admin

கோமாளியும் கதை சொல்லியும்

பள்ளிச் சிறுவர்களுக்கு கதை சொல்வது பெரிய சவால். பேசத் தெரிந்த எவரும் எந்த இலக்கிய கூட்டத்திலும் எளிதாகப் பேசி மேற்கோள்கள் காட்டி கைதட்டு வாங்கி விட முடியும். ஆனால் குழந்தைகளுக்கு கதை சொல்வது அப்படியானதில்லை. அதற்கு நிறைய கதைகளும்சுவாரஸ்யமான கதை சொல்லும் தன்மையும்பகடியும்நகைச்சுவையும்கேட்பவரை அதிகம் கதை சொல்ல வைக்கும் திறனும் தேவை.  இத்தனையிலும் முக்கியமானது தன்னைத் தானே கேலி செய்து கொள்ள தெரிந்திருக்க வேண்டும் என்பதே, கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகள் நம்மிடம் அதிகமில்லை. …

கோமாளியும் கதை சொல்லியும் Read More »

சினிமா இணையதளங்கள்

இரண்டு நாட்களின் முன்பாக டி.சுப்ரமணியம் எனும் திரைப்பட துணைஇயக்குனர் உலகத்திரைப்படங்கள், திரைப்பட இயக்குனர்கள் குறித்த இணையதளங்களை சிபாரிசு செய்யும்படியாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்காக இந்த இணையதள சுட்டிகளை சிபாரிசு செய்திருந்தேன். அவரை போல ஆர்வம் உள்ளவர்கள் பலரும் இருப்பதால் அதே பட்டியலை முன்வைக்கிறேன். இந்தஇணையதளங்கள் ஒரளவு உலக சினிமாவின் முக்கிய போக்குகளை அறிந்து கொள்ள உதவக்கூடியவை. புகழ்பெற்ற இயக்குனர்கள். சினிமாகட்டுரைகள், சமகால இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான தொடர்பு. பல்வேறு தொழில்நுட்ப தகவல்கள், அறிமுகங்கள் என இவை உலகசினிமாவின் பல்வேறு …

சினிமா இணையதளங்கள் Read More »

மௌனப்பனி.

2007ம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியலில் சிறந்த முதல்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது உள்ளிட்ட விருதுகளையும் ஒசியான் விருது உள்ளிட்ட 18 முக்கிய விருதுகளை பெற்றுள்ள ஊழ்ர்க்ஷ்ங்ய்  சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிக முக்கியமானதாகும். சிவாஜி சந்திரபூஷன் இயக்கத்தில் உருவான இப்படம் இமயமலையின் பனிசூழ்ந்த தனிமையில் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை விவரிக்கிறது. படத்தை முழுமையாக கறுப்பு வெள்ளையில் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதே இதன் தனிச்சிறப்புதற்செயலாக இந்த படத்தின் சிறிய முன்னோட்டம் ஒன்றினை இணையத்தில் கண்டேன். …

மௌனப்பனி. Read More »

அழைக்கும் நிழல்

இரண்டு மாதங்களின் முன்பு காரில் பெங்களுருக்கு சென்று கொண்டிருந்தேன். வேலூரை தாண்டியதும் வழக்கமான பிரதான சாலையில் செல்லாமல் சிறுநகரங்களின் வழியில் போகலாம் என்று தோன்றியது. பிரதான சாலையை விட்டு விலகிய பாதையில் செல்ல துவங்கினேன். புதிய நான்குவழி சாலைகள் எல்லா ஊர்களையும் விலக்கி தனியே சென்று கொண்டிருக்கிறது. எந்த ஊரை கடந்துசெல்கிறோம் என்று கூட தெரிவதில்லை. அன்று நான் சென்ற பாதை சீராக இல்லை. ஆனால் சிறியதும் பெரியதுமான ஊர்கள். வீடுகள், ,  பரபரப்பான மனித இயக்கங்கள். …

அழைக்கும் நிழல் Read More »

காருகுறிச்சியார்.

              சில நாட்களுக்கு முன்பாக நாதஸ்வர மாமேதை காருகுறிச்சி அருணாசலத்தின்  சொந்த ஊரான காருகுறிச்சிக்கு சென்றிருந்தேன். சிறிய கிராமம். அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ளது. ஊரின் நுழைவாயிலில் கையில் நாதஸ்வரத்துடன் உள்ள காருகுறிச்சியார் சிலை காணப்படுகிறது. சிலை செய்தவருக்கு காருகுறிச்சியார் மீது என்ன கோபமோ தெரியவில்லை. நாதஸ்வரம் வளைந்து நெளிந்து போயிருக்கிறது. காருகுறிச்சியின் பூர்வீக வீடு விற்கபட்டு தற்போது யாரோ குடியிருக்கிறார்கள். அந்த வீட்டில் இருந்த பெண்மணி அடிக்கடி …

காருகுறிச்சியார். Read More »

மனசாட்சியின் பாலம்

  வாழ்வின் சுவாரஸ்யங்களில் ஒன்று எதிர்பாராமை. யார் யாரை எப்போது சந்தித்து கொள்வார். ஒரு மனிதன் எப்போது வாழ்வில் முன்னேறுவான். எப்போது வீழ்ச்சியடைவான். சாவு எப்படி எப்போது நேரும் என்று எதிர்பாராமையின் கிளைகளிலிருந்தே பல நாவல்கள் பிறக்கின்றன குறிப்பாக இறை நம்பிக்கைக்கு ஆழமான காரணம் எதிர்பாராமையை சந்திக்க வேண்டிய தைரியமும் நம்பிக்கையும் இல்லாததே . வாழ்வு முன்கூட்டி தீர்மானிக்கபட்ட ஒரு வரைபடம் அதிலிருந்து ஒரு துளி கூட மாற்றம் ஏற்பட்டுவிட முடியாது என்று நம்பும் ஒரு தத்துவமும் வாழ்வு …

மனசாட்சியின் பாலம் Read More »

நாரத ராமாயணம்.

புதுமைபித்தனின் நாரத ராமாயணம் மொத்தம் 46 பக்கங்களே கொண்டது. இந்நூல் வெளியாகி அறுபம் வருசங்களுக்கும் மேலாகிறது. புதுமைபித்தனின் சிறுகதைகள், இலக்கிய கட்டுரைகள் கொண்டாப்பட்ட அளவில் நாரத ராமாயணம் பெரிதாக கொண்டாடப்படவில்லை. அப்படி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று கூட பலரும் அறிந்திருக்கவில்லை. புதுமைபித்தனின் பகடி எழுத்தின் உன்னதம் இதுவே என்பேன். இது வெறுமனே ராமாயணத்தை கேலி செய்யும் ஒரு புனைவுமட்டுமில்லை. மாறாக ராமாயணத்தை முன்வைத்து புதுமைபித்தன் கலாச்சார அரசியலை விமர்சனம் செய்கிறார். இந்திய கலாச்சாரத்தில் இதிகாசங்கள் உருவாக்கி …

நாரத ராமாயணம். Read More »

எலிக்கடி.

சென்னைக்கு வந்த புதிதில்  மாம்பலத்தில் ஒரு நண்பரது அறையில் தங்கியிருந்தேன். அந்த அறையை ஒரு சர்வாதிகாரி நிர்வகித்து வந்தார். அவரது கட்டுபாட்டின் கீழே நான்கு வேலையில்லாத பசங்கள் தங்கியிருந்தார்கள். நான் ஐந்தாவது ஆளாக ஊரிலிருந்து கிளம்பி அந் அறைக்கு வந்திருந்தேன்.  (அவரை ஏன் சர்வாதிகாரி என்கிறேன் என்பதை இரண்டு பத்திகளுக்கு பிறகு நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். )  அறைக்கு வந்த முதல்நாள் அவர் என்னை தனியே அழைத்து கையில் பத்து ருபாய் தந்து வெளியே சாப்பிட்டு கொள்ளும்படியாக அன்புக் கட்டளையிட்டார். …

எலிக்கடி. Read More »

சிறு குறிப்பு

இயக்குனர் பாலாவின் புதிய திரைப்படமான அவன் இவன் படப்பிடிப்பு செங்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்று வருகிறது. வசனம் எழுதுவதால் படப்பிடிப்பு தளத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இருந்துவருகிறேன். அங்கே இணையத்தொடர்பு மிக மெதுவாக இருப்பதால் தொடர்ந்து இணையத்தில் எழுத சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புவது கூட மூன்று நாட்களுக்கு ஒரு முறையே சாத்தியமாகிறது. படப்பிடிப்பு மார்ச் இறுதி வரை தொடர்கிறது. இன்னொரு பக்கம்  புதிய நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதால் வேறு விசயங்களில் …

சிறு குறிப்பு Read More »

இணையத்தில் கர்ண மோட்சம்

  நான் கதை வசனம் எழுதி முரளி மனோகர் இயக்கிய தேசிய விருது பெற்ற  குறும்பட்ம் கர்ண மோட்சம்’  ஆங்கில சப்டைட்டில்களுடன் இரண்டு பாகங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது   அதற்கான இணைப்புகள் :   https://www.youtube.com/watch?v=3W87_I79JKA   https://www.youtube.com/watch?v=PgcqGpl3OqM