admin

பார்க்க வந்த இலை

என்னைப்பார்க்க ஒரு வாசகர் வந்திருந்தார். அவர் கையில் எங்கோ வழியில் பறித்த ஒரு இலையிருந்தது. பச்சை நிறத்தில் அகலமான இலை. அவர் சுவாரஸ்யமாக இலக்கியத் தகவல்களை பேசிக் கொண்டேயிருந்தார். எனக்கோ அந்த இலையிடமிருந்து கவனத்தை அகற்ற முடியவில்லை. எவ்வளவு பசுமை. எவ்வளவு அழகு. அந்த இலை ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கிறது. இந்த நிமிசம் முன்பு வரை எங்கிருந்தது அந்த இலை. எந்த செடியின் இலையது. நான் அதை இதுவரை கண்டதேயில்லையே. எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறது. …

பார்க்க வந்த இலை Read More »

காண் என்றது இயற்கை

எனது புதிய புத்தகமான காண் என்றது இயற்கை குறித்து கவிஞர் கலாப்ரியாவின் கட்டுரை. •• காண் என்றது இயற்கை – கவிஞர் கலாப்ரியா ’நதி’ மலையாள சினிமா என்று நினைவு. வயலாரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.இது மொழிபெயர்ப்பு “ உன்னைக் குறித்து நான் பாடிய பாட்டுக்குஓராயிரம் அலைகள் சுருதியிட்டன உன் மனோராஜ்ஜியத்தின் நீலக்கடம்பில் நீயென் விளையாட்டோடத்தைக் கட்டிப் போட்டாய், அன்பே கட்டிப் போட்டாய்.” ஒரு நதிக்கரை. இக்கரைக்கும் அக்கரைக்கும் ஓடுகிற ஓடம், ஓட்டுகிற ஓடக்காரன்….ஓடத்தை சற்றே ஒரு …

காண் என்றது இயற்கை Read More »

சினிமா மின்னல்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச்சேர்ந்தவர் மின்னல். இவரது இயற்பெயர் உதுமான் முகையதீன்.  ஜனசக்தி இதழின் பத்திரிக்கையாளராக துவங்கி விளம்பர நிறுவன அதிபராகவும், படத்தயாரிப்பாளராகவும் இயங்கிய அவர் தனது சினிமா அனுபவங்களை தொகுத்து மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். நர்மதா பதிப்பகம் 2004ல் இதை வெளியிட்டுள்ளது. மிக சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம் தந்த புத்தகமிது. சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் தமிழ்முரசில் இதன் முதற்பாகம் தொடராக வெளியாகியிருக்கிறது. 2005ல்  நான் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஜான் …

சினிமா மின்னல். Read More »

நன்றி பாவண்ணன்

நவீன தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் எழுத்தாளர் பாவண்ணன், மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருப்பவர், தேர்ந்த வாசகர், அவரது சிறுகதைகளை எனக்கு மிகவும் பிடிக்கும், அவை தனித்துவமான அனுபவமும் கச்சிதமான மொழிநடையும் கொண்டவை,  தான் வாசித்த புத்தகங்கள் குறித்து நுட்பமாக தொடர்ந்து எழுதி வருபவர் பாவண்ணன், அது மிகுந்த பாராட்டிற்குரியது அவர் எனது புதிய நூலான செகாவின் மீது பனி பெய்கிறது குறித்து திண்ணை இணைய இதழில் வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது” என்று ஒரு …

நன்றி பாவண்ணன் Read More »

மரியோ வர்கஸ் லோசா

மரியோ வர்கஸ் லோசாவிற்கு (Mario Vargas Llosa)2010ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், விமர்சன கட்டுரைகள், நாடகங்கள், அரசியல் கட்டுரைகள் என்று விரிந்த தளத்தில் இயங்கியவர் லோசா. பெருநாட்டு எழுத்தாளரான இவர் ஒரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார் . இவரது படைப்புகள் 31 மொழிகளில் வெளியாகி உள்ளன. 74 வயதிலும் பல்கலைகழகங்களில் தொடர்ச்சியாக  இலக்கிய உரைகள் நிகழ்த்துதல், நேரடியான அரசியல் ஈடுபாடு. சமகால படைப்பாளிகளை கொண்டாடுதல்  என்று …

மரியோ வர்கஸ் லோசா Read More »

காதலின் துறவி

டி.ஹெச். லாரன்ஸ் ஆங்கில இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை.  தனது எழுத்துகளால் தொடர்ந்த சர்சையும் தணிக்கை கெடுபிடிகளும் எதிர்கொண்டவர். இவரது ரெயின்போ நாவல் தடை செய்யப்பட்டு தீயிட்டு கொளுத்தபட்டவுடன்  இங்கிலாந்தை விட்டு தப்பி தன்மனைவியுடன் அமெரிக்கா சென்றார். பின்பு அங்கிருந்து மெக்சிகோ பயணமானவர். இந்த கொந்தளிப்பான நாட்களைப் பற்றிய திரைப்படமே Priest of Love படத்தை இயக்கியவர் Christopher Miles. 1912 ம் ஆண்டு லாரன்ஸ்  பிரைடா தியோபோனை சந்தித்தார். அவள் ஒரு பேராசிரியரின் மனைவி. அவர்கள் வீட்டிற்கு …

காதலின் துறவி Read More »

பசித்துயர்

கி.ராஜநாராயணன் தொகுத்த நாட்டார் கதைத் தொகுப்பில் பசி என்ற ஒரு கதை உள்ளது. இக்கதை மிக முக்கியமானதொரு மரபுக்கதை தீராதபசியில் உணவு தேடி அலைகிறாள் ஒரு பெண், அவளுக்கு ஏழு ஆண்பிள்ளைகள் இருந்தும் எவரும் அவளைக் கவனிக்கவில்லை, எட்டாவதாக பிறந்த மகளுடன் அவள் சாப்பிட ஏதாவது கிடைக்காதா என்று தேடுகிறாள். ஊரில் எவரும் அவளுக்கு உணவு தரவில்லை , பசியை அடக்கிக் கொள்ள குளத்து தண்ணீரையாவது குடிக்கலாம் என்று போனால் குளம் தண்ணீர் தர மறுத்து தண்ணீரைப் …

பசித்துயர் Read More »

தரமணியில் கரப்பான்பூச்சிகள்

என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் என் பெயரை மறந்து போயிருப்பீர்கள். அல்லது கேட்டிருக்கவே மாட்டீர்கள். காரணம் நான் பெயரோடு பெரும்பாலும் அறிமுகமாகிக் கொள்வதேயில்லை. என் அடையாளமாக இருப்பது கரப்பான்பூச்சிமருந்து விற்பவன். அதுவும் ஜெர்மனியின் புகழ்பெற்ற பூச்சிக் கொல்லி நிறுவனமான வில்ஹெம் ஒபேரின் விற்பனைப் பிரதிநிதி என்ற அடையாள அட்டையிருக்கிறது. ஆகவே அது உங்களுக்குப் போதுமானது. எனக்கே கூட என்னுடைய பெயர் தற்போது கொஞ்சம் அசௌகரியமாகவே இருக்கிறது. பெயரைப் பொறுத்தவரை அது என்னோடு ஒட்டிக் கொள்ளவேயில்லை. வேலை மாறும்போது …

தரமணியில் கரப்பான்பூச்சிகள் Read More »

மகத்தான போராளி

நீண்ட நாட்களுக்குப்பிறகு நேற்றிரவு  மார்லன் பிராண்டோ நடித்த Viva Zapata படத்தை மறுபடியும் பார்த்தேன். பிராண்டோவின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று. கூடுதல் சிறப்பு இதை இயக்கியது எலியா கசன் . இந்த முறை பார்க்கும் அது ஈழத்தின் யுத்த நினைவுகளையும் , ஈழப்போராளிகளின் வீரமரணத்தையும் பெரிதும் நினைவூட்டியது. போராட்டமும் துயர நினைவுகளும் எல்லா தேசங்களிலும் ஒன்று போலதான் இருக்கிறது. படத்தைப் பார்க்க பார்க்க மனதில் ஈழப்போரின் வரலாறு பொங்கி மிகவும் உணர்ச்சிகரமாக்கியது. விவா ஷபாடா ஒரு போராளியின் …

மகத்தான போராளி Read More »

பெங்களுர் சந்திப்பு

பெங்களுரில் நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து  கொள்ள அக்டோபர் 3ம் தேதி ஞாயிற்றுகிழமை அங்கு வருவதாக உள்ளேன். ஒரு நாள் முன்னதாக அக்டோடபர் 2ல் வந்துவிடுவேன், அன்று நண்பர்கள் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வினை ஒழுங்குசெய்திருக்கிறேன். இது ஒரு திறந்த உரையாடலுக்கான நிகழ்வு. ஆகவே நண்பர்களுடன் கூடிப்பேசி ஒரு கோப்பைத் தேநீரைப் பகிர்ந்து கொள்வது தான் நிகழ்வின் பிரதானம். விருப்பமுள்ள நண்பர்கள் அனைவரும் வரலாம் நாள்: 2.10.10 சனிக்கிழமை நேரம் : மாலை …

பெங்களுர் சந்திப்பு Read More »