசு அவர்களின் மொழியாக்கம் குறித்து ஆழ்ந்து அறிந்து கொள்வதற்காக மூலத்துடன் ஒப்பிட்டு வாசிக்கும் ஒரு வாசிப்பினை கடந்த இரண்டு மாதங்களின் முன்பாக மேற்கொண்டிருந்தேன், ஒரு மொழிபெயர்ப்பாளர் எவ்வளவு சிரத்தையுடன், அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதற்குப் புவியரசுவின் இந்த மொழியாக்கம் சிறந்த எடுத்துக்காட்டு, அவருக்கு …

கரமசோவைப் பின்தொடரும் போது Read More »

வானவில் போராளிகள்

திருப்பூர் சென்றிருந்த போது நண்பர்கள் முரளிகுமார் மற்றும்  ரவிக்குமாருடன் பேசிக் கொண்டிருந்தேன், அப்போது ‘Warriors of the Rainbow: Seediq Bale’  என்ற திரைப்படம் பற்றி தெரிவித்தார்கள், இரண்டுநாட்களுக்குப் முன்பாக ஐந்துமணி நேரங்கள் ஒடக்கூடிய அதன் இரண்டுபாகங்களையும் முழுமையாகப் பார்த்து முடித்தேன், சமீபத்தில் நான் பார்த்த உலகத்திரைப்படங்களில் மிகச்சிறந்தபடம் இதுவே, சினிமாவின் வலிமை எத்தகையது என்பதை நிருபணம் செய்யும் அரிய சாதனையிது, சில ஆண்டுகளுக்கு முன்பாக  ஹாங்காங்கைச் சேர்ந்த இயக்குனர் John Woo இயக்கிய Red cliff …

வானவில் போராளிகள் Read More »