admin

கதையின் நாவு

ஒரு ஊரிலே ஒரு நரி, அத்தோடு கதை சரி . என ஒரு கதையிருக்கிறது. நான் அறிந்தவரை உலகிலேயே மிகச் சிறிய கதைகளில் இதுவே மிகத்தொன்மையானதாக இருக்ககூடும். இந்த ஒற்றைவரி தரும் கதையின் பன்முகதன்மையே இன்று நவீன கதையின் முக்கிய அடையாளமாகவும் அதே நேரம் தனித்துவமானதொரு கதாமுறையாகவும் உள்ளது.. இக்கதை கதையைக் கேட்பவன் மனதில் தானே உருவாக்கி கொள்ளவேண்டிய கதையாக உள்ளது. நரி கதைகளின் உலகில் ஆதிகுடி. இந்தியர்களும் கிரேக்கர்களும் அரேபியர்களும் கீழைத்தேய நாடுகளின் பயணிகளும் நரியைப் …

கதையின் நாவு Read More »

கின்ஸ்கி

          – கடவுளுக்கு நண்பன் சாத்தானுக்கு தோழன். கிளாஸ் கின்ஸ்கி (Klaus Kinski)  உலகத் திரைப்படங்களை தொடர்ந்து பார்க்கும் பலருக்கும் அறிமுகமான  ஜெர்மானிய நடிகர். இன்னும் சிலர் கின்ஸ்கியின் பெயரை அறியாமலே அவரது படங்களை தொடர்ந்து பார்த்திருக்க கூடும். 132 படங்களில் நடித்தவர். நடிப்பில் பல புதிய பரிமாணங்களை உருவாக்கியவர்.உலக சினிமாவில் எனக்கு பிடித்தமான நடிகர்களில் கின்ஸ்கி முக்கியமானவர். இவரது அகூர் தி ராத் ஆப் காட் (Aguirre, the Wrath …

கின்ஸ்கி Read More »

மகாகவி பாரதியின் கடிதங்கள்

கடிதம் -1 –  1901ம் ஆண்டு தன் மனைவி செல்லம்மாளுவிற்கு எழுதியது. (கடிதம் எழுதும் போது பாரதிக்கு வயது பத்தொன்பது. பாரதி பயங்கரவாத இயக்களுடன் சேர்ந்துவிட்டான் என்று உறவினர் எழுதிய கடிதம் கண்டு பயந்து போன செல்லம்மாள் எழுதிய கடிதத்திற்கான பதிலிது.)                                                         ஒம்                                                                                                                ஸ்ரீகாசி                                                                                                                ஹனுமந்த கட்டம் எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசிர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். …

மகாகவி பாரதியின் கடிதங்கள் Read More »

நம்பிக்கையின் மீதேறி நடந்து

        மலையேற்றதைப் பற்றிய புத்தகங்களை வாசிப்பது என்பது எனக்கு மிகவும் விருப்பமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு அன்னபூர்ணா என்ற சிகரத்தில் மலையேற்றம் செய்த பிரெஞ்சு மலையேற்ற குழுவின் புத்தகத்தை வாசித்தேன். அது போலவே ஹெமிங்வேயின் கிளிமஞ்சரோ பயணம் பற்றிய புத்தகம் சுவாரஸ்யமானது. நான் மேற்குதொடர்ச்சி மலையேறி பலமுறை அலைந்திருக்கிறேன்.  அப்படி சமீபத்தில் நான் வாசித்த சீன் ஸ்வானரின் எவரெஸ்ட் மலையேற்றம் பற்றிய Keep Climbing புத்தகம் என்னை உலுக்கிவிட்டது. சாசகம் என்பது மலையேறுவதில் …

நம்பிக்கையின் மீதேறி நடந்து Read More »

எரியும் பனிக்காடு

சமீபத்தில் நான் வாசித்த தமிழ்நாவல்களில் முக்கியமானது எரியும்பனிக்காடு. பி.எச்.டேனியலால் எழுதப்பட்ட இந்த நாவல் ரெட் டீ என்ற பெயரில் ஆங்கிலத்தில் முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்பாக வெளிவந்தது. இந்த நாவல் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ்நாட்டின் வால்பாறையில் தேயிலை தோட்டம் உருவானதையும் அங்கு வேலைக்குச் சென்ற கூலிகளின் அவலவாழ்வையும் விவரிக்கிறது. தமிழக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வை நுட்பமாக விவரிக்கும் ஒரே நாவல் இது தான் என்பேன். இந்த நாவலைத் தமிழாக்கம் செய்தவர் இரா. முருகவேள். 1940 ம் ஆண்டுகளில் …

எரியும் பனிக்காடு Read More »

குஞ்நுண்ணி கவிதைகள்.

குஞ்நுண்ணி மலையாளத்தில் முக்கியமான நவீன கவிஞர். இவரது கவிதைகள் நேரடியான மொழியில் எளிய அனுபவங்களை முன்வைக்ககூடியவை.  அவரது கவிதைகள் குஞ்நுண்ணி கவிதைகள் என்று தமிழில் மொழியாக்கம் செய்து தனித்தொகுப்பாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் பா. ஆனந்த குமார். மலையாள நவீன கவிதையில் நாட்டார் இலக்கிய மரபுகளை முன்னிறுத்தி சமுக அரசியல் உணர்வோடு கவிபாடுகின்ற போக்கினை சார்ந்தவர் குஞ்நுண்ணி என்று அவரை அறிமுகம் செய்து வைக்கிறார் ஆனந்த குமார். வலப்பாடு என்ற ஊரில் பிறந்த குஞ்நுண்ணி கோழிக்கோடு ராமகிருஷ்ண மிஷின் …

குஞ்நுண்ணி கவிதைகள். Read More »

பேச்சின் வாலைப் பிடித்தபடி..

எங்காவது போய் பேசிக் கொண்டிருக்கலாமா என்ற கேள்வி பலவருடமாக என்னை இலக்கற்று ஏதேதோ இடங்களுக்கு இழுத்து சென்றிருக்கிறது. நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள், தோழர்கள், பேராசிரியர்கள், எளிய மனிதர்கள் என்று பலருடனும் பேசி விவாதித்து சண்டையிட்டு கழித்த பகலிரவுகள் என்னளவில் மிக முக்கியமானவை. இன்று அந்த இடங்களைக் கடந்து செல்கையில் இங்கே நின்று கொண்டு தானா அத்தனை மணி நேரம் பேசியிருக்கிறோம் என்று வியப்பாக இருக்கிறது. இடம் சூழல் பசி மறந்து பேசிய பொழுதுகளும் மனிதர்களும் சிதறிப்போய்விட்டார்கள். …

பேச்சின் வாலைப் பிடித்தபடி.. Read More »

சந்திரபாபு – தட்டுங்கள் திறக்கப்படும்.

        நேற்றிரவு சந்திரபாபு இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தைப் பார்த்தேன். சந்திரபாபுவின் நகைச்சுவை எனக்கு விருப்பமானது. அவரது பாடல்களையும் தொடர்ந்து கேட்கக் கூடியவன். சந்திரபாபுவின் குரல்  அலாதியானது. தட்டுங்கள் திறக்கப்படும் படத்தை சில வருசங்களுக்கு முன்பாக ஒரு முறை தொலைக்காட்சியொன்றில் பார்த்திருக்கிறேன். பாதியில் இருந்து பார்க்கத் துவங்கிய போது யார் இதை இயக்கியது என்று வியப்பாக இருந்தது. பிறகு அது சந்திரபாபு இயக்கிய படம் என்று தெரிய வந்ததில் இருந்து படத்தை …

சந்திரபாபு – தட்டுங்கள் திறக்கப்படும். Read More »

இல்மொழி

 – குறுங்கதை சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட வீடு.  வீட்டில் அவர்களையும் சேர்த்து இருபத்தியொரு பேர் இருந்தார்கள். இரண்டு அண்ணன், அண்ணி, ஆச்சி, சித்தி சித்தப்பா என்று யாவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். அதற்கிருந்த ஒரே காரணம் அவர்களது கோவில்கடைகள். கோவிலின் மண்டபத்தில் அவர்களுக்கு மூன்று கடைகளிருந்தன. ஒன்று படக்கடை , காலண்டர். சுவாமி படங்கள், குங்குமம் விபூதி விற்பது. இன்னொன்று வளையல் …

இல்மொழி Read More »

கணிதமேதை வாழ்ந்த வீடு

            கும்பகோணத்தில் உள்ள கணித மேதை ராமானுஜத்தின் நினைவில்லத்திற்கு சென்றிருந்தேன்.  கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தெருவில்  உள்ள ராமானுஜம் வாழ்ந்த வீடு தன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்கபட்டு வருகிறது. சொருகு ஒடுகள் வேய்ந்த தாழ்வான வீடு. சிறிய திண்ணையும் ரேழியும் தெரு பார்த்த ஜன்னல் கொண்ட படுக்கையறையும் காலத்தின் கறைபடிந்த கட்டிலுமாக உள்ளது குனிந்து செல்ல வேண்டிய அளவு மிக தாழ்வான கூரையமைப்பு. சிறிய சமையல் அறை, பூஜை …

கணிதமேதை வாழ்ந்த வீடு Read More »