ஷெல் சில்வர்ஸ்டைன்
குழந்தைகளுக்கான இலக்கியம் தமிழில் மிக குறைவு. உலக அளவில் பிரசித்தி பெற்ற பல குழந்தைகளுக்கான படைப்புகள் இன்னமும் தமிழில் வெளியாகவில்லை. நான் லூயி கரோலின் ஆலீஸின் அற்புத உலகம் நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். உலகம் முழுவதும் சிறுவர்களுக்கு சொல்லப்படும் இயற்கை குறித்த கதைகளை கால்முளைத்த கதைகள் என்று தனித்த நூலாக வெளியிட்டிருக்கிறேன். ஏழு தலை நகரம், கிறுகிறுவானம் என்ற இரண்டு நாவல்களை குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறேன். எழுத்தறிவு இயக்கம் சார்பில் மக்கள் வாசிப்பிற்கான எளிய புத்தகங்களை உருவாக்கிய போது …