admin

நாவலின் நரம்பு

உறுபசி – ஒரு பார்வை   –  ஆதவா தனிமையின் கசப்பும் நிராகரிப்பும் நிறைந்த என் வாழ்வில் புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. பெருத்த அச்சம் ஏற்படுத்தக் கூடிய தனிமை எனக்கு பலநாட்கள் வாய்த்திருந்த போதிலும் வாசிப்பைக் காட்டிலும் எழுதுவதில் அக்கறை எடுத்துக் கொண்டேன். திரு.எஸ்.ராமகிருஷ்ணனோடு உண்டான வாசிப்புத் தொடர்பிலிருந்து வாசிப்பின் அடர்த்தி பெருகிக் கொண்டு வருவதை இப்பொழுது என்னால் உணரமுடிகிறது. அது உறுபசி நாவலின் வழியே நீண்டு கொண்டிருக்கிறது. உறுபசி. நாவலை வாங்கிய பிறகு உறுபசி …

நாவலின் நரம்பு Read More »

அறிவிப்பு

கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம்  எனக்கு இந்த ஆண்டிற்கான கண்ணதாசன் விருது வழங்குகிறது, 50 ஆயிரம் பணமும் பட்டயமும் கொண்டது இவ்விருது,  அதைப்பெறுவதற்காக  கோவை வருகை தர இருக்கிறேன்,  25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் இருக்கிறேன்,  சந்திக்க விரும்பும் நண்பர்கள் கோவை ராஜவீதியில் உள்ள விஜயா புத்தகக் கடையைத் தொடர்பு கொள்ளவும். 26.06.2011 ஞாயிறு அன்று காலை பத்துக்கு கண்ணதாசன் விழா துவங்குகிறது, இதில் கண்ணதாசன் குறித்து கவிஞர் மு. அர்ச்சுனன் …

அறிவிப்பு Read More »

கதைக்கம்பளம்

1)      எனக்கு ஏன் கனவு வருது 2)      நீள நாக்கு 3)      எழுதத்தெரிந்த புலி 4)      பம்பழாபம் 5)      தலையில்லாத பையன் 6)      லாலி பாலே 7)      காசுக்கள்ளன் என குழந்தைகளுக்கான ஏழு புத்தகங்களை நானும் நான்காவது வகுப்பு படிக்கும் எனது பையன் ஆகாஷ் இருவருமாக இணைந்து வெளியிட்டிருக்கிறோம். இக்கதைகளை நானும் அவனுமாகப் பேசி விவாதித்து  உருவாக்கினோம், புத்தகங்களுக்கான எண்ணம் அவனுடையது, நான் எழுத்து வடிவம் தந்திருக்கிறேன். சில கதைகளில் அவன் கதையின் முக்கிய நிகழ்வுகளை மாற்றியிருக்கிறான், …

கதைக்கம்பளம் Read More »

நெடுங்குருதி : விசித்திரத்தின் அழகியல்

தீவிர இலக்கிய வாசகரும் எனது நண்பருமான கார்த்திகைப் பாண்டியன் நெடுங்குருதி நாவல் பற்றி எழுதியுள்ள விமர்சனம். •• ஒரு மனிதனின் அடிப்படை இயல்புகளைத் தீர்மானிக்கக் கூடிய விஷயங்கள்எவையெவை என்று சொல்லலாம்… அவர்களின் பிறப்பு? குடும்ப சூழ்நிலைகள்? நண்பர்கள் அல்லது உறவினர்கள்? இவை போக, இது எல்லாவற்றையும் மீறியஒன்றும் இருக்கிறது. அது  அவர்களின் ஊர்.. அவர்கள் வாழும் சூழ்நிலை. இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னுடைய எட்டாவது வயதில்குடும்பத்தோடு மதுரை சுப்ரமணியபுரம் பகுதிக்கு குடிபுகுந்தோம். அதுவரை வீடு …

நெடுங்குருதி : விசித்திரத்தின் அழகியல் Read More »

மாற்று சினிமா

கிராபியன் ப்ளாக் ஒரு இளம் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், திரைத்துறையிலும் பத்திரிக்கையிலும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார், அவரது இரண்டு புத்தகங்களை சமீபத்தில் வாசித்தேன், ஒன்று மாற்றுசினிமா, மற்றது திரைப்படக்கல்லூரி ஆளுமைகள், இரண்டையும்  புதிய கோணம் என்ற பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது இதில் மாற்றுசினிமா தமிழில் வெளியான 32 சிறந்த குறும்படங்களைப் பற்றியது, குறும்படத்திற்கான விமர்சனம் என்பதோடு. அந்த இயக்குனரைப் பற்றியும் குறும்படங்களின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது, குறும்படங்களை மாற்று சினிமாவிற்கான முதற்படி என்று சொல்வது சரியான ஒன்றே, இதன்வழியே புதிய …

மாற்று சினிமா Read More »

இன்னொரு பயணம்

கோடை மழை துவங்கியிருக்கிறது,  ஈரம் படிந்த காற்றுடன் பயணம் செய்வது அற்புதமானது ஜுன் 2 முதல் இருபது நாட்களுக்குப் பயணம் செய்ய இருக்கிறேன், அநேகமாக ஜுன் 21ல் சென்னை திரும்புவேன். ••

மலேசியத் தமிழறிஞர்

மலேசியாவில் வசிக்கும் தமிழறிஞரான டாக்டர் எஸ் ஜெயபாரதியின் எழுத்துகளை நான் விரும்பிப் படித்து வருகிறேன், பழந்தமிழ் இலக்கியம். ஆன்மீகம். விஞ்ஞானம், ஜோதிடம், தமிழ்பண்பாடு, நுண்கலை. வரலாற்று ஆய்வுகள் என்று பரந்த தளங்களில் சிறப்பாக எழுதிவருபவர், அவரது மலேசிய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிய கட்டுரைகள் அற்புதமானவை, அவரது எழுத்து தேர்ந்த நகைச்சுவையும் செழுமையான மொழிநடையும் கொண்டது, டாக்டர் ஜெயபாரதி தேர்ந்த படிப்பாளி, அவரது எழுத்தில், வியக்க வைக்கும் தகவல்கள். நுட்பமான விபரங்கள்.  நேரடியாக கள ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட …

மலேசியத் தமிழறிஞர் Read More »

துணையெழுத்து

எனது துணையெழுத்து புத்தகம் பற்றி விக்னேஷ் என்ற இளம் வாசகர் தனது வலைப்பதிவில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பதிவு இது, மிக உண்மையாக எழுதப்பட்டிருக்கிறது என்பதே இதன் சிறப்பு. துணையெழுத்து வெளியாகி ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, நான் எழுதிய புத்தகங்களில் அதிகம் விற்பனையானது அதுவே, ஒரு லட்சம் பிரதியைக் கடந்திருக்கும் என்று நம்புகிறேன், ஒவ்வொரு நாளும் அதற்கான வாசகர்கள் விரிந்து கொண்டேயிருக்கிறார்கள், துணையெழுத்து புத்தகத்தை ஆங்கிலத்தில் சுதா நரசிம்மாச்சாரி சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் , விரைவில் அது பிரபல …

துணையெழுத்து Read More »

ஜோன் வலியோடு பேசுகிறாள்

சினிமாவின் அழியாத பிம்பங்களாகச் சில முகங்களே நினைவில் தங்கியிருக்கின்றன, அப்படியான ஒரு முகம் மரியா பல்கெனடியுடையது,(Maria Falconetti) அவள் நடித்த The Passion of Joan of Arc சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம், அதை இயக்கியவர் டேனிஷ் இயக்குனர் கார்ல் டிரையர்,(Carl Th. Dreyer) மௌனப்படமான  ஜோன் ஆப் ஆர்க்கில் ஜோனாக பல்கெனடி நடித்திருக்கிறார், சினிமா எவ்வளவு வலிமையான காட்சி ஊடகம் என்பதை அறிந்து கொள்ள இந்த ஒரு படமே சாட்சி, உரையாடலின்றி காட்சிகளின் …

ஜோன் வலியோடு பேசுகிறாள் Read More »

கதைருசி

நல்ல சிறுகதைகளுக்குள் கிளையில் அமர்ந்திருந்த பறவை சட்டென பறந்து எழுவது போன்ற பறத்தலை காணமுடியும், அதுவரை வாசகன் தொடர்ந்து வந்த இயல்பு மாறி கதை தன் சிறகுகளை விரித்து மேலே செல்லும் உன்னதத்  தருணமது, அந்தத் தருணமே கதையின் முக்கியப் படிமமாக ஆகிவிடுகிறது, அசோகமித்ரனின் காந்தி சிறுகதையில் அது போன்ற ஒரு தருணம் வருகிறது, அத்தருணம் கதையின் அன்றாடத்தன்மையில் இருந்து மேலெழும்பி ஜிவ்வெனப் பறக்க ஆரம்பிக்கிறது, வாசகன் அதன் வழியே  வாழ்க்கை குறித்த ஒரு தரிசனத்தை அடைகிறான், …

கதைருசி Read More »