சூரியனோடு பேசும் சோளம்
நீண்ட பல வருசங்களின் பின்பாக என் கனவில் சோளக்காடு வந்தது. ஆறடிக்கும் மேலாக வளர்ந்தருந்த சோளத்தட்டைகள் ஊடே நடந்து கொண்டிருந்தேன். சோளம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளர்ந்துவிடும். சோளத்தட்டைகளின் நுனி கையில் பட்டால் அறுத்துவிடும். சோளக்காட்டிற்குள் நடக்கையில் ஏற்படும் சப்தம் விசித்திரமானது. ஆள் முகம் தெரியாது. காற்றின் லேசான சலசலப்பு. உரசல். சோளம் முற்றியிருந்த காலத்தில் நிறைய குருவிகள் வந்து சேரும். அவை பறந்தபடியே சோளம் கொத்தும் காட்சிகள் மனதில் இன்றும் பசுமை மாறாமல் அப்படியே இருக்கின்றன. …