கேணி
எழுத்தாளர் ஞாநி அண்மையில் கேகேநகருக்கு வீடு மாறி குடியேறியிருக்கிறார், அந்த வீட்டின் பின்னால் அழகான கிணறும் தோட்டமுமாகவும் உள்ளது. அந்த கிணற்றடியினை நண்பர்கள் சந்தித்து பேசும் வெளியாக பயன்படுத்தலாமே என்ற எண்ணத்தில் கேணி என்ற இலக்கிய சந்திப்பு அமைப்பை ஞாநி உருவாக்கியுள்ளார் நல்ல சிறுகதைகளை, நாவல்களை, கவிதைகளை, கட்டுரைகளைப் படித்து ரசிக்கும் பழக்கத்தையும் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தையும் இளைய தலைமுறை சிநேகிதர்களிடம் ஊக்குவிப்பது தொடர்பாக கேணி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு …