admin

சிப்பியின் வயிற்றில் முத்து

          வங்காளத்தில்  1980 ஆண்டு வெளியான jhinuker pete mukto  என்ற நாவல் சமகால இந்திய நாவல்களில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இதை எழுதியவர் போதி சத்வ மைத்ரேய. இந்த நாவல் தமிழில் சிப்பியின் வயிற்றில் முத்து என்ற பெயரில் எஸ். கிருஷ்ணமூர்த்தியால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வங்காள நாவலின் சிறப்பம்சம் இது முழுமையாக தமிழக மக்களின் வாழ்வை விவரிக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள பெர்னாந்தோ பிரிவு மீனவர்களின் வாழ்க்கைபாடுகளையும் அவர்களுக்குள் …

சிப்பியின் வயிற்றில் முத்து Read More »

சிகேகே இலக்கிய விருது.

                      கடந்த முப்பதாண்டு காலமாக ஈரோட்டில் செயல்பட்டு வரும் சிகேகே அறக்கட்டளையின் இலக்கியத்திற்கான விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பதினைந்தாயிரம் பணமும் பாராட்டுச் சான்றிதழும் கொண்டது. இதற்கான விழா ஈரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் ஜுலை மாதம் 27தேதி  ஞாயிற்றுகிழமை மாலை (27.7.08) நடைபெற உள்ளது.

டால்ஸ்டாயோடு நடந்தேன் 2

எல்லா அப்பாக்களும் பையன்களை விடவும் பெண்கள் மீதே அதிக அன்பும் நெருக்கமும் கொண்டிருக்கிறார்கள். அதுவும் எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. ஏதோவொரு மகள் அப்பாவின் மிகுந்த அன்பிற்கும்  பரிவிற்கும் உள்ளாகிறாள். அப்படி டால்ஸ்டாயின் அன்பிற்கு உரியவளாக இருந்தவள் மாஷா. தன்னுடைய குழந்தைகளை முத்தமிடுவதை கூட ஒரு சடங்கு போல செய்யக்கூடியவர் டால்ஸ்டாய். தாயின் வளர்ப்பில் மட்டுமே உருவானவர்கள் அவரது பிள்ளைகள். அந்த நிலையில் மாஷா ஒருத்தி மட்டும் அப்பா எழுதிக்கொண்டிருக்கும் போது அருகில் நின்று பேசுவது அவரை கொஞ்சுவது …

டால்ஸ்டாயோடு நடந்தேன் 2 Read More »

டால்ஸ்டாயோடு நடந்தேன் 1

        கடந்த ஒரு மூன்று வார காலமாகவே புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அவரது மனைவியின் நாட்குறிப்புகள். மகன் மகள்களின் நினைவுப்பதிவுகள் மற்றும் டால்ஸ்டாயின் இறுதி நாட்கள் பற்றிய அவரது உதவியாளரின் குறிப்புகள் , டால்ஸ்டாயின் கடிதங்கள் என்று நாலைந்து புத்தகங்கள் அவரது வாழ்வை விவரிக்கின்றன. 1) Leo Tolstoy`s Diaries & Letters 2) The Diaries of Sophia Tolstoy 3) …

டால்ஸ்டாயோடு நடந்தேன் 1 Read More »

கவிதையும் கோவிலும்

              புகழ் பெற்ற கவிஞர்களுக்கு சிலை வைக்கும் வழக்கம் உலகமெங்கும் உள்ளது. பல நாடுகளில் கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களது வாழ்விடங்கள் நினைவகமாக்கப்பட்டு மாதந்தோறும் சிறப்பு கூட்டங்கள், கவிதை வாசித்தல் என்று அக்கறையோடு செய்யப்படுகின்றன. இந்தியாவில் காந்திசமாதி போன்று ஒன்றிரண்டு நினைவிடங்களை தவிர மற்றவை முறையான பராமரிப்பின்றி கவனிப்பார் அற்றே கிடக்கின்றன. இதில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் நினைவிடங்களின் கதி எப்படியிருக்கும் என்பது உலகமறிந்த செய்தி. தமிழகத்தில் வள்ளுவர், ஔவை, …

கவிதையும் கோவிலும் Read More »

அறிந்த அவசரம்

நம் நூற்றாண்டின் தீர்க்கமுடியாத நோய்களில் ஒன்று அவசரம். வீடு, பணியிடம் பேருந்து, மின்சாரரயில், வணிகவளாகம் பள்ளி, கோவில், வங்கி, மருத்துவமனை, தியேட்டர் என எங்கும் அவசரம் பொங்கி வழிகிறது. சிறியவர்கள் பெரியவர்கள் என்று பேதமில்லாமல் இந்த நோய்க்கு நம்மை ஒப்புக் கொடுத்திருக்கிறோம். எதற்காக இவ்வளவு அவசரம் என்று ஒரு போதும் நம்மை நாமே கேட்டுக் கொண்டதில்லை. அவசரம் வைரஸ் கிருமிகளை  விடவும் மோசமானது. அது உடலுக்குள் புகுந்த மறுநிமிசம் கைகால்கள் தானே உதற துவங்கிவிடுகின்றன. முகம் சிவந்துவிடுகிறது. …

அறிந்த அவசரம் Read More »

படித்ததும் பிடித்ததும் 1

தளசிங்கமாலை என்ற நூலிலுள்ளது இப்பாடல் “ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திடச்செவ் வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நல்வியாழன் வர வேயுறு வெள்ளி வலை சோர, நானுன்னை மேவுதற்குத் தாய் சனியாயினளே, ரகுநாத தளசிங்கமே“ இப்பாடலின் பொருள்: சூரியன் அஸ்தமிக்கச் சந்திரