admin

பாட்டிகளின் கடவுள்

பனிரெண்டு வயதில் திருவிளையாடல் படம் பார்க்கும்வரை கடவுள் பற்றிய பயம் எனக்குள் ஆழமாக வேர் ஊன்றியிருந்தது. அதற்கு முக்கிய காரணம்  ஒவ்வொரு நாளும் தேவாரம் திருவாசகம் படிக்க வேண்டும் என்ற ஒழுங்கை கொண்டிருந்த வைதீகமான குடும்பம் என் தாத்தாவின் வீடு. கடவுள் எப்போதுமே எங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு தெரியாமல் எதையும் செய்துவிட முடியாது. ஆகவே பயபக்தியோடு நடந்து கொள்ள வேண்டும் என்று பழக்கபடுத்தபட்டிருந்தோம். கோவிலுக்கு போவதும் விரதமிருப்பமிருப்பதும் வீட்டின் மாற்றமுடியாத பழக்கங்கள். நெற்றியில் திருநீறு பூசாமல் …

பாட்டிகளின் கடவுள் Read More »

காதில்லாத அரசன்

புதிய குறுங்கதை. கடலும் மலையும் சூழ்ந்த ஒரு நாட்டை காதில்லாத அரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவனது மூதாதையர்கள் காலத்திலிருந்தே அரசவம்சத்தில் பிறக்கும் எவருக்கும் காதிருப்பதில்லை. அது அவர்களுக்கு பெரிய குறையாகவும் இல்லை. அரசனுடைய காதுகளை உண்மையான செய்திகள் எந்த காலத்திலும் எட்டியதேயில்லை என்பதால் காதை அவர்கள் பயன்படுத்தாமல் இருந்திருந்து காதற்று போய்விட்டதாக ஒரு நம்பிக்கையிருந்தது. அதை மெய்பிப்பது போலவே அரசவம்சத்தில் பிறக்கும் குழந்தைகளும் காதில்லாமலே பிறந்தன. காதில்லாத அரசன் அரண்மனையை விட்டு வெளியே வருவதுமில்லை . யாரையும் …

காதில்லாத அரசன் Read More »

பொய் சொல்லும் பூனை

சில நாட்களுக்கு அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஒரு நண்பர் நான் படிப்பதற்காக ஜோகன் ஸ்பாரின் தி ராபிஸ் கேட் ( Joann Sfar -The Rabbi`s Cat )  என்ற கிராபிக்நாவலை வாங்கிவந்திருந்தார். இதை சில மாதங்களாகவே தேடிக் கொண்டிருந்தேன். தற்செயலாக அவர் வரும்போது நினைவூட்டவே மறக்காமல் வாங்கி வந்திருந்தார். காமிக்ஸ் புத்தகங்களின் மீதான விருப்பம் சிறுவயது முதல் என்னோடு சேர்ந்து வளர்ந்து வரக்கூடியது. இப்போதும் புதிதாக ஏதாவது காமிக்ஸ் கண்ணில் பட்டால் வாங்கி வாசிப்பதுண்டு. காமிக்ஸ் …

பொய் சொல்லும் பூனை Read More »

புத்தக கண்காட்சியில் சில மணி நேரம்.

சனிக்கிழமை மதியம் புத்தக கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். புத்தகத் திருவிழா துவங்கி  மூன்றாம் நாள் . மாலையில் செல்வது என்று முதலில் முடிவுசெய்திருந்தேன். ஆனால் பின்மதிய நேரத்தில் சற்று கூட்டம் குறைவாக இருக்க கூடும் என்பதால் முதலில் புத்தக கண்காட்சியை முழுமையாக ஒரு முறை சுற்றி பார்த்துவிடலாம் என்று கிளம்பினேன். பெட்ரோல் தட்டுபாடு சென்னையின் அன்றாட பயணத்தை வெகுவாக பாதித்திருக்கிறது. ஆவலாக புத்தகக் கண்காட்சிக்கு போய்வரலாம் என்று திட்டமிட்டிருந்த பல நண்பர்கள்  பெட்ரோல் கிடைக்காத காரணத்தால் வீட்டிலிருந்து வெளியே …

புத்தக கண்காட்சியில் சில மணி நேரம். Read More »

