admin

சாலை திறந்து கிடக்கிறது.

      சாலையின் நடுவே எங்காவது  பழுதடைந்து போன பைக் , கார் அல்லது பேருந்தின் காரணமாக கைவிரல்களை உயர்த்திக்காட்டி லிப்ட் கேட்பவர்களை கண்டிருக்கிறீர்களா? நம்மில் வெகுசிலரே அவர்களுக்கு உதவி செய்திருப்போம். மற்றவர்கள் நமது வாகனத்தில் எதற்கு தெரியாத மனிதர் என்று திரும்பிக் கூட பார்ப்பதில்லை. . அரிதாக சிலர் தங்களது வாகனங்களில் வழிப்பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வார்கள். அப்படி சாலையில் மாட்டிக் கொண்டு உதவி வாகனத்தை பிடித்து ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் …

சாலை திறந்து கிடக்கிறது. Read More »

குற்றாலத்து சிங்கன் சிங்கி.

              குற்றாலக்குறவஞ்சியை வாசிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. திரிகூட ராஜப்ப கவிராயரால் எழுதப்பட்டது. அதிலும் சாரல் அடிக்கும் நாட்களில் குற்றாலத்தில் உள்ள பூங்காவில் அமர்ந்தபடியே  குற்றாலக்குறவஞ்சி வாசித்திருக்கிறேன். கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் காலம் கரைந்து பின்னோடிவிட வசந்தவல்லி பூப்பந்தாடும் காட்சி விரியத்துவங்கிவிடும். குற்றாலத்தின் ஆதிசித்திரம் அந்தக் கவிதைகளில் பதிவாகியுள்ளது. கானகக்குறத்தி வருகிறாள். அவளது எழிலும் குரலும் அதில் வெளிப்படும் காட்டுவாழ்வின் நுட்பங்களும், மழை பெய்யும் மேகமும், அடர்ந்த விருட்சங்களும், …

குற்றாலத்து சிங்கன் சிங்கி. Read More »

ஹென்றி கார்த்தியே பிரஸான்

          – நூற்றாண்டுவிழா. A photograph is not a painting, a poem, a symphony, a dance. It is not just a pretty picture, not an exercise in contortionist techniques and sheer print quality. It is or should be a significant document, a penetrating statement, which can be described in a very simple …

ஹென்றி கார்த்தியே பிரஸான் Read More »

படித்ததும் பிடித்ததும் 2

வலைப்பக்கங்களில் அவ்வப்போது சில சுவாரஸ்யமான கட்டுரைகள் செய்திகள் வெளிவருகின்றன. அப்படி என் கவனத்தை கவர்ந்தது இக்கட்டுரை. இன்னும் கிராமப்புறங்களில் காணப்படும் விசித்திர நடைமுறைகளில் ஒன்று மொய் பணம் தருவது. அதை பற்றிய சுவாரஸ்யமாக தகவல்களை தருகிறது இந்தக் கட்டுரை.   சின்ன கவுண்டர் படத்தில் இப்படியொரு மொய்விருந்து காட்சியிருக்கிறது. ஆனால் இவ்வளவு விபரமாக அதில் குறிப்பிடப்படவில்லை. ** மொய்விருந்து     நம்வீட்டுத் திருமணத்தின்போது பணமாகவும் பொருளாகவும் மணமக்களுக்கு அன்பளிப்புகள் தரப்படுகிறதல்லவா?………….. அதை நமக்குக் கொடுத்தவர் பின்னொரு காலத்தில் …

படித்ததும் பிடித்ததும் 2 Read More »

நூறு உலகத் திரைப்படங்கள்

எனது வலைத்தளத்தை பார்வையிடும் பலரும் உலகசினிமாவில் எதைத் தேர்வு செய்து பார்ப்பது என்ற விபரத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு தனிப்பட்ட மின்னஞ்சலில் விபரங்கள் அனுப்பிய போதும் இதே சந்தேகம் தொடர்வதால் தற்போது எனக்கு விருப்பமான நூறு படங்களின் பட்டியல் ஒன்றை வெளியிடுகிறேன். இவை மட்டுமே உலகத்திரைப்படங்கள் அல்ல. இவை என் விருப்பத்தின் படி முக்கியமான நூறு திரைப்படங்கள். இதற்கு நான்கு வருசத்தின் முன்பாக உலகசினிமா புத்தக தயாரிப்பின் போது நூறு சிறந்த படங்களின் பட்டியல் ஒன்றை தயார் …

