admin

குழந்தைகள் சினிமா

நூற்றாண்டுகால இந்திய சினிமாவில் குழந்தைகளின் உலகம் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது,  பொதுவாக  வெகுஜனத் திரைப்படங்களில் இடம் பெறும் குழந்தைகள் இரண்டுவிதமானவர்கள், ஒன்று பெரியவர்களைப் போல அலட்டிக் கொண்டு தன் இயல்பை மீறி மிகையாகப் பேசுகிறவர்கள், அர்த்தமற்றபடி பாட்டுபாடி ஆடுகின்றவர்கள், மற்றவர்கள் கைவிடப்பட்ட அநாதைகள்,  ஏழ்மையில் உழலும் பரிதாபமானவர்கள், ஒடிப்போனாவர்கள், குடும்ப பாரம் சுமப்பவர்கள், அவர்களின் கஷ்டமும் கண்ணீரும் வணிக திரைப்படங்களின் வியாபார உத்திக்கு சுவைகூட்டவே பயன்பட்டிருக்கிறது, டெம்பிளட் எனப்படும் வகைமாதிரிக்கு உட்பட்டே குழந்தைகள் திரைப்படங்களில் இடம் …

குழந்தைகள் சினிமா Read More »

ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை

2007ல் வெளியான சிறுகதை, அமெரிக்காவில் வசிக்கும் எனது நண்பர்  ஆனந்த் விருப்பத்திற்காக இதை மீள்பதிவு செய்கிறேன் ••• ஜி.சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத் தாண்டிய பிறகு தனது பிறந்தநாள் வருவது பற்றி அதிகம் உற்சாகம் அடைந்ததில்லை. அதை நினைவு வைத்துக்கொள்வது கூட குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது போலவே உணர்ந்தாள். எப்படியாவது தனது பிறந்த நாளை மறந்து போய்விட மாட்டோமா என்று அவள் …

ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை Read More »

பிபிஸ்ரீனிவாஸ் கடிதம்

P B ஸ்ரீனிவாஸ் அவர்கள் எனது சிறுகதை விரும்பி கேட்டவளை வாசித்துவிட்டு எனக்கு எழுதிய பாராட்டு கடிதம், இன்று காலையில் தற்செயலாக அதை எடுத்து வாசிக்கையில் மனம் கலங்கிவிட்டது, எங்க வீட்டுப் பெண்  படத்தில் பிபிஎஸ் பாடியுள்ள சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி பாடலை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கிறேன் ***

தெலுங்கில்

புத்தனாவது சுலபம் என்ற  எனது சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது, இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பாலாஜி, இக்கதை சித்ரா மே 2013 இதழில் வெளியாகி உள்ளது •••

ராமநாதபுரத்தில்

வருகின்ற 05.05.2013 ஞாயிறு காலை ராமநாதபுரம் தமிழ்சங்க நிறுவனர் டாக்டர் எஸ்.எம்.கமால் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறேன், விழா நடைபெறும் இடம் ஆயிர வைசிய மகாஜன சபை திருமண மஹால் வெளிப்பட்டணம், ராமநாதபுரம் நேரம் : காலை பத்துமணி நாள் : மே 5 ஞாயிறு ••••

தூய வெளிச்சம்

– சிறுகதை கோச்சடை சாலையில் நின்றபடியே வீடு இடிக்கபடுகின்றதை பார்த்துக் கொண்டிருந்தான், இடிபட மறுத்த உறுதியான சுவர்களை டங்டங் என கடப்பாரைகள் ஒங்கியோங்கி குத்தி உடைத்துக் கொண்டிருந்த ஒசை அவனை என்னவோ செய்தது, பழமையான அந்த வீடு  அவன் ஏறிக் குதித்து திருடிய வீடுகளில் ஒன்று, இரண்டுநாட்களாகவே அந்த வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள், பல்பொருள் அங்காடி ஒன்று வரப்போவதாக சொல்லிக் கொண்டார்கள்,  அந்த வீடு சைகோன் குமாரசாமி பிள்ளையுடையது, கப்பல் ஏறி போய் வணிகம் செய்து பிழைத்த …

