admin

திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில்

திருநெல்வேலியில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் வருகின்ற 17ம் தேதி திங்கள்கிழமை மாலை ஏழு மணிக்கு தமிழ் இலக்கியமும் அயல் இலக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளேன், இந்த அமர்வில் எழுத்தாளர் தமிழ்செல்வன், எழுத்தாளர் ஷாஜகான் ஆகியோரும் உரையாற்றுகிறார்கள்.

மனசாட்சியின் குரல்

தீராநதி ஜூன் 2013 இதழில் வெளியாகி உள்ள எனது சிறுகதை கடக்கமுடியாத பாலம் குறித்து தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்  எழுதியுள்ள பதிவிது. *** எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை நம்  மனசாட்சியை உலுக்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை நம் மனசாட்சியை உலுக்கும் சாதிக்கலவரங்கள் சாகா வரம் பெற்றவை போல நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவை எந்தப் பொறியில் துவங்கிக் கொழுந்து விட்டு எரிந்தன என்பது மட்டுமே ஒவ்வொரு முறையும் வேறுபடலாம். அல்லது பழைய பின்னணி மறுபடியும் இருக்கலாம். ஆனால் துவங்கிய பின் நடக்கும் …

மனசாட்சியின் குரல் Read More »

மார்க் ட்வைனின் வீடு

அமெரிக்கப்பயணத்தில் நான் இருவரது வீடுகளைப் பார்க்கவிரும்பினேன், ஒன்று வில்லியம் பாக்னர் மற்றொன்று ஜாக் லண்டன் ,இருவர் எழுத்தின் மீது அதிகமான விருப்பம் கொண்டிருந்த காரணத்தால் அவர்களின் நினைவிடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் பயணதிட்டமிடலில் அது சாத்தியமாகவில்லை, கனெக்டிகெட் மாநிலத் தலைநகர் Hartford இல் உள்ள அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் ம்யூசியத்திற்குச் சென்றிருந்தேன், ட்வைனின் வீட்டைச் சுற்றிப் பார்க்க கட்டணம் 20 டாலர். அருங்காட்சியகத்தில் அவரது படம் போட்ட பேனா. டாலர், கீ …

மார்க் ட்வைனின் வீடு Read More »

வெறும் பிரார்த்தனை

சிறுகதை அவர்கள் பழனிக்கு வந்து சேர்ந்த போது மணி மூன்றரையாகியிருந்தது, வரும் வழியில் சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்ட போது அங்கேயே மதியசாப்பாட்டினை சாப்பிட்டு விடலாம் என்று அம்மா சொன்னாள் ஆனால் அப்பா  பழனிக்கு போனதும் சாப்பிடுவோம் என்று மறுத்துவிட்டார், ரமா மட்டும் எனக்கு பசிக்கு, இன்னும் எவ்வளவு தூரம்மா இருக்கு என்று ஆதங்கத்துடன் கேட்டாள், “அரைமணி நேரத்தில் போயிருவோம், நீ வேணும்னா ஒரு கொய்யாபழம் வாஙகி தின்னு“ என்று சொன்னாள் அம்மா. ரமாவால் பசி தாங்கமுடியாது, …

வெறும் பிரார்த்தனை Read More »

ஆறு பார்த்துக் கொண்டிருக்கிறது

“A River Runs Through It” ராபர்ட் ரெட்போர்ட் இயக்கத்தில் வெளியான அற்புதமான திரைப்படம், 1992ல் வெளியானது, fly-fishing  எனும் மீன்பிடித்தலை முதன்மையாக கொண்டது, நார்மன் மெகலின் நாவலை ஒரு வாசகம் மாறாமல் படமாக்கியிருக்கிறார் ராபர்ட் ரெட்போர்ட், இவர் ஹாலிவுட்டின் சிறந்த நடிகர், இயக்குனராக இவர் உருவாக்கிய படங்கள் அத்தனையும் தனித்துவமிக்கவை, இப்படம் சிறந்த ஒளிப்பதிவிற்காக ஆஸ்கார் பரிசு பெற்றது. இந்த நாவலை எழுதும் போது மெகலினுக்கு வயது எழுபது, ஆங்கிலப்பேராசிரியரான அவர் தனது பால்யகால நினைவுகளை …

