திரையில் ஒடிய ரயில்
தமிழ் சினிமாவிற்கும் ரயிலுக்கும் உள்ள தொடர்பு விசித்திரமானது. சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற ரயில்வே ஊழியர் தான் மௌனப்படங்களை ஊர் ஊராக எடுத்துச் சென்று திரையிட்டவர். ஆரம்ப கால கறுப்பு வெள்ளைப் படங்களில் கதையில் ஏற்படும் கால இட மாற்றங்களைத் தெரிவிப்பதற்காகவே ரயில் பயன்படுத்தபட்டிருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இரண்டு ரயில் காட்சிகள் எப்போதும் பசுமையாக உள்ளன. ஒன்று தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி பத்மினி இருவரும் ரயிலில் செல்லும் காட்சி. அதுவும் பத்மினியின் அருகாமையில் உட்காருவதற்காக …