admin

எலுமிச்சை அரசியல்

இஸ்ரேலிய திரைப்படமான லெமன் ட்ரீ (Lemon Tree) படத்தை நேற்றிரவு பார்த்தேன். Eran Riklis   இயக்கிய இப்படம் 2008 ல் வெளியாகி இஸ்ரேலின் சிறந்த படமாக இரண்டு தேசிய விருதுகள் பெற்றிருக்கிறது. அரசியல் எலுமிச்சைப் பழங்களை கூட விட்டுவைப்பதில்லை என்பதே படத்தின் அடிச்சரடு. சமகால அரசியல் குறித்து இத்தனை ஆழமான மனபாதிப்பு தரக்கூடிய படம் எதையும் நாம் சமீபத்தில் கண்டதேயில்லை. இவ்வளவிற்கும் படத்தில் நேரடியான அரசியல் விவாதங்கள்,வசனங்கள் எதுவும் கிடையாது. அரசதிகாரம் தனிநபர் வாழ்க்கையில் நுழைய விரும்பினால் …

எலுமிச்சை அரசியல் Read More »

எப்படி படிக்கிறீர்கள்?

நீங்கள் எப்படி இவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீர்கள்? எங்கிருந்து உங்களுக்கு புத்தகங்கள் கிடைக்கின்றன. எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்று ஒரு நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். இதே கேள்வியை பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். எனது பதில் ஒன்று தான். புத்தகம் படிப்பது எனது ஒய்வு நேர விருப்பமில்லை. மாறாக அது எனது வேலை. இன்னும் சொல்வதாயின் அன்றாடச் செயல்பாடு. இருக்க இடமின்றி அலைந்து திரிந்த நாட்களில் கூட தினம் பத்து பக்கமாவது வாசித்திருக்கிறேன். பசியை மறப்பதற்கு புத்தகங்கள் உதவியிருக்கின்றன.  தாளமுடியாத வலியை …

எப்படி படிக்கிறீர்கள்? Read More »

சாம்பலும் பனியும்

முன்னொரு காலத்தில் மனிதர்களும் விலங்குகளும் ஒருவரோடு மற்றவர் இணைந்து இணக்கமாக வாழ்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்து பயம் கொள்ளவில்லை. ஒருவரையொருவர் பகை கொள்ளவில்லை. இரண்டும் ஒரே உயிர் இயக்கம் என்ற புரிதலோடு  ஒன்றுகலந்திருந்தனர். அதை நினைவுபடுத்துவதே எனது படத்தின் பிரதான நோக்கம் என்று கூறும் கிரிகோரி கோல்பெர்ட் (Gregory Colbert) மனிதனும் விலங்கும் ஒன்று கலந்த ஒரு மாயவெளியை தன்னுடைய ஆஷஸ் அண்ட் ஸ்நோ (Ashes and Snow) என்ற படத்தின் மூலம் உருவாக்கி காட்டியிருக்கிறார். இது ஒரு …

சாம்பலும் பனியும் Read More »

ஐந்து வலைப்பக்கங்கள்

இணைய வலைப்பக்கங்களில் எழுதுகின்றவர்களில் பலர் மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். உலக சினிமா, புத்தகங்கள், வாழ்க்கை அனுபவம், நகைச்சுவை. கட்டுரைகள், விவாதம் என்று தொடர்ந்து பலரது பதிவுகளை வாசிப்பது முற்றிலும் மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை தருவதாக உள்ளது.  இணைய எழுத்து தரும் உடனடித்தன்மையும்  உலகம் தழுவிய பங்கேற்பும் முக்கிய மாற்றுஊடகவெளியாக இதை உணரச்செய்கிறது. சமீபத்தில் நான் வாசித்த மிக சுவாரஸ்யமான வலைப்பக்கங்கள் இவை.  அடிக்கடி : பத்திரிக்கையாளர் அந்தணன்  எழுதும் சினிமா தொடர்பான பதிவுகள் வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியவை. …

ஐந்து வலைப்பக்கங்கள் Read More »

ஈரக்காகிதம்

உதயம் தியேட்டரில் இருந்து கேகேநகர் செல்லும் சாலையில் ஈஎஸ்ஐ மருத்துவமனையின் அருகில் உள்ள நடைபாதையில் புத்தகங்களை குவித்து போட்டிருக்கும் ஒரு பழைய புத்தக கடைக்காரருடன் எனக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம். சில நாட்கள் எனக்கு போன் செய்து   பழைய புத்தகங்கள் வந்துள்ளது பாருங்கள் என்று அழைப்பார். ஐம்பது வயதைத் தாண்டிய உருவம். பெயர் பாய். எப்போதுமே வெள்ளை ஜிப்பா அணிந்திருப்பார். பல ஆண்டுகாலமாக குப்பை தூசி நிரம்பிய காகிதங்களுடன் வாழ்ந்து நுரையீரல் பாதிப்பு கொண்டவர், சக்கரை நோயும் …

ஈரக்காகிதம் Read More »

சிறுநடை.

கூடல் இலக்கிய சந்திப்பிற்காக மூன்று நாட்கள் மதுரையில் இருந்தேன். ஒரு நாள் மாலையில் நானும் எழுத்தாளர் பிரபஞ்சன் மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் மூவரும் நேதாஜி சாலை வழியாக  நடக்க துவங்கி மீனாட்சியம்மன் கோவிலை முழுமையாக சுற்றி புதுமண்டபம், வடக்கு வாசல், சிம்மக்கல் சாலை என  மூன்று மணி நேரம் நடந்து சிறிய வீதிகளுக்குள்  அலைந்து திரிந்தோம். நேதாஜி சாலை மிக பரபரப்பாக மாறியிருக்கிறது. வாகன போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றம் அந்த வீதியின் இயக்கத்தை பெரிதாக மாற்றியிருக்கிறது. திருவிழா …

சிறுநடை. Read More »

ஐமாக்ஸ்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உலகின் மிகப்பெரிய ஐமாக்ஸ் திரையரங்கு வளாகம் உள்ளது. அதை திரையரங்கம் என்று சொல்லி எளிமை படுத்த முடியாது. அது ஒரு உலகம்.  பிம்பங்களின் பிரபஞ்சம். ஐமாக்ஸில் திரைப்படம் பார்த்தவர்கள் அதன்பிறகு வேறு எந்த திரையிடலையும் ரசிக்க முடியாது. வழக்கமாக நாம் பார்க்கும் திரையிடலை போன்று பத்து மடங்கு பெரிய திரை. படம் பார்க்கும் அனுபவமே அற்புதமானது.  டிக்கெட்டின் விலை 25 டாலர்.  அதில் இரண்டு முறை சினிமா பார்த்திருக்கிறேன். கனவுலகிற்குள் நாம் நுழைந்துவிட்டது …

ஐமாக்ஸ். Read More »

எழுத நினைத்த நாவல்

நாவல் எழுதுவதற்காக ஐரோப்பிய எழுத்தாளர்கள் யாருமில்லாத தீவுகள் , பனிமலை சார்ந்த விடுதிகள், மலைநகரங்களை தேடிச் சென்று அங்கேயே தங்கியிருந்து எழுதுவார்கள் என்று வாசித்த நாளில் இருந்து நானும் அப்படி எங்காவது பயணம் செய்து நாவல் எழுதலாமே என்று விருப்பமாக இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முறை கோணங்கியும் நானும்  இதற்காக தனுஷ்கோடிக்கு சென்று சில நாட்கள் இருந்தோம். கடல் பார்த்ததை தவிர ஒன்றும் நடக்கவில்லை. காட்டிற்குள் போனால் இயற்கையோடு இணைந்த மனநிலை உருவாகும். புதிதாக  …

எழுத நினைத்த நாவல் Read More »

குட்டி இளவரசன்

இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றான குட்டி இளவரசன் இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக  வெளியீடாக வந்துள்ளது. மிக சிறப்பாக இந்த நாவலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் மதனகல்யாணி மற்றும் வெ. ஸ்ரீராம். அந்துவான்த் செந்த் எக்ச்பெரி ( Antoine de Saint-Exupery)பிரெஞ்சு எழுத்தாளர். இவர் விமான ஒட்டியாக ராணுவத்தில் பணியாற்றியவர். இவர் ஒரு முறை விமானகோளாறு காரணமாக …

குட்டி இளவரசன் Read More »

நூறு சிறந்த சிறுகதைகள்

கேணி இலக்கியச் சந்திப்பில் பேசுவதற்காக என் விருப்பக் கதைகளை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்த போது இளம் வாசகர்களுக்காக நான் முக்கியம் என நினைக்கும் சிறுகதைகளை அடையாளம் காட்டலாமே என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப் பட்டியல் கட்டாயம் வாசிக்கபட வேண்டிய தமிழ்சிறுகதைகளாக நூறு கதைகளைப் பட்டியிலிட்டிருக்கிறேன். இது தரவரிசைபட்டியல் இல்லை.  மாறாக பல்வேறுவிதமான கதை சொல்லும் முறைகளில் அமைத்த சிறந்த சிறுகதைகள் இவை. இவர்கள் தனித்துவமாக கதை சொல்லும் எழுத்தாளர்கள். என் நினைவில் உள்ள கதைகளிலிருந்து …

நூறு சிறந்த சிறுகதைகள் Read More »