நடந்து தீராத கால்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு மாலையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாட்டின் துவக்க விழாவினை காண்பதற்காகச் சென்றிருந்தேன். விழாவிற்கு தோழர் எஸ். ஏ. பெருமாள் வந்திருந்தார்.  எனது பள்ளி நாட்கள் துவங்கி இன்று வரை என் மீது அதிக அக்கறை கொண்டவர்களில் அவர் முக்கியமானவர். புகழ் பெற்ற உலக இலக்கியப் புத்தகங்களை தந்து  என்னைப் படிக்க வைத்து, என் சிறுகதைகள் வெளியான நாட்களில் அதைப் பற்றி விவாதித்து எப்போதும் என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். அவரைச் …

நடந்து தீராத கால்கள். Read More »

நன்றி

        எனது புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்தும் மின்னஞ்சல் வழியாக எனக்கு வாழ்த்துகள் அனுப்பிய இணையதள வாசகர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி. விழா சிறப்பாக நடைபெற்றது. புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகத்தின் ஸ்டாலில் விற்பனைக்கு கிடைக்கும். சென்னை புத்தக சந்தை 8 ம் தேதி முதல் 18 வரை நடைபெறுகிறது. ஜனவரி 10 , 11, 12  மற்றும்  13, 16, 17 தேதிகளில் மாலையில் ஐந்து …

நன்றி Read More »

2008 விருப்ப பட்டியல்

ஒரு ஆண்டு நம்மை கடந்து செல்கிறது என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு மாயம். இன்றைக்கும் பழக்க தோஷத்தில் 2008 என்று தான் கையெழுத்து இடுகிறேன். மனதிலிருந்து 2008 முழுவதுமாக வெளியேற வில்லை. திட்டு திட்டான நினைவுகளாகவும் சிறு சம்பவங்களாகவும் உடைந்த கண்ணாடி துண்டின் சில்லுகளை போல பழசை நினைவுபடுத்திக் கொண்டு தானிருக்கிறது. ஒரு வருடத்தின் நினைவாக நமக்குள் மிஞ்சியிருப்பது அதிகபட்சம் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள்.  அதற்கான காரணமும் கவனமும் ஆளுக்கு ஆள் மாறுபட்டது  …

2008 விருப்ப பட்டியல் Read More »

தாமரை பூத்த குளம்.

என் நண்பரின் அறிமுகத்தால் சுசாந்த் மிஸ்ரா என்ற ஒரியாவைச் சேர்ந்த இயக்குனரை 1994 ல் சந்தித்தேன். சுசாந்த் மிஸ்ரா இந்தர் தனுர் சாயா என்ற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர். அவரது இன்னொரு படம் பிஸ்வபிரகாஷ் உலக படவிழாக்களில் கலந்து கொண்டு பாராட்டை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான பரதநாட்டிய கலைஞரை பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரிப்பதற்காக அவருக்கு தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனம் நிதியுதவி அளித்திருந்தது. அந்த படத்திற்கான பின்ணணி ஆய்வு மற்றும் இடங்களை …

தாமரை பூத்த குளம். Read More »

வலி தரும் முள்.

முள் – முத்துமீனாள். ஆழிபதிப்பகம் .சென்னை. 24. விலை ரூ.50. சமீபத்தில் வெளியாகியுள்ள முள் என்ற முத்துமீனாளின் நாவலை வாசித்தேன். முத்துமீனாள் கவிஞர் பௌத்த அய்யனாரின் மனைவி. சிறுபத்திரிக்கை உலகில் அய்யனார் பெரிதும் அறியப்பட்டவர்.  இதை ஒரு நாவல் என்பதை விடவும் முத்துமீனாளின் நினைவுக்குறிப்புகள் என்றே வகைப்படுத்த வேண்டும். முத்துமீனாள் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட தொழுநோய் பற்றியும் அதற்காக கும்பகோணத்தில் உள்ள கிறிஸ்துவ மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிட்சை செய்த போது ஏற்பட்ட நினைவுகளையும், நோய் நீங்கிய …

வலி தரும் முள். Read More »

தாய்முகம்

நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தன்னுடைய சிறுவயதில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றினை விவரித்தார். அவரது ஊர்  மதுரை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம். பிறந்த சில மாதங்களிலே  தாயை இழந்தவர். அம்மாவின் முகம் கூட அவருக்குத் தெரியாது. அவர்கள் ஊரில் அடிக்கடி பெண்களுக்கு பேய் பிடித்து கொள்ளுமாம். அப்படி ஒரு நாள் அவர்கள் வீதியில் இருந்த பெண் ஒருத்திக்கு பேய் பிடித்து கொண்டுவிட்டது என்று பேயோட்டும் நபரை அழைத்து வந்திருக்கிறார்கள் பேயோட்டி தன் கையில் உள்ள …

தாய்முகம் Read More »