நூறு உலகத் திரைப்படங்கள் Read More »

சிற்றுரையும் பேருரையும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றின் ஆண்டுவிழாவில் பேசவேண்டும் என்று அழைத்திருந்தார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல எல்லா பள்ளிகளிலும் நடைபெறும் விஷயம் என்பதால் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டினேன். மொத்தமே ஒரு மணி நேர நிகழ்ச்சி இதில் நீங்கள் பத்து நிமிசம் பேசினால் போதும் என்று தெரிந்த ஒரு ஆசிரியர்  வழியாக அன்புக் கட்டளையிட்டு கலந்து கொள்ளச் செய்தார்கள். ஐந்து மணிக்கு நிகழ்ச்சி என்பதால் நாலரை மணிக்குச் சென்றேன். ஐநூறு பேருக்கும் …

சிற்றுரையும் பேருரையும். Read More »

பதேர் பாஞ்சாலி

            எங்கிருக்கிறாய் துர்கா ? இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் பதேர்பாஞ்சாலி திரைப்படத்தை பின்னிரவில் தனியாக உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன்.  இதற்கு முன்பாக இருபது முறைகளுக்கும் மேலாக பார்த்திருக்கிறேன் என்றாலும் அந்த படம் அந்தரங்கமாக சில சலனங்களை எனக்குள் உருவாக்குகிறது என்பதற்காகவே அடிக்கடிப் பார்ப்பேன். விளக்கின் சுடர் நிசப்தமாக அசைந்து கொண்டிருப்பது போல காட்சிகளின் வழியே  ஏதோ துண்டப்பட்டு சலனம் கொள்ளத் துவங்கியிருந்தேன். முன்பு ஒரு போதும் பார்த்தறியாத ஒரு …

பதேர் பாஞ்சாலி Read More »

நான்கு அறிமுகங்கள்

அநங்கம்  சிற்றிதழ் நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்ட வாசகர்கள், படைப்பாளிகள் மலேசியாவில்  நிறைய இருக்கிறார்கள். சிறுகதைகள் கவிதைகள் என்று தொடர்ந்து செயல்படும் அவர்கள் தங்களது வெளிப்பாட்டிற்காக ஒன்றிரண்டு சிற்றிதழ்களை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வெளிவந்துள்ளது அநங்கம் என்ற சிற்றிதழ். இதன் முக்கிய நோக்கமாக மலேசியாவில் உள்ள தீவிர எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் வாசகர்களையும் ஒன்றிணைப்பது என்ற பிரகடனத்துடன்  முதல் இதழ் வெளியாகி உள்ளது. பொதுவில் சிறுபத்திரிக்கைகள் நடத்துவது பொருளாதார சிரமம் கொண்டது. அத்தோடு …

நான்கு அறிமுகங்கள் Read More »

மூன்று கடிதங்கள்

அன்பிற்குரிய ராமகிருஷ்ணன் தங்களது கவிதையும் கோவிலும் கட்டுரையை வாசித்தேன். கபிலருக்கு விழுப்புரம் மாவட்டத்தின் திருக்கோவிலூரில் ஒரு கோவில் உள்ளது. கபிலர் வடக்கு இருந்து உயிர் துறந்த குன்று அது என்று குறிப்பிடப்படுகிறது. அந்த குன்றில் கபிலருக்கு தனியான  கோவில் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ளது அக்கோவில். அதை கபிலர் குன்று என்று கூறுகிறார்கள். Nandakumar K nandakumar.raman@gmail.com ***  அன்பின் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,      வணக்கம். தங்களின் எழுத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஏராளமான வாசகர்களின் நானும் …

மூன்று கடிதங்கள் Read More »

சிங்கப்பூரில் ஐந்து நாட்கள்

      சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்காக 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையான ஐந்து நாட்கள் சிங்கப்பூர் சென்றிருந்தேன். பள்ளி கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல்களும் சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகள்  மற்றும் பொது வாசகர்களுடன் நிகழ்த்தபட்ட உரையாடல்களும் சிறப்புரைகளும் நன்றாக அமைந்திருந்தன. இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தை சார்ந்த திருமதி புஷ்பலதா, மணியம், மற்றும் நாராயண மூர்த்தி, …

சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் Read More »