சிப்பியின் வயிற்றில் முத்து
வங்காளத்தில் 1980 ஆண்டு வெளியான jhinuker pete mukto என்ற நாவல் சமகால இந்திய நாவல்களில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இதை எழுதியவர் போதி சத்வ மைத்ரேய. இந்த நாவல் தமிழில் சிப்பியின் வயிற்றில் முத்து என்ற பெயரில் எஸ். கிருஷ்ணமூர்த்தியால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வங்காள நாவலின் சிறப்பம்சம் இது முழுமையாக தமிழக மக்களின் வாழ்வை விவரிக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள பெர்னாந்தோ பிரிவு மீனவர்களின் வாழ்க்கைபாடுகளையும் அவர்களுக்குள் …