நகுலன் வீட்டில் யாருமில்லை
Fables and Parables எனப்படும் குறுங்கதை மரபு உலகெங்கும் உள்ளது. இந்த கதை வகைமையின் சிறப்பு அடையாளங்களாக ஜென் கதைகள், முல்லா கதைகள், சூபி கதைகள், பைபிள் கதைகள், ஜாதகக் கதைகள் போன்றவற்றை குறிப்பிடலாம். இவை மனித மனதின் ஆதார இச்சைகளை, ஏக்கங்களை, துயரங்களை பேசுகின்றன. உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களான போர்ஹே, இதாலோ கால்வினோ, யாசுனாரி கவபட்டா, ஹென்ரிச் ப்யூல், காப்கா, மார்க்வெஸ், டொனால்டு பார்த்தல்மே, போன்றவர்கள் இந்த குறுங்கதை மரபை புத்துருவாக்கம் செய்திருக்கிறார்கள். நீதி போதிக்கவும் போதனைக்கும் …