சாரல் விருது
2012ம் ஆண்டுக்கான சாரல் விருது எழுத்தாளர்கள் திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன். இருவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருதை இயக்குனர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி தனது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் வழங்குகிறார்கள், விருது வழங்கும் நிகழ்வு ஜனவரியில் சென்னையில் நடைபெற உள்ளது வண்ணதாசன், வண்ணநிலவன் இருவரும் ஒருங்கே விருதுபெறுவது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது, இருவருமே என் விருப்பதிற்குரிய எழுத்து ஆளுமைகள் தமிழ் இலக்கியத்தின் மகத்தான இரண்டு கலைஞர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள் ••