ஆறு பார்த்துக் கொண்டிருக்கிறது Read More »

கொற்கையில் கடல் இல்லை

கொற்கைக்குப் போய் கொண்டிருந்தோம், என்னுடன் வந்து கொண்டிருந்த நண்பர் துளசிதாசன் கேட்டார் கொற்கையை நெருங்கிவிட்டோம் ஆனால் கடல் சப்தம் கேட்கவேயில்லையே அங்கே கடல் இல்லையே என்றேன் அது எப்படி, கொற்கை முத்துக்குப் பேர் போன கடற்துறைமுகம், அங்கே கடல் எப்படி இல்லாமல் போய்விட்டது என்று கேட்டார் கடல் பின்வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் என்று சொன்னேன், கொற்கை என்ற பெயரைக்கேட்டவுடன் நம்மில் பலருக்கும் பழமையான துறைமுகமும் கடலும் தான் நினைவிற்கு வருகின்றன, ஆனால் இன்றுள்ள கொற்கையில் கடல் கிடையாது. மறப்போர் …

கொற்கையில் கடல் இல்லை Read More »

எதிர் கோணம்

சிறுகதை பேருந்தின் படிக்கட்டில் நின்றிருந்த அந்த பையனைப் பார்க்க விடுமுறைக்கு வந்திருந்த பள்ளிமாணவனைப் போலிருந்தான், ஒடிசலான தோற்றம், வெளிறிய ஜீன்சும், ஆரஞ்சுவண்ண டீசர்டும் அணிந்திருந்தான், அவனது கழுத்தில் கேமிரா தொங்கிக் கொண்டிருந்தது, முதுகில் கேமிராவின் உபகரணங்கள்  அடங்கிய பையை தொங்கவிட்டிருந்தான், அன்று பேருந்தில் நிறைய கூட்டமாக இருந்தது சவரிமுத்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தபடியே அந்த பையனையே பார்த்துக் கொண்டிருந்தான், அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது கேனான் கேமிரா, அது போன்ற கேமிரா ஒன்றை ஹிண்டு பேப்பர்  விளம்பரத்தில் …

எதிர் கோணம் Read More »

கூட்ஸ் பயணம்

எத்தனையோ ரயில்களில் ஏதேதோ ஊர்களுக்குப் பயணம் செய்திருக்கிறேன், ஆனால் என்னால் மறக்கமுடியாத ஒரு பயணம் கூட்ஸ் ரயிலில் போனது, பள்ளிநாட்களில் வீட்டின் அருகாமையில் உள்ள ரயில்வே நிலையத்தினை கடந்து செல்லும் கூட்ஸ் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருப்பேன், அப்போதெல்லாம் கூட்ஸ் ரயிலின் கடைசிப்பெட்டியில் ஒற்றை ஆளாக நின்றபடியே கொடியை வீசி அசைக்கும் கார்டினைப் பார்த்து கையசைப்பது வழக்கம்,  ஒரு சிலர் பதிலுக்கு கையசைப்பார்கள், பலர் இறுக்கமான முகத்துடன் வெறித்து பார்த்தபடியே கடந்து போய்விடுவார்கள், இந்த உலகிலே மிகதனிமையானது …

கூட்ஸ் பயணம் Read More »

மார்க் ஷகாலின் ஆடு

மார்க் ஷகாலின் (Marc Chagall)  I and the Village  என்ற ஒவியத்தினை நியூ யார்க் ம்யூசியம் ஆப் மார்டன் ஆர்டில் பார்த்தபோது ஆஹா என்னவொரு அற்புதமான ஒவியம் என வியப்பு மேலோங்கியது, ஷகாலின் இந்த ஒவியத்தின் நகல்பிரதியை முன்பே கண்டிருக்கிறேன், ஆனால் அதற்கும், ஒரிஜினல் ஒவியத்தை நேரில் பார்ப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் என்பதை அன்று  என்னால் துல்லியமாக உணர முடிந்தது, பார்ப்பவர் எவரும் அந்த ஒவியத்திலிருந்த தலையை திருப்பமுடியாத, மாயக்கவர்ச்சியொன்று அவ்வோவியத்திலிருந்தது, அதன் முன்பாக நின்றபடியே …

மார்க் ஷகாலின் ஆடு Read More »