admin

மதுரை சந்திப்பு

உயிரோசை இணைய தளத்தின்  ஓராண்டு நிறைவு விழாவினை ஒட்டி உயிர்மை பதிப்பகம் நிகழ்ச்சி ஒன்றினை ஆகஸ்ட் 30, ஞாயிற்றுக்கிழமை காலை  மதுரையில் நடத்துகிறது.   இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும் – உயிரோசையை முன் வைத்து   என்ற அமர்வில் நானும் சாருநிவேதிதாவும்  சிறப்புரையாற்ற இருக்கிறோம். இதுதவிர 10 நூல்களையும் உயிர்மை அங்கே வெளியிடுகிறது. முக்கிய படைப்பாளிகளும் விமர்சகர்களும் உரையாற்ற இருக்கிறார்கள்.   நாள்: 30.8.20009 ஞாயிறு காலை 10 மணி இடம்: ஹோட்டல் சுப்ரீம்  110. …

மதுரை சந்திப்பு Read More »

சிரிப்பதற்காக அல்ல

பாலஸ்தீனிய கேலிசித்திரக்காரரான நஜி அல் அலியின்(Naji Al-Ali ) கார்டுன்களில் ஒன்றை இரண்டு மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக ஒரு இணையதளத்தில் கண்டேன். அதிலிருந்து அவரை பற்றி தேடி படித்து வந்தேன். சமீபத்தில் அவரது கார்டூன் புத்தகம் ஒன்று கையில் கிடைத்தது. (A Child in Palestine – The Cartoons of Naji al-Ali)  அதை புரட்டியதும் மனதில் தோன்றிய வாசகம் இவை சிரிப்பதற்கான கார்டுன் இல்லை என்பதே. பொதுவாக கேலிச் சித்திரங்கள் பார்த்தவுடன் சிரிப்பை வரவழைக்க …

சிரிப்பதற்காக அல்ல Read More »

விழிக்கும் ஏரி

ஒரு பின்னிரவில் கொடைக்கானல் வந்து இறங்கினேன். மலை தெரியாத அளவு இரவு நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல குளிர்.  குளிராடையை மீறி உடம்பு நடுக்கம் கொண்டது. மலை நகரங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு சென்று கதவை திறந்த போது கூடவே குளிரும் நுழைந்தது. முகம் பார்க்கும் கண்ணாடியெங்கும் குளிர் தெரிந்தது. கம்பளியை இழுத்து போர்த்திக் கொண்டு சுருண்டு கொண்டேன். உறக்கம் கொள்ளவில்லை. தாகமாக இருந்தது. …

விழிக்கும் ஏரி Read More »

சினிமா உருவாகிறது.

தமிழில் சினிமாஸ்கோப் முறையில் உருவாக்கபட்ட முதல் படம் ராஜராஜசோழன் . எழுத்தாளர் அரு. ராமநாதன் எழுதிய இந்த நாடகத்தை தமிழகம் எங்கும் டிகேஎஸ் சகோதரர்கள் சிறப்பாக கொண்டு சென்று புகழ் பெற்றனர். இதைத் திரைப்படமாக்கியவர் ஏ.பி. நாகராஜன். சிவாஜி ராஜராஜசோழனாக நடித்திருக்கிறார். படத்தை தயாரித்தவர் ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி ( அக்னி நட்சத்திரத்தில் வில்லனாக மிகச்சிறப்பாக நடித்திருப்பார் ) இந்த படம் துவங்கிய நாள் முதல் அதன் படப்பிடிப்பு முழுவதையும் கூடவே இருந்து அவதானித்து ஒரு …

சினிமா உருவாகிறது. Read More »

புத்தக உரையாடல்

உயிர்மை இதழ் புதிய புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் விதத்தில் புத்தக விமர்சனத்திற்கான சிறப்புபகுதி ஒன்றினை இதழில் துவக்கியுள்ளது. அதில் பல்வேறு புதிய புத்தகங்கள் அறிமுகமும் விமர்சனமும் செய்யப்படுகின்றன. இத்துடன் மாதம் ஒரு எழுத்தாளரின் ஒரு குறிப்பிட்ட புத்தகம் சார்ந்த உரையாடல் நடைபெறுகிறது. இந்த மாத உயிர்மையில் எனது சமீபத்திய சிறுகதை தொகுதியான  பதினெட்டாம் நூற்றாண்டின் மழை குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுப்பிய கேள்விகளும் அதற்கான எனது பதில்களும் இவை. ***சமீபத்தில் வெளிவந்த உங்கள் சிறுகதைத் தொகுப்பு …

புத்தக உரையாடல் Read More »

அகிரா குரசோவா உரையாடல்.

ஜப்பானின் புகழ் பெற்ற இயக்குனரான அகிரா குரசோவா  தன்னுடைய படங்கள் குறித்தும் அதிகம் பேசியதில்லை. தன்னுடைய சமகால இயக்குனர்களை பற்றியும் அதிகம் பேசியதில்லை. குரசோவா  படங்கள் பற்றி டொனால்டு ரிச்சி எழுதிய புத்தகம் மிகசிறப்பானது. ரிச்சி இதற்காக பல ஆண்டுகள் ஜப்பானிலே வாழ்ந்து ஜப்பானிய கலாச்சாரத்தை அறிந்து குரசோவா பற்றி எழுதியிருக்கிறார் திரைப்படங்கள் இதயத்தால் உணரப்பட வேண்டியவை. அதை மதிப்பீடு செய்து தர நிர்ணயம் செய்ய தனக்கு தெரியாது என்று எப்போதுமே அகிரா ஒதுங்கியிருந்திருக்கிறார். ஆந்த்ரே தார்கோவெஸ்கி, …

அகிரா குரசோவா உரையாடல். Read More »

பத்து இணையதளங்கள்

  கல்லில் வடித்த கவிதைகள். : சிற்பங்கள், ஒவியங்கள் மற்றும் பராம்பரியமிக்க கோவில்கள், என்று தமிழக நுண்கலையின் சிறப்புகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் இணையதளமிது. தமிழில் நான் தொடர்ந்து வாசிக்கும் இணையதளங்களில் இதுவும் ஒன்று. ஆங்கிலத்திலும் இந்த இணையதளம் வாசிக்க கிடைக்கிறது. புகைப்படங்கள். விளக்கங்கள், ஆய்வுகுறிப்புகள் என்று நேர்த்தியாகவும் நுட்பமாகவும் சிற்பக்கலை குறித்த கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இணையதளத்தின் வடிவமைப்பே அழகாக உள்ளது. சரித்திரம், தொல்லியல் குறித்த பல்வேறு இணைய தள இணைப்புகளும் இதில் காணப்படுகின்றன.  https://www.poetryinstone.in   …

பத்து இணையதளங்கள் Read More »

தஸ்தாயெவ்ஸ்கியோடு அலைந்த நாட்கள்.

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியை (Fyodor Dostoyevsky)பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பாக நண்பர் சாரு நிவேதிதா தன் வலைப்பதிவில்  எழுதியிருந்ததை வாசித்தேன். டெல்லியின் குளிர்நிரம்பிய சாலையில் கையில் வோட்காவுடன் அவர் தஸ்தாயெவ்ஸ்கியைக் கொண்டாடியதை வாசித்த போது  தஸ்தாயெவ்ஸ்கி குறித்த எனது நினைவுகளும் பீறிடத்துவங்கின.  சாரு இப்போது தஸ்தாயெவ்ஸ்கியின் மீதான மயக்கத்திலிருந்து விலகி வந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். என்னால் அப்படி வரமுடியவில்லை. நான் இன்றைக்கும் தஸ்தாயெவ்ஸ்கியின் தீராத ரசிகனே. என் இருபத்தைந்து வயதில் எனக்கிருந்த ஒரே தோழன் தஸ்தாயெவ்ஸ்கி மட்டுமே.   அந்தரங்கமான வலிகளை, …

தஸ்தாயெவ்ஸ்கியோடு அலைந்த நாட்கள். Read More »

சேவற்சண்டை

சேவற்சண்டை எனப்படும் சேவற்போரின் மீது எதற்காக ஆர்வம் வந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி ஒரு நாவல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று வரை அது சாத்தியமாகமலே போகிறது.  சிறுவயதில் ஒதுக்குப்புறமான நந்தவனங்களில் சேவற்சண்டை நடப்பதைக் கண்டிருக்கிறேன். சேவலை யார் வளர்ப்பார்கள். எப்படி பழக்குகிறார்கள்  என்று கவனித்தில்லை. ஆனால் சண்டை முடியும் வரை நின்று பார்ப்பேன். சண்டைச் சேவல்களைத் தெருவில் மேய விட மாட்டார்கள். அது ஆச்சரியமாக இருக்கும். கல்லூரி முடிந்த  …

சேவற்சண்டை Read More »

மரபினைத் தொடரும் கலை

திருவாரூரை சேர்ந்த டாக்டர் ஆர். திருநாவுக்கரசு அவர்களின் ஒவியக்கண்காட்சி இரண்டு வாரங்களுக்கு  முன்பாக சென்னையின் விநயாசா  கலைகாட்சியகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டிருந்தேன். துவக்கவிழாவில் தமிழகத்தின் புகழ்பெற்ற ஒவியரான ஆர்.பி. பாஸ்கரன் அவர்களை சந்தித்தேன். அவரது ஒவியங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமகால இந்திய ஒவியர்களில் பாஸ்கரனும் ஆதிமூலமும் இரு பெரும் ஆளுமைகள். அவரது தோற்றமே அவரது ஆளுமையின் தனித்த வடிவமாக இருந்தது. சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி, ஒவியர்கள் மனோகர், விஸ்வம், அரஸ், மற்றும் நண்பர்கள் மனுஷ்யபுத்திரன், …

மரபினைத் தொடரும் கலை Read More »