admin

விஜய் டிவி

 நாளை ஞாயிற்றுகிழமை (16.1.11) இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டு புத்தகம் வாசிப்பதின் முக்கியத்துவம் குறித்துப் பேசியிருக்கிறேன். நண்பர்கள் அனைவரும் அவசியம் காணவும் **

புத்தகப் பரிந்துரை

சென்னை புத்தகக் காட்சியில் இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் நிறைய புதிய வாசகர்களைச் சந்திக்க முடிந்தது, துயில் நாவலை நிறைய இளம் மருத்துவர்கள் வாங்கிப் படித்து ஆழமாக விவாதித்தது சந்தோஷம் தருவதாக இருந்தது சென்னை புத்தகக் காட்சியில் நான் பரிந்துரைக்கும் முக்கியப்புத்தகங்கள் இவை. 1)      இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய கவிதை தொகுப்பு. சமீபத்தில் நான் வாசித்த ஆகச்சிறந்த கவிதைகள் இதில் உள்ளன, நவீன தமிழ்கவிதையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியுள்ள இந்தக் கவிதை தொகுப்பு …

புத்தகப் பரிந்துரை Read More »

புத்தகக் கண்காட்சி

 கடந்த இரண்டு நாட்களாக சென்னைப் புத்தக கண்காட்சிக்கு சென்று வருகிறேன். புதிய வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது உத்வேகம் தருவதாக இருக்கிறது. நேற்று மதியம் பாரதி புத்தகாலயத்தில் லெப்ட் வேர்ட் என்ற ஆங்கிலப்பதிப்பகம் வெளியிட்டுள்ள காரல் மார்க்சின் மூலதனம் நூலின் இந்தியப்பதிப்பு வெளியீடும் மூலதனத்தை எப்படி புரிந்து கொள்வது என்பதைப்பற்றி வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதிய நூலும் வெளியிடப்பட்டது, இந்தநூலை தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். மார்க்சின் மூலதனத்தின் முதல் தொகுதியை வாசித்திருக்கிறேன், அதை ஒரு …

புத்தகக் கண்காட்சி Read More »

துயில் வெளியீட்டு விழா

எனது புதிய நாவல் துயில் வெளியீட்டு விழா அரங்குநிரம்பிய பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது, நான் விரும்பியபடியே நாவல் பற்றிய கலந்துரையாடல்  தனித்துவமானதாக அமைந்திருந்தது, துயில் நாவல் அச்சு  மற்றும் வடிவாக்கத்தில் வெகு நேர்த்தியாக உருவாகப்பட்டிருக்கிறது. அதற்காக உயிர்மை பதிப்பக ஊழியர்களுக்கும் நண்பர் மனுஷயபுத்திரனுக்கும் மனம் நிறைந்த நன்றி   விழாவிற்கு வந்து சிறப்பித்த அத்தனை பேருக்கும், மின்னஞ்சலில் வாழ்த்து அனுப்பிய நண்பர்களுக்கும் இனிய நன்றி புத்தக கண்காட்சியில் சந்திப்போம் ஜனவரி எட்டாம் தேதி முதல் தினசரி மாலை …

துயில் வெளியீட்டு விழா Read More »

புத்தாண்டு வாழ்த்துகள்.

 உலகெஙகும் உள்ள தமி்ழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2011ல் உங்கள் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும் ** இந்தப் புத்தாண்டில் யாவரும் நினைக்க வேண்டிய கவிதை ** சென்றதினி மீளாது மூடரே!நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம். இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா. –          பாரதியார்

அசடன்

தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கிய நாவலான இடியட்டைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா. இவர் முன்னதாக குற்றமும் தண்டனையும் நாவலை மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்தவர், மார்ச் மாதம் வெளியாக உள்ள இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்காக ஒரு முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இலக்கிய வாசகர்கள் அனைவரும் இதில் முன்பதிவு செய்து ஆதரிக்க வேண்டுகிறேன் •• தஸ்தாயெவ்ஸ்கியின் Crime And Punishment, The Idiot, The Possessed (or Devils), The Brothers Karamazov. ஆகிய  நான்கு நாவல்களும் தனித்துவமானவை, அவற்றை …

அசடன் Read More »

காகிதச் சிற்பங்கள்

                                                                                                    ஒரிகாமி எனப்படும் காகிதச் சிற்பங்களை உருவாக்குவதைப் பற்றிய Between the Folds  என்ற ஆவணப்படத்தினைப் பார்த்தேன், சிறந்த டாகுமெண்டரி படத்திற்காக பதினைந்திற்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழா விருதுகளைப் பெற்றிருக்கிறது, காகிதத்தை மடித்துக் கப்பல் செய்வது மட்டும் தான் நாம் அறிந்த கலை, ஆனால் ஒரிகாமி எனப்படும் ஜப்பானிய காகிதச் சிற்பக்கலையில் காகிதம் ஒரு மாயப்பொருள் போலாகி விலங்குகள், மனிதர்கள், கற்பனைஉருவங்கள் என்று எல்லா வடிவங்களும் கொள்கின்றன, இது வெறும் பொழுது போக்குக்கலையில்லை, விஞ்ஞான நுட்பம் …

காகிதச் சிற்பங்கள் Read More »

துயில்

எனது புதிய நாவல் துயில் ஜனவரி 1 2011 அன்று (1.1.11) மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட உள்ளது. நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு  விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்

மாயா லின்

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வியட்நாம் யுத்த நினைவகத்தை வடிவமைத்தவர் மாயா லின் . இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் சிறந்த பத்து கட்டிடக் கலைஞர்களில் ஒருவர் என்று கொண்டாடப்படுகிறார். அமெரிக்கர் அல்லாத ஒருவர் அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ஒரு நினைவுச்சின்னத்தை வடிவமைத்தது மிகவும் வியப்பானது. எப்படி இந்தப்பணி சாத்தியமானது என மாயா லின்னைப் பற்றி Maya Lin: A Strong Clear Vision. ஆவணப்படத்தைப் பார்த்தேன். கட்டிடக்கலைஞரான லின் வியட்நாம் யுத்த நினைவுச்சின்னத்தை வடிவமைப்பதற்கான வரைபடம் தீட்டுவதில் துவங்கி அது …

மாயா லின் Read More »

கணிதமேதையைப் பற்றிய பாடல்

கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வை விவரிக்கும் இந்தப் பாடல் அற்புதமான இசையோடு அமைக்கப்பட்டுள்ளது, கேட்கையில் மிகுந்த உணர்ச்சிவசமாகிறது, இப்பாடலை டவுன்லோடு செய்து கேட்கலாம் ஆன்லைனில் கேட்க இணையப்பக்கத்தில் உள்ள ஆடியோ பிளேரை அழுத்தவும், பள்ளி. கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய முக்கிய பாடல் இது. https://www.archive.org/details/Ramanujan