admin

அவமானத்தின் முன் மண்டியிடல்

எல்லா புனைவுகளையும் விடவும் விசித்திரமானது தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை. துயரத்தின் சாற்றை மட்டுமே பருகி வாழ்ந்த அவரது வாழ்வின் ஊடாகவே அவரது படைப்புகள் உருக்கொண்டிருக்கின்றன. எழுதுவதை தவிர வேறு எந்த வழியிலும் தன்னை ஆறுதல்படுத்திக் கொள்ள முடியாத ஒரு மனிதனின் வெளிப்பாடுகள் தான் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்துக்கள்.தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்பாக அவரைப் புரிந்து கொள்வது மிக அவசியம். தான் வாழ்ந்த காலம் முழுவதும் தொடர்ந்து துஷிக்கபட்டும் கடுமையான வசைகளும் ஏளனத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளான ஒரு எழுத்தாளன் அவர். …

அவமானத்தின் முன் மண்டியிடல் Read More »

எழுதுவது ஏன்?

இத்தாலிய யூத எழுத்தாளரான பிரைமோ லெவி (primo levi) நாஜிகளின் சித்ரவதைக்கு உள்ளான எழுத்தாளர். ஆஸ்விட்ஸ் முகாமில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அவர் தனது வேதியல் அறிவின் காரணமாக நாஜிமுகாமில் சாவிலிருந்து தப்பினார். வேதியல் பேராசிரியரான அவர் குறிப்பிடத்தக்க நாவல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிகவும் பிரசித்திபெற்றது எழுதுவது ஏன் என்ற கேள்விக்கு லெவி தந்த பதில். எழுதுவதற்கு ஒன்பது காரணங்கள் இருக்ககூடும் என்று வரையறுக்கும் பிரைமோ லெவி அதைப்பற்றி விரிவாக விளக்குகிறார் 1) எழுதுவதற்கான …

எழுதுவது ஏன்? Read More »

தெய்வம் தந்த வீடு

இரண்டு பெண்களை பலவருடமாக நான் என் நினைவிலே தேக்கி வைத்திருக்கிறேன். அவர்கள் என் கனவிலும் தனிமையிலும் எப்போதும் சப்தமின்றி இலை அசைவதை போல அசைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒன்று புத்தரின் மனைவி யசோதரா. மற்றவள் சங்க இலக்கியத்தின் கவிதாயிணி வெள்ளிவீதியார். அவர் எழுதியதில் நான்கோ ஐந்தோ பாடல்கள் மட்டுமே  சங்க இலக்கியத்தில் வாசிக்க கிடைக்கின்றன. ஆனால் அந்த பாடலின் ஊடாக வெளிப்படும் காமம் தொடர்பான அவளது ஏங்குதலும் உணர்ச்சி வெளிப்பாடும் வெகு அலாதியானது. கையில்லாத ஊமை கண்ணால் காவல் …

தெய்வம் தந்த வீடு Read More »

நகுலன் இல்லாத பொழுது.

  நினைவு ஊர்ந்து செல்கிறது  பார்க்க பயமாக இருக்கிறது  பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை நகுலன் பூனை இல்லை ஆனால் அதன் சிரிப்பு மட்டும் மறையாமல் இருந்து கொண்டேயிருந்தது என்று ஒரு வாக்கியம் ஆலீஸின் அற்புத உலகம் நாவலில் வருகிறது. நகுலனின் மரணம் பற்றிய தகவல் அறிந்த போது என் மனதில் தோன்றி மறைந்தது இந்த வரி.  பல வருடமாகவே நகுலனை போல சாவை உன்னிப்பாக அவதானித்து கொண்டிருந்தவர் வேறு எவருமேயில்லை . வீட்டுப்பூனையை போல சாவு அவரை …

நகுலன் இல்லாத பொழுது. Read More »