தூய வெளிச்சம் Read More »

பைனாக்குலர்

ஆன்டன் செகாவின் படிப்பு அறையில் எப்போதுமே ஒரு பைனாக்குலரை வைத்திருப்பார், அது எதற்காக என அவரிடம் ஒரு நாடக நடிகை  கேட்ட போது செகாவ் சிரித்துக் கொண்டே சொன்னார் இது தான் என்னைக் காப்பாற்றும் தேவதை” “எப்படி?”  என்று  அந்தப் பெண் கேட்டாள் “ஒன்றும் பிரமாதமில்லை. யாராவது இங்கே வந்து, சம்பந்தமில்லாமல் , தங்கள் கெட்டிக்காரத்தனதை கொட்டி உளற ஆரம்பித்தால், நான் இந்த பைனாக்குலரை எடுத்துக் கொண்டு ஜன்னலுக்கு அருகில் போய் நின்று கொள்வேன், திடீரென ஆழ்ந்த …

பைனாக்குலர் Read More »

நடிப்பு என்றாலும்

மதுரையில் உள்ள நாடக நடிகர் சங்கத்திற்குச் சென்றிருந்தேன், அது ஒரு தனி உலகம், சுவரில் வரிசை வரிசையாகத் தொங்கும் நடிகர் நடிகைகளின் தேதி கேட்டுப் பதியும் அட்டைகளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன், நான் சென்றிருந்த நேரம் கிராமத் திருவிழாவில் வள்ளிதிருமணம் நாடகம் போடவேண்டும் என்பதற்காக மேலூர் அருகில் உள்ள கிராமத்தவர்கள் வந்திருந்தார்கள், இன்றைக்கும் மேடைநாடக உலகிற்கென தனிப்புகழ் கொண்ட நடிகர்கள் இருக்கிறார்கள், அவர்களின் தேதி கிடைப்பது குதிரைக்கொம்பு தான் என்பதை அவர்களது  பேச்சில் அறிந்து கொண்டேன், அப்போது …

நடிப்பு என்றாலும் Read More »

பேட்ரிக் ரோசாரியோ

ரஷ்ய எழுத்தாளர் கொரலங்கோ கண்தெரியாத இசைஞன் என்றொரு குறுநாவலை எழுதியிருக்கிறார், அதில் பார்வையற்ற ஒரு இசைக்கலைஞனின் உலகம் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும், அப்படியான ஒரு அரிய இசைக்கலைஞர் சென்னையிலே வசிக்கிறார், அவரது இசையை ஒருமுறை கேட்டுப்பாருங்கள், மறக்கவே முடியாது என்று இசை ரசிகரான எனது நண்பர் கார்த்திக் ஒரு முறை தெரிவித்தார், பேட்ரிக் அலெக்சாண்டர் ரோசாரியோ. ஒரு அகார்டியன் இசைக்கலைஞர், இவரது இசை நிகழ்ச்சியினை எழுத்தாளர் ஷாஜியின் புத்தக வெளியீட்டு விழாவின் போது ஒரு முறைக் கேட்டேன், …

பேட்ரிக் ரோசாரியோ Read More »

சத்ரபியின் காமிக்ஸ் உலகம்

மர்ஜானே சத்ரபியின் (Marjane Satrapi) சிக்கன் வித் பிளம்ஸ் கிராபிக் நாவலை சென்ற ஆண்டு டெல்லி புத்தகக் கண்காட்சியின் போது வாங்கி வாசித்தேன்,  தற்போது அது திரைப்படமாக வெளியாகி உள்ளது, வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் விலகி மாறுபட்ட உருவாக்கதில் வெளியாகியுள்ள இப்படம் காமிக்ஸ் ரசிகர்கள் மிகவும் விரும்பக்கூடியது. இப்படம்  நஸர் அலி கான் என்ற தோல்வியுற்ற இசைக்கலைஞரைப் பற்றியது, தனது வயலின் உடைந்து போனதற்காக அவர் தற்கொலை செய்து கொள்ள விரும்புகிறார், படக்கதை அவரது காதலை, …

சத்ரபியின் காமிக்ஸ் உலகம் Read More »