admin

சாரல் விருது

2012ம் ஆண்டுக்கான சாரல் விருது எழுத்தாளர்கள் திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன். இருவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருதை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி தனது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் வழங்குகிறார்கள், விருது வழங்கும் நிகழ்வு ஜனவரியில் சென்னையில் நடைபெற உள்ளது வண்ணதாசன், வண்ணநிலவன் இருவரும் ஒருங்கே விருதுபெறுவது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது, இருவருமே என் விருப்பதிற்குரிய எழுத்து ஆளுமைகள் தமிழ் இலக்கியத்தின் மகத்தான இரண்டு கலைஞர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள் ••

புதிய தொடர்

ஜுனியர் விகடன் இதழில் எனது இந்தியா என்ற புதியதொடர் ஒன்றினை எழுத இருக்கிறேன், இது அடுத்த  இதழ் முதல் வெளியாகிறது அது குறித்த விளம்பரம் வெளியாகி உள்ளது •• எனது இந்தியா வரலாறு என்ற பறவைக்கு கடந்த காலம்  நிகழ்காலம் என்ற இரண்டு சிறகுகள் இருக்கிறது, அது நிகழ்காலம் எனும் வானில் பறந்து கொண்டிருக்கிறது, பறத்தலின் ஊடே எத்தனையோ இறகுகள் உதிர்ந்தாலும் மறுபடியும் முளைத்துக் கொண்டேதானிருக்கிறது. எப்போதும் போல பறவையும் முன்னெடுத்து பறந்து கொண்டேதானிருக்கிறது. மன்னர்களின் வாழ்க்கை …

புதிய தொடர் Read More »

அரங்காடல்

கனடாவின் டொரோண்டோ நகரில் செயல்பட்டுவரும் மனவெளி கலையாற்றுக்குழு எனும் நாடக அமைப்பு  நவீன தமிழ்நாடகங்களை மிகச்சிறப்பாக நிகழ்த்தி வருகிறது. ஆண்டுதோறும் புதிய நாடகங்களை மேடையேற்றம் செய்வதற்கு அரங்காடல் என்ற நிகழ்வினையும் ஏற்பாடு செய்துவருகிறார்கள், இது குறித்து நண்பர் செல்வன் வழியே நிறைய அறிந்திருக்கிறேன். 2012 ஜனவரி எட்டாம் தேதி டொரோண்டோ நகரில் நடைபெற உள்ள அரங்காடல் நிகழ்வில் எனது கடவுளின் குரலில் பேசி என்ற சிறுகதையின் நாடகவடிவம் நிகழ்த்தப்பட இருக்கிறது, இந்த நாடகப்பிரதியை உருவாக்கியவர் செழியன். நெறியாள்கை …

அரங்காடல் Read More »

டின்டின்

Tintin and I என்ற பிரெஞ்சு டாகுமெண்டரிப் படத்தை பார்த்தேன், Anders Høgsbro Østergaard  இயக்கியது, சமீபமாக டின்டின் திரைப்படம் வெளியாகி பரபரப்பாகப் பேசப்படும் சூழலில் டின்டினை வரைந்த பெல்ஜிய ஒவியரான ஹெர்ஜி பற்றிய இந்த ஆவணப்படத்தை இணையத்தில் தேடிவாங்கினேன். எனது பள்ளிநாட்களில் டின்டின் காமிக்ஸின் ரசிகனாக இருந்தேன், அந்த நாட்களில் டின்டின் வாங்குவதற்காக மதுரைக்குப் போய்வர வேண்டும், அதுவும் எளிதாக கிடைத்துவிடாது, பலநேரம் வாடகை நூலகம் ஒன்றில் இருந்து தேடிஎடுத்து  வாசித்திருக்கிறேன், டின்டின் என்ற சிறுவனைப் பிடித்ததிற்கு …

டின்டின் Read More »

அன்னா ஏன் தற்கொலை செய்தாள்?

ஆர்.அபிலாஷ் (21-11-11 அன்று ரஷ்ய  கலாச்சார மையத்தில்  அன்னா கரீனினா  நாவல் பற்றி  எஸ்.ரா. ஆற்றிய உரை குறித்த ஒரு பதிவு ) எஸ்.ரா. தன்  பேச்சில் அன்னா கரீனினாவின் சமகால தேவையை வலியுறுத்தினார். இன்றும் திருமணத்துக்கு வெளியே உறவு நாடி அவதிக்குள்ளாகும் பெண்கள் உள்ளார்கள். இது முகநூல் யுகத்தில் இன்னும் தீவிரமாகிப் போவதைச் சொன்னார். இது ஏன் நிகழ்கிறது? குடும்பம் எனும் அமைப்பின் தேவை என்ன? அதன் வரையறைகளை மீறி உடைத்துக் கொண்டு ஒருவன் ஏன் …

அன்னா ஏன் தற்கொலை செய்தாள்? Read More »

எஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு மாலைகள்

அய்யப்ப மாதவன் புயல்தோன்றிய சென்னை நகரத்தில் எங்கு பார்த்தாலும் நீர். நீரைத் தவிர ஒன்றுமில்லையென்று நினைத்திருந்த வேளை, ரஷ்ய கலாச்சார மையத்தையும் சூழ்ந்திருந்த வெள்ளம். சுவர்கள் நாற்புறமும் தடுக்கப்பட்ட சதுர அரங்கில் காலியற்ற இருக்கைகள். நாற்காலிகளெங்கும் மனித வெள்ளம். எஸ்.ரா கருமேகங்களென பொழிந்துகொண்டிருந்தார். இலக்கியமென்பது நலிந்து மெலிந்து போய்க்கொண்டிருக்கிற காலத்தில் இலக்கியத்தை மேம்படுத்தும் காரியத்திலிருந்தார் எஸ்.ரா. அரங்கு சற்றுத் தள்ளியிருந்த கடலிலும் பேரலைகள். இவ்வரங்கத்தை நோக்கியும் மனித அலைகள். ஒரு நாள் இரண்டு நாள்களில்லை. ஒரு வாரகாலம் …

எஸ்.ராமகிருஷ்ணனின் ஏழு மாலைகள் Read More »

நாவல்களே உலகை ஆள்கின்றன

இன்றைய தேதியில் உலகில் அதிகம் வாசிக்கபடுவது எது, கவிதையா, நாவலா, கட்டுரைகளா, சுயமுன்னேற்ற நூல்களா என்ற விவாதம் முடிவில்லாமல் நடந்து கொண்டேதானிருக்கிறது, புள்ளிவிபரங்களைப் பார்க்கையில் நாவலாசிரியர்களே அதிகம் வாசிக்கவும் கொண்டாடவும் படுகிறார்கள் என்பதே நிஜம். ஹாரிபோட்டர் 450 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, டாவின்சி கோடு 80 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது, ஜப்பானிய நாவலாசிரியரான ஹருகி முராகமியின் நாவல் 13 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, இந்த வரிசையில் நூறு மில்லியனுக்கும் மேல் விற்பனையாது என்று இருபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன, …

நாவல்களே உலகை ஆள்கின்றன Read More »

உரையின் பதிவு

நேற்று ஷேக்ஸ்பியர் பற்றிய எனது உரையைக் கேட்பதற்கு நிறையப் பேராசிரியர்கள், முன்னாள் துணைவேந்தர், பல்வேறு கல்விப்புலம் சார்ந்தவர்கள் வந்திருந்தார்கள்,  அரங்கு நிரம்பி இருக்கை கிடைக்காமல் பலரும் தரையில் அமர்ந்து உரையைக் கேட்டார்கள். டெல்லி. பெங்களுர். மும்பை, இலங்கை, மதுரை, கோவை என்று பல ஊர்களில் இருந்தும் சென்னைக்கு இந்த உரைகளைக் கேட்பதற்காகவே வந்து அறை எடுத்து தங்கியிருப்பதாக சில நண்பர்கள் அறிமுகம் ஆகிக் கொண்டார்கள், இந்த ஆதரவு மிகுந்த உத்வேகம் தருவதாக இருக்கிறது •• உலக இலக்கியம் …

உரையின் பதிவு Read More »

தொடரும் சொற்பொழிவு

சென்னையில் உள்ள ருஷ்யக் கலாச்சார மையத்தில் நான் உரையாற்றும் உலக இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு நேற்றும் இன்றும் நல்ல கூட்டம், உட்கார இடமில்லாமல் நிறைய நண்பர்கள் நின்று கொண்டே உரையைக் கேட்டார்கள், இரண்டு நாட்களும் இரண்டு மணிநேரம் உரையாற்றியிருக்கிறேன் உலக இலக்கியத்தை அறிந்து கொள்வதில் இவ்வளவு பேர் ஆர்வம் காட்டுவது மிகுந்த உத்வேகம் அளிக்கிறது, அதிலும் குறிப்பாக நிறைய இளைஞர்கள் வந்து கேட்பது சந்தோஷம் தருவதாக இருக்கிறது,. தமிழில் நடைபெறும் முதல்முயற்சியிது, எனக்கே நிறைய தயக்கங்கள். எப்படி வரவேற்பு …

தொடரும் சொற்பொழிவு Read More »

போர்ஹே மற்றும் நான்

போர்ஹேயின் புகழ்பெற்ற சிறுகதையான “Borges and I” இல் போர்ஹே தன்னுடைய கதைகளையும் கவிதைகளையும் புனைவதற்கு ஏதுவாக இருக்க நான் வாழ்கிறேன்.என்னை நான் வாழவிடுகிறேன். என்றொரு வரி இடம் பெற்றிருக்கிறது, ஒரு பக்க அளவில் அமைந்துள்ள இந்தக் கதை புனைவெழுத்தின் அசாத்தியமான சாதனை எழுத்தாளன் என்ற இருப்பு விந்தையானது என்ற எண்ணத்தை எவ்வளவோ படைப்பாளிகள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள், ஆனால் போர்ஹே அதைத் தனது புனைவின் வழியே அழகாக வெளிப்படுத்துகிறார், இரட்டை நிலை பற்றி போர்ஹேயிற்கு எப்போதுமே அதீத …

போர்ஹே மற்றும் நான் Read More »