admin

அருவிக்காக காத்திருப்பது

இந்த நகரமே அருவிக்காக காத்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே குற்றாலத்திலிருக்கிறேன். அடர்ந்து மணக்கும் பகல் வெளிச்சம்.. அருவி வழியும் பாறையில் சப்தமில்லாமல் வழிந்து போகிறது வெயில். பொங்கி சீறும் அருவியை காண்பது போலவே அருவி இல்லாத வெறுமையை கடந்து செல்லும் கண்கள் ஏக்கத்துடன் பார்த்து போகின்றன.அருவி உருவாக்கிய ஊர் என்பது எவ்வளவு பெரிய விசித்திரம். நகரின் வீதிகள், வீடுகள் சாலைகள் மரங்கள் மலை உள்ளிட்ட அத்தனையும் அருவியோட்டத்தால் உருக் கொண்டவை. இந்த நகரின் நினைவில் அருவியோசை தீராமல் …

அருவிக்காக காத்திருப்பது Read More »

அ. முத்துலிங்கம்

எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் அ. முத்துலிங்கம் தனக்கான இணையதளம் ஒன்றினை உருவாக்கியிருக்கிறார்.  அவரது எழுத்துகள் தொலைதூர தேசங்களுக்கு சென்று பல வருசங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய சகோதரன் தனது அனுபவங்களை குடும்பத்தோரிடம் சொல்வது போன்ற நெருக்கமும் நெகிழ்வும் கொண்டது. முத்துலிங்கம் எழுத்துகளில் காணப்படும் உள்ளார்ந்த பகடி நினைத்து நினைத்து சிரிக்க கூடியது. கனடாவில் வசிக்கும் அவர் உலகநாடுகளில் பாதியைச் சுற்றிவந்தவர். அன்றாட நிகழ்வுகளை இத்தனை ரசனையோடும் ஈடுபாடுட்டோடும் அவதானித்து அதிலிருந்து தனது படைப்புகளை உருவாக்கும்  ஒரு …

அ. முத்துலிங்கம் Read More »

எண்ணும் மனிதன்

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் இரண்டாம் நாளில் அகல் பதிப்பகம் வெளியிட்டுள்ள மல்பா தஹான் எழுதிய எண்ணும் மனிதன் என்ற மொழிபெயர்ப்பு நூலை வாங்கி வந்தேன். அட்டையை பார்த்தபோது பாரசீகம் அல்லது அரபு மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். தமிழாக்கம் செய்திருப்பவர் கயல்விழி. மல்பா தஹான் என்பவர் யார். எந்த தேசத்தை சேர்ந்தவர். எந்த ஆண்டு இந்த நூல் வெளியானது என்று எந்த குறிப்பும் புத்தகத்தில் இல்லை.  பின் அட்டை குறிப்பும் மிக …

எண்ணும் மனிதன் Read More »

ஹொகுசாயின் அலைகள்

எரிமலை சீற்றத்தின் காரணமாக ஐரோப்பா முழுவதும்ஸ்தம்பித்து போயுள்ளதை பற்றிய தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு ஒன்றில்ஹொகுசாயின் புகழ்பெற்ற ப்யூஜி எரிமலை ஒவியம் ஒன்று கண்ணில் பட்டு மறைந்து போனது. மனதில் செய்து மறந்து உடனே ஹொகுசாயின் (Katsushika Hokusai) புகழ்பெற்ற ஒவியங்களான ப்யூஜி எரிமலை பற்றிய 36 சித்திரங்கள் என்ற ஒவியத்தொகுப்பை காணவேண்டும் போலிருந்தது. என்னிடமிருந்த ஒவிய புத்தகங்களில் இருந்து அதை தேடி எடுத்து புரட்டினேன். வுட் பிளாக் பிரிண்ட் வகையை சேர்ந்த சித்திரங்கள் அவை. 1826ல் வரையபட்டவை. …

ஹொகுசாயின் அலைகள் Read More »

பெண் வேஷம்.

பீகாக் ஒரு சிறிய நகர்புறம். அங்கே ரயில் தண்டவாளத்தை ஒட்டிய வீடு. தனிமையான சுற்றுப்புறம். ஒரு வீட்டின் கதவு லேசாகத் திறக்கபடுகிறது. வெளியே கிடந்த நாளிதழை ஒரு பெண் அவசரமாக எடுத்துக் கொண்டு கதவை மூடிக் கொள்கிறாள். அவள் தனியே சமையல் செய்கிறாள். வீட்டை சுத்தம் செய்கிறாள். துவைத்த துணிகளை வெளியே காயப்போடுகிறாள். சமைத்த உணவை ஒரு மேஜையில் எடுத்து வைக்கிறாள். கண்ணாடி ஜன்னல் வழியாக அடுத்த வீட்டு பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்புவதை ரகசியமாக வேடிக்கை பார்க்கிறாள். …

பெண் வேஷம். Read More »

நடனத்திற்குப் பிறகு

ஒரு நல்ல சிறுகதை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக டால்ஸ்டாயின் நடனத்திற்கு பிறகு (After the Ball -Leo Tolstoy ) கதையைச் சொல்லலாம். இக்கதை நூறு வருசங்களுக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. காதல் ததும்பும் இக்கதையை தனது 75 வது வயதில்  டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார். கசான் பல்கலைகழகத்தில் டால்ஸ்டாய் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ராணுவ அதிகாரி ஒருவரின் மகளை நடனவிருந்தில் கண்டார். பார்த்த நிமிசத்திலே அவள் மீது காதலாகி அவளையே சுற்றிச்சுற்றி வந்திருக்கிறார். அந்தப் பெண்ணும் அவர் …

நடனத்திற்குப் பிறகு Read More »

தற்செயல்

கடற்கரை மணலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். தற்செயலாக துருப்பிடித்த ஒரு பூட்டு கையில் தட்டுபட்டது. யாருடைய பூட்டு அது என்று தெரியவில்லை. மிகச் சிறியதாக மணலேறிப்போயிருந்தது. யார் இதை கொண்டுவந்தது. எதற்காக கொண்டு வந்திருப்பார்கள். எப்போதிலிருந்து இது கடற்கரையில் கிடக்கிறது. யோசிக்க யோசிக்க வேடிக்கையான எண்ணங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த பூட்டால் இரண்டு மணல்துகள்களை ஒன்று சேர்த்து பூட்டமுடியுமா? இல்லை கடல் அலையை கரை வரவிடாமல் பூட்டமுடியுமா? கடலையும் கால்களையும் ஒன்று சேர்க்கும் பூட்டு இருக்கிறதா? இல்லை …

தற்செயல் Read More »

பிறந்த நாள்

இன்று எனது பிறந்த நாள். பல வருசங்கள் பிறந்த நாள் அன்று வீட்டில் இல்லாமல் சுற்றி அலைந்திருக்கிறேன்.  சாலையோர கடைகளில் தனியே உணவருந்திவிட்டு பகிர்ந்து கொள்ள யாருமின்றி  தனித்திருந்த நாட்கள் அவை. பள்ளி காலங்களில் பிறந்த நாள் வருவதற்கு  ஆண்டின் துவக்கத்திலிருந்தே நாட்களை எண்ணிக்கொண்டேயிருந்ததை நினைக்கையில் வேடிக்கையாக இருக்கிறது. அன்றைய குதுôகலம் புத்தாடை பரபரப்பு இன்றில்லை. ஆனால் விருப்பமான நண்பர்கள், மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாட பண்டிகைகளை விட பிறந்த நாளே சரியானதாக படுகிறது. என் மீதும் …

பிறந்த நாள் Read More »

எல் வயலின்

வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நமது செயல்பாட்டில் தானிருக்கிறது. சுயலாபங்களுக்காக சகமனிதர்களை ஏமாற்றவும் காட்டிக் கொடுக்கவும் தயங்காத மனநிலை வளர்ந்து விஸ்வரூபம் கொண்டுள்ள சூழலில் எளிய மனிதர்களின் முக்கியத்துவத்தை மறுபடி மறுபடி எடுத்து சொல்லவேண்டியிருக்கிறது. குறிப்பாக சரித்திரம் பற்றிய நமது பொதுகருத்தில் தலைவர்களும், சாதனையாளர்களும், மகாராஜாக்களும், சர்வாதிகாரிகளும் மட்டுமே நிரம்பியிருக்கிறார்கள். சமூக மாற்றத்திற்கான உயிர் துறந்த சாதாரண மனிதர்கள் எவரும் அடையாளப்படுத்தபடவேயில்லை. சமூகமாற்றங்கள் அடித்தட்டு மகக்ளின் நம்பிக்கையும் உறுதுணையும் இன்றி ஒரு போதும் சாத்தியமாவதேயில்லை . அந்த உண்மையை …

எல் வயலின் Read More »

ஜராதுஷ்ட்ரா.

கடந்த சில வருசங்களில் நான் வாசித்த மொழிபெயர்ப்பு புத்தகங்களில் ஆகச்சிறந்தது நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் என்ற புத்தகமே. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. நீட்ஷேயை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ரவி. இவர் குவளை கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார். மாயா பஜார், பிள்ளை விளையாட்டு என்று இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன. நீட்ஷேயின் ஒரு படைப்பு முழுமையாக தமிழில் வெளியாவது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். கடவுள் இறந்து போய்விட்டார் …

ஜராதுஷ்ட்ரா. Read More »