admin

சிறிது வெளிச்சம்

ஆனந்த விகடனில் சிறிது வெளிச்சம் என்ற புதிய தொடரை துவங்கியுள்ளேன். துணையெழுத்து கதாவிலாசம், தேசாந்திரி போல இந்த தொடரும் என்னை சுற்றிய நிகழ்வுகள் மனிதர்கள், அவர்களின் அறியப்படாத சிறப்பம்சங்கள் பற்றியதாக இருக்கும். சிறிது வெளிச்சம் என்பது குபராவின் சிறுகதை தலைப்பு. அந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்தமானது.  அதற்காக குபராவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். விடிகாலையில் வீட்டின் அடுப்படியில் சிறிய வெளிச்சம் ஒன்றிற்குள் பிறர் தூக்கம் கெட்டுவிடாமல் வேலை செய்யும் அம்மாவை கண்டிருக்கிறேன். பெண்களுக்கு சிறிய வெளிச்சம் …

சிறிது வெளிச்சம் Read More »

கோடை பதிவுகள் 2

விருதுநகரின் பழைய பேருந்து நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்தேன். தார் உருகியோடுவது போன்ற வெயில். ஒதுங்குவதற்கு நிழல் அற்ற நகரம். அருகாமை கிராமத்தின் சாலைகள் நன்றாக போடப்பட்டிருக்கின்றன. ஆனால் நகரின் உள்ளே பழுதடைந்து போன சாலைகள் . நடமாடவே முடியவில்லை.   நான் சென்ற நாளில் 109 டிகிரி வெயில் என்றார்கள். உள்ளுர்வாசிகளுக்கு அது பழகிப்போன ஒன்று. அந்த வெயிலில் ஒரு ஆள் சாவகாசமாக நின்றபடியே சினிமா போஸ்டரில் உள்ள பெயர்களை வாசித்து கொண்டிருந்தார். காலத்தின் பின்னால் சென்று …

கோடை பதிவுகள் 2 Read More »

கோடை பதிவுகள் 1

சிப்பிபாறை என்ற ஊரைக்கடந்து சென்று கொண்டிருந்தேன். உச்சிவெயில் நேரம். பாதி சிதைந்து போன சிறியமலையொன்று கண்ணில் பட்டது. காரை விட்டு இறங்கி அந்த மலையை பார்த்தபடியே இருந்தேன். வெயில் வடிந்து கொண்டிருந்தது. அப்படி அரித்து போன மலையை அருகில் கண்டதேயில்லை. அருகில் யாருமில்லை. தனியே நடந்து மலையின் மீதேறினேன். வெயில் கொதித்து கொண்டிருந்ததால் பாறையில் நடக்க முடியவில்லை. அந்த ஊர் வேட்டை நாய்களுக்கு பிரசித்திபெற்றது. வெயில் தாங்க முடியாமல் ஊரே அடங்கியிருந்தது. ஏதோ காரணம் தெரியாத ஈர்ப்பு …

கோடை பதிவுகள் 1 Read More »

கோடை பயணம்

  கோடைகால பள்ளி விடுமுறை காரணமாக என் பையன்கள் பயணம் மேற்கொளளும் போது நானும் அவர்களுடன் மதுரை. கோவில்பட்டி, ராசபாளையம் விருதுநகர். திருவில்லிபுத்துர்ர் என அலைந்து கொண்டிருக்கிறேன்.   மே 20 வரை இந்த பயணம் தொடரும்,   சென்னையை மறந்து கரிசலின் கோடையின் பகலில் அலைகிறேன்,   மரநிழல் கண்ட இடத்தில் தேடித்தேடி அமர்கிறேன்,   கோடை வலியது என்பதை இயற்கை இம்முறையும் நிருபண்ம் செய்கிறது.   நாளுக்கு ஒரு நண்பர்கள் வீடு, பேச்சு. புழுதி …

கோடை பயணம் Read More »

கொட்டுக்காரர்கள்.

நேற்று நண்பர் ஒருவரின்  குடியிருப்பில் வாட்ச்மேனாக உள்ள வயதான ஒருவரை  சந்தித்தேன். அவரது தோற்றம் வித்யாசமாக இருந்தது.  யார் என்று விசாரித்தேன். அவர் மிகுந்த தயக்கத்துடன் நான் கொட்டுக்காரன் என்றார். அந்த வார்த்தை எனக்கு பரவசமாக இருந்தது. ஏன் இங்கே வந்துவிட்டீர்கள் என்றேன். இப்போ யாரு கொட்டு அடிக்க கூப்பிடுறா. ஊர்ல சாந்து சட்டி சுமந்துகிட்டு இருந்தேன்,  போதும்னு கிளம்பி வந்துட்டேன். இங்கே ஆயிரத்திஇருநூறு ருபாய் மாச சம்பளம் என்றார். அவரது விரல்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். எத்தனை …

கொட்டுக்காரர்கள். Read More »

வில்லா கேதர்

எனக்கு விருப்பமான அமெரிக்க பெண் எழுத்தாளர் வில்லா கேதர் . நான் அறிந்தவரை தமிழில் இவரது நாவல் எதுவும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆனால் உலகின் சிறந்த நூறு நாவல்கள் பட்டியலை எவர் சிபாரிசு செய்யும் போதும் வில்லா கேதரின் பெயர் நிச்சயம் இடம் பெற்றுவிடுகிறது. அந்த அளவு தனித்துவமும் நுட்பமான கதை சொல்லலும் கொண்டவர். வில்லியம் பாக்னரை  பிடிக்கின்றவர்களுக்கு வில்லா கேதரை நிச்சயம் பிடிக்கும். இருவரும் கதை தேர்வு மற்றும் சொல்முறையில் நிறைய ஒற்றுமை கொண்டவர்கள். இரண்டு …

வில்லா கேதர் Read More »

ஒடும் ஆறு.

கடந்த வெள்ளிகிழமையன்று கர்நாடகாவில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் சென்றிருந்தேன்.  அதிகாலை நேரத்தில் பயணம் செய்தேன். விடியாத இருட்டும் விட்டுவிட்டு பெய்யும் மழையுடன் கூடிய பயணம். கோடையிலும் வயலின் பசுமை கண்ணில் படுகிறது. மண்டியா மாவட்டத்தின் கிராமங்கள் மிக அழகானவை. முற்றிலும் வயல்களுக்கு நடுவில் உள்ள சிறிய கிராமங்கள். ஆற்றங்கரையில் முளைத்துள்ள கிராமங்கள், ஆலமரங்களும் ஒற்றையடி பாதைகளும் கொண்ட கிராமங்கள் என்று காலத்தின் பின்செல்கிறோமோ என தோன்றும் தோற்றங்கள். வாத்து கூட்டம் ஒன்று மண்பாதையில் தனியே சென்று கொண்டிருந்தது. அடிவானத்தினுள் …

ஒடும் ஆறு. Read More »

என்ன விளையாடுவது?

கோடை விடுமுறை துவங்கியது முதல் என் பையன்களுக்கு உள்ள தீராத கேள்வி என்ன விளையாடுவது, யாரோடு விளையாடுவது.?  பள்ளிநாட்களில் விளையாட்டு என்பது ஒரு மணி நேர மகிழ்ச்சி அவ்வளவே. ஆனால் கோடை விடுமுறையின் முப்பது நாற்பது நாட்களை  எப்படிக் கழிப்பது என்பதே என்ன விளையாடுவது என்ற கேள்வியாக மாறி நிற்கிறது. இந்த கேள்விக்கு என்னிடம் உள்ள பதில் பயணம். கோடை முழுவதையும் ஊர் ஊராக பயணம் செல்வதில் கழிக்கலாம் என்பதே என் விருப்பம். ஆழ்ந்து யோசித்தால் இது  …

என்ன விளையாடுவது? Read More »

சிற்பமொழி

இரண்டு நாட்களுக்கு முன்பாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமகால இலக்கியப் போக்குகள் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு கும்பகோணம் சென்றிருந்தேன். அங்கே கலை விமர்சகர் தேனுகா  அவர்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். இசை, சிற்பம், ஒவியம், இலக்கியம் என்று ஆழ்ந்து அறிந்தவர் தேனுகா.  பேச்சின் நடுவில் நீங்கள் அவசியம் வித்யாசங்கர் ஸ்தபதியைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லி அவரைக் காண்பதற்காக அழைத்து சென்றார். கும்பகோணம் சுவாமிமலை செல்லும் சாலையில் உள்ளது வித்யாசங்கர் ஸ்தபதியின் வீடு. …

சிற்பமொழி Read More »

செகாவ்வும் கார்க்கியும்

நூறு வருடங்களுக்கு முன்பு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ்வை சந்திப்பதற்கு சக எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி  சென்றார். இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பற்றிய நினைவுகுறிப்புகள் ஒன்றை இரண்டு நாட்களின் முன்பாக வாசித்தேன். செகாவ் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கடன்தொல்லை காரணமாக வீட்டை விட்டு ஒடிப்போனார். தானே வேலை செய்து சம்பாதித்து படித்தவர். மருத்துவம் படித்து ஏழைகளுக்கு  இலவச வைத்தியம் செய்தபடியே எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் …

செகாவ்வும் கார்க்கியும் Read More »