admin

நகுலன் வீட்டில் யாருமில்லை

Fables and Parables எனப்படும் குறுங்கதை மரபு உலகெங்கும் உள்ளது. இந்த கதை வகைமையின் சிறப்பு அடையாளங்களாக ஜென் கதைகள், முல்லா கதைகள், சூபி கதைகள், பைபிள் கதைகள், ஜாதகக் கதைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இவை மனித மனதின் ஆதார இச்சைகளை, ஏக்கங்களை, துயரங்களை பேசுகின்றன. உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களான போர்ஹே, இதாலோ கால்வினோ, யாசுனாரி கவபட்டா, ஹென்ரிச் ப்யூல், காப்கா,  மார்க்வெஸ்,  டொனால்டு பார்த்தல்மே,  போன்றவர்கள் இந்த குறுங்கதை மரபை புத்துருவாக்கம் செய்திருக்கிறார்கள். நீதி போதிக்கவும் போதனைக்கும் …

நகுலன் வீட்டில் யாருமில்லை Read More »

மலைகள் சப்தமிடுவதில்லை.

இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் நான் எழுதிய கட்டுரைகள் ஆளுமைகள், அக்கறைகள், அனுபவங்கள் என்று வகைப்படுத்தி தொகுக்கப்பட்டு தனித்த நூலாகியுள்ளது. எதை எழுதும் போது அதில் நினைவுகள் கலந்துவிடுகின்றன. நினைவுகளின் நிழல் விழாத எழுத்து இருக்கிறதா என்ன? இந்த நினைவுகள் தனிநபர் சார்ந்தவை இல்லை. மாறாக நான் வாழும்காலத்தில் கண்டதும் காரணமற்று கைவிடப்பட்டதும், அறிந்து புறக்கணிக்கபட்டதுமான வாழ்வியலின் நுண்மையான சாட்சிகள். கிராமம் என்பது வெறும் சொல்லாக மட்டுமே அறிமுகமாகி போன மாநகர சூழலில் சிறுவர்கள்  ஒட்டுபுல்லை கூட கண்ணில் …

மலைகள் சப்தமிடுவதில்லை. Read More »

புத்தக வெளியீட்டு விழா

  உயிர்மை பதிப்பகம் எனது நான்கு புதிய புத்தகங்களை வெளியிடுகிறது, அதற்கான வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 13 ஞாயிறு மாலை பிலிம்சேம்பரில் நடைபெறுகிறது, இந்த நிகழ்வில் வாசகர்கள். நண்பர்கள், இணையவலைப்பதிவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அழைக்கிறேன் •••   உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு எஸ்.ராமகிருஷ்ணனின் நான்கு நூல்கள்   நாள் 13.12.09 ஞாயிற்றுக் கிழமை நேரம். மாலை 5.30 மணி இடம்: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (Film Chamber)604/605/606 டி.ஆர்.சுந்தரம் அவென்யூராணி …

புத்தக வெளியீட்டு விழா Read More »

மழை என்ன செய்யும்

இரவில் பெய்யும் மழை தனித்த சுபாவமுடையதாக இருக்கிறது. அது எப்போது சீறும் எப்போது தணியும் என்று  அறிய முடியாது. பள்ளி வயதில் ஒரு நாளிரவு தூக்கத்தின் ஊடே ஏதோ சப்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். வெளியே மழை பெய்து கொண்டிருந்த சப்தம் கேட்டது. மின்விசிறி சுழலும் ஒசை தான் அப்படி இருக்கிறதா அல்லது மழை தானா என்று உறுதியாக தெரியவில்லை. ஜன்னல்கள் அடைத்து சாத்தப்பட்டிருந்தன. மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் சுவர்களில் ஊர்ந்து கொண்டிருந்தது. பின்னிரவில் வீடு …

மழை என்ன செய்யும் Read More »

நினைவின் கலகம்.

மறதிக்கு எதிராக நினைவின் கலகம் தான் எழுத்து என்கிறார் மிலன் குந்தேரா. இன்றைய புகலிடக்  புனைகதைகள்  பெரிதும் இந்த முனைப்பிலிருந்தே பிறக்கின்றன. மறக்கடிப்பதை வேலையாக செய்வதே அதிகாரத்தின் பெருந்தந்திரம். அதைப் புனைவின் வழியே எதிர்க்கொள்வதும் நினைவின் தூண்டுதலால் புல்லின் நிழல் அளவு நம்பிக்கையாவது ஏற்படுத்திவிட முடியும் என்று முயற்சிப்பதுமே கலையின் தொடர்ந்த செயல்பாடாக உள்ளது. இன்றைய சிறுகதைகள் அன்றாடப் பிரச்சனைகளின் வடிகால்கள் அல்ல. மாறாக வாழ்வின் மீதான தீவிர விசாரணைகள்.  கதை ஒரு புனைவெளியாகவே, மாற்று இருப்பாகவே …

நினைவின் கலகம். Read More »

பீதோவனின் காதல்.

இசைமேதை பீதோவனின் காதலைப்பற்றிய Immortal Beloved  என்ற திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். பீதோவன் எனக்கு விருப்பமான இசைக்கலைஞர். சென்னைக்கு வந்த நாட்களில்  ஏதேதோ அறைகளில் தங்கியிருந்த போது பல இரவுகள் என்னுடன் துணையிருந்தவர் பீதோவன். அவரது இசைக்கோர்வைகளை வாக்மேனில் விடிய விடிய கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அவர் வழியாகவே நான் மேற்கத்திய இசையின் முக்கிய கலைஞர்கள் பலரை கேட்க பழகினேன்.  மேற்கத்திய இசை பற்றி எந்த முறையான பரிச்சயமும் இன்று வரை எனக்கு கிடையாது. வெறுமனே இசை கேட்க …

பீதோவனின் காதல். Read More »

பால் காகின்

I shut my eyes in order to see. – Paul Gauguin 1891 ஆண்டு ஒஷியானிக் என்ற கப்பல் ஆஸ்திரேலியா வழியாக பிரெஞ்சு காலனிகளில் ஒன்றான நியூ கலோடோனியாவை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது. கப்பலில் மூன்று அடுக்குகள் இருந்தன. குடியும் கொண்டாட்டமும் கூக்குரலுமாக நீளும் அந்த கடற்பயணத்தில் ஒரேயொரு ஆள் மட்டும் கப்பலின் மேல்தளத்தில் நின்றபடியே கண்ணெதிரில் விரிந்து கிடக்கும் தொலைவை வெறித்து பார்த்தபடியே வந்தான். அவன் கண்களில் கடலின் நீலமும் தொலைதுôர …

பால் காகின் Read More »

பௌத்த சினிமா.

ஐந்து வருசங்களுக்கு முன்பாக திருவனந்தபுரம் திரைப்படவிழாவில் வெர்னர் ஹெர்சாக் இயக்கிய Wheel of Time  என்ற ஆவணப்படம் ஒன்றினை பார்த்தேன். பௌத்த மட சடங்குகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் காலச்சக்கர மண்டலா பற்றியது இந்த ஆவணப்படம்.  திபெத்திய பௌத்த மரபில் காலத்தை விழிக்க வைப்பது மிக ரகசியமான சடங்கு. இதற்காக காலச்சக்கரம் என்ற வட்டவடிவிலான மணல் சித்திரம் ஒன்றினை பிக்குகள் உருவாக்குகிறார்கள். அந்த கால சக்கரத்தின் மையத்தை விழிக்க வைப்பது ஒரு தாந்திரீக செயல்பாடு. அதனை தலாய்லாமா …

பௌத்த சினிமா. Read More »

உன்னத மனிதர்.

கோடம்பாக்கத்தில் உள்ள பழைய புத்தக கடை ஒன்றின் வாசலில் ஒரு நாய் சோர்ந்து படுத்துகிடந்தது. நோய்மையுற்ற நாய்களின் முகத்தில் விவரிக்கமுடியாத ஒரு பதற்றம் இருப்பதை கண்டிருக்கிறீர்களா. அது சொல்லற்ற வலி. அந்த நாய் காலை வெயிலை கூட அதிகபட்சமான ஒன்றாக நினைத்தது போல அதை விட்டு விலகி ஒரமாக படுத்து கிடந்தது. அருகில் போய் உட்கார்ந்து அதையே பார்த்து கொண்டிருந்தேன். நாயின் உடல் சீரற்று நடுங்கிக் கொண்டிருந்தது. அதன் காதுகள் மடங்கியிருந்தன. கண்கள் பழுத்து போய் ஒடுங்கியிருந்தது. …

உன்னத மனிதர். Read More »

இரண்டு ஆசான்கள்

சிறுகதை எழுத விரும்புகின்றவர்களுக்கு இரண்டு ஆசான்கள் அவசியமானவர்கள். ஒருவர் ஆன்டன் செகாவ், மற்றவர் மாபசான். இந்த இருவரும் சிறுகதை என்ற வடிவத்தை அதன் பல்வேறு உயர்நிலைகளுக்கு கொண்டு சென்றவர்கள். உலகின் தலை சிறந்த  கதை சொல்லிகள். காலம்தோறும் மாறிக் கொண்டேயிருக்கும் எல்லா இசங்களையும் தாண்டி இவர்களது சிறுகதைகள் அசலாக மனித வாழ்வின் பேருண்மைகளை  என்றென்றும் வெளிப்படுத்துகின்றன.  சிறுகதை எழுத விரும்புகின்றவன் இந்த ஆசான்களிடம் தன்னை  முழுமையாக ஒப்படைத்துவிட வேண்டும். இவர்களை தொடர்ந்து வாசிப்பதன் வழியே அவர்களின் கதைநுட்பத்தை …

இரண்டு ஆசான்கள் Read More »