admin

ஷெல் சில்வர்ஸ்டைன்

குழந்தைகளுக்கான இலக்கியம் தமிழில் மிக குறைவு. உலக அளவில் பிரசித்தி பெற்ற பல குழந்தைகளுக்கான படைப்புகள் இன்னமும் தமிழில் வெளியாகவில்லை. நான் லூயி கரோலின் ஆலீஸின் அற்புத உலகம் நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். உலகம் முழுவதும் சிறுவர்களுக்கு சொல்லப்படும் இயற்கை குறித்த கதைகளை கால்முளைத்த கதைகள் என்று தனித்த நூலாக வெளியிட்டிருக்கிறேன். ஏழு தலை நகரம், கிறுகிறுவானம் என்ற இரண்டு நாவல்களை குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறேன். எழுத்தறிவு இயக்கம் சார்பில் மக்கள் வாசிப்பிற்கான எளிய புத்தகங்களை உருவாக்கிய போது …

ஷெல் சில்வர்ஸ்டைன் Read More »

அர்திமிசியா.

பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த பெண் ஒவியரானஅர்திமிசியா ஜென்டிலெஸி ((ARTEMISIA GENTILESCHI அர்திமிசியாவாக நடித்திருக்கிறார். அவளது முகத்தில் கோபமும்  அவலமும் வெளிப்படும் விதம் அற்புதமானது. தன் உடலை தானே வியக்கும் போது அவளதுமுகத்தில் காணப்படும் அந்த மகிழ்ச்சி வார்தைகளால் சொல்ல முடியாதது. முன்னோடியான பெண் ஒவியரை பற்றிய சிறப்பான படமிது. அர்திமிசியா பற்றி அறியாதவர்கள் இதை ஒரு சிறந்த நாவலின் திரைவடிவமாகவும் கொள்ளலாம். ***

எரிந்த கூந்தல்.

சிறுகதைகெந்தியம்மாள் கத்திக் கொண்டிருந்தாள். வாசலில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்றிரண்டு அவள் கால்களை சுற்றியலைந்து கொண்டிருந்தன.“ஆரு சொல்றதையும் கேட்காம நடந்தா எப்படி.. அதான் காது எழவு கேட்கமாட்டேங்குது. கண்ணு வேற அவிஞ்சி போச்சி. வீட்ல கிடக்க வேண்டியது தானே. இன்னும் அப்படி என்னதான் அந்த பொட்டக்காட்டிலே இருக்கோ… எங்கயாவது வழியில விழுந்து செத்துப் போனா.. தூக்கிட்டு வந்து போடுறதுக்கு கூட வீட்ல நாலு ஆளு கிடையாது பாத்துகோங்க. யாராவது வந்து மண்டையை போட்டுடாருனு சொன்னாகூட எனக்கு என்னனு …

எரிந்த கூந்தல். Read More »

தனிமை கடந்து.

காப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் மற்றும் நாடின் கோடிமர் எழுதிய தந்தை காப்காவிற்கு எழுதிய கடிதம் இரண்டையும் ஒரு சேர நேற்றிரவு படித்து முடித்தேன். அப்பாவிற்கும் மகனுக்குமான பிணக்கும் சண்டைகளும் காலம் காலமாக தொடரக்கூடியவை. அப்பாவின் கெடுபிடிகள் தன் விருப்பத்தினை அழுத்தி தன்வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிட்டது என்று குற்றம் சாட்டுகிறான் காப்கா. அப்பாவோடு பெண்களுக்கு உள்ள உறவு பையன்களுக்கு இருப்பதில்லை.ஷெல் சில்வர்ஸ்டைன் என்ற அமெரிக்க கவி முதுமை பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரு சிறுவனும் அவனது …

தனிமை கடந்து. Read More »

பாஷோவின் மேகம்.

  Each day is a journey, and the journey itself home,” ஜென் கவிஞரான பாஷோ இயற்கையை நெருங்கி அறிவதற்காக ஒரு நீண்ட நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டார். அந்த பயண அனுபவம் குறித்து அவர் எழுதிய குறிப்புகளையும் பயணத்தின் ஊடே அவர் எழுதிய கவிதைகளையும் வாசித்த போது அற்புதமாக இருந்தது. இவை அவரது பயணத்தின் குறிப்புகள் சிலவற்றின் மொழியாக்கங்கள்.***நீண்ட சாலையின் துவக்கம்முடிவில்லாத காலத்தின் நித்ய பயணிகளே நாட்களும் மாதங்களும். கடந்து போன வருசங்களும் அப்படியானதே. …

பாஷோவின் மேகம். Read More »

எழுத்தின் நாயகர்கள்.

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களான காப்கா, ஆல்பெர் காம்யூ,  ஜேம்ஸ் ஐôய்ஸ், இசபெல் ஆலண்டே. டோல்கின், ஐசக் அசிமோவ், அல்டாக்ஸ் ஹக்ஸ்லி, ஹென்றி மில்லர், எக்ஸ்சுபரி, விளாதிமிர் நபகோவ், ஹருகி முராகமி, உம்பர்ந்தோ ஈகோ, சல்மான் ருஷ்டி, டோனி மாரிசன், மார்க்ரெட் அட்வுட் ரே பிராட்பரி. கார்சியா லோர்க்கா, வில்லியம் பாக்னர், டெரிதா, பூகோ, பாவ்லோ கொய்லோ, போன்ற ஆளுமைகளின் நேர்காணல்கள், அவர்களை பற்றிய ஆவணப்படங்கள், குறும்படங்களின்  பட்டியலிது. அவ்வப்போது இணையத்தில் தேடிப்பார்த்த இந்த படங்கள் எழுத்தாளர்கள் குறித்த …

எழுத்தின் நாயகர்கள். Read More »

உறங்க மறுப்பவனின் கனவுகள்

    கனவு காண்பதால் நான் உயிர்வாழ்வதாக நம்புகிறேன் என்று ஸ்ரைன்பெர்க் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். காற்றில் பறக்கும் நீர்குமிழிகளை போல வெறுமை கொள்ளும் ஜாலம் தான் கனவுகளா? கனவுகளும் துர்சொப்பனங்களும் ஒன்றல்ல? துர்சொப்பனங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன. நம் உடலை, மனதில் ஒடுங்கி கிடந்த வலியை, நினைவுகளை பீறிடச் செய்கின்றன.    மனித விசித்திரங்களில் ஒன்று உறக்கம். அதை விளக்கிச் சொல்வது எளிதில்லை. இயற்கை துயில் கொள்வதில்லை. அது விழித்து கொண்டேதானியிருக்கிறது. தூக்கம் ஒரு தாதியைப் போல …

உறங்க மறுப்பவனின் கனவுகள் Read More »

கனவில் பூக்கும் தாமரைகள்

 பத்து வருடங்களுக்கு முன்பாக ஒரு  கோடை இரவில் Three Seasons  என்ற வியட்நாமிய திரைப்படத்தை பார்த்தேன். எந்த ஆண்டு வெளியானது யார் முக்கிய நடிகர்கள் என்று எதுவும் தெரியவில்லை. டிவிடியின் முகப்பும் சீன மொழியில் அச்சிடப்பட்டிருந்தது. படம் துவங்கியதும் அறைக்குள் பசுமை பீறிடும் சைகோனின் நிலக்காட்சியும், அதிகாலையின் மென்னொளியும் பரவதுவங்கியது. அகன்ற இலைகளில் தண்ணீர் ததும்ப கண்ணுக்கு எட்டியவரை தாமரை பூத்துக்கிடக்கும் பெரிய நீர்நிலை . நாட்டுபடகின் துடுப்புகளை வலித்தபடியே தாமரை மலர் பறிக்க வரும்இளம் பெண்கள். …

கனவில் பூக்கும் தாமரைகள் Read More »

இணைய எழுத்து

மதுரையில் ஆகஸ்ட் 30ல் அன்று நடைபெற்ற உயிரோசை இணையஇதழின் ஒராண்டு விழாவில் பேசுவதற்காக நான் எழுதிய குறிப்புகள் இவை. இதில் ஒரு பகுதியை அந்த விழாவில் உரையாற்றினேன். *** நான் இணைய எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவன். தினம் இதற்காக குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறேன். வலைப்பக்கங்கள். இணையதளங்கள், இணைய இதழ்கள், என்று தேடித்தேடி வாசிக்கிறேன். புதிதாக யார் எழுதுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள். அது எப்படி வாசிக்கபடுகிறது என்பதில் என் அக்கறை எப்போதுமே அதிகமானது. இணையத்தில் …

இணைய எழுத்து Read More »

உப பாண்டவம் நான்காம் பதிப்பு.

உப பாண்டவம் நாவலின் நான்காவது பதிப்பு விஜயா பதிப்பகத்தால் இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ளது. அதற்கு எழுதப்பட்ட முன்னுரை.**இதிகாசங்கள் மாபெரும் சிகரங்களை போன்றவை. அவற்றை கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலை வளர்வதை போல மௌனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. பிரம்மாண்டத்தை மலை தன் இயல்பாக கொண்டிருப்பது போன்றதே இதிகாசங்களும். இதிகாசத்தினுள் நுழைவதற்குள் எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதற்கு துவக்கம் முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனை புள்ளிகள் …

உப பாண்டவம் நான்காம் பதிப்பு. Read More »