கோமாளியும் கதை சொல்லியும்
பள்ளிச் சிறுவர்களுக்கு கதை சொல்வது பெரிய சவால். பேசத் தெரிந்த எவரும் எந்த இலக்கிய கூட்டத்திலும் எளிதாகப் பேசி மேற்கோள்கள் காட்டி கைதட்டு வாங்கி விட முடியும். ஆனால் குழந்தைகளுக்கு கதை சொல்வது அப்படியானதில்லை. அதற்கு நிறைய கதைகளும்சுவாரஸ்யமான கதை சொல்லும் தன்மையும்பகடியும்நகைச்சுவையும்கேட்பவரை அதிகம் கதை சொல்ல வைக்கும் திறனும் தேவை. இத்தனையிலும் முக்கியமானது தன்னைத் தானே கேலி செய்து கொள்ள தெரிந்திருக்க வேண்டும் என்பதே, கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகள் நம்மிடம் அதிகமில்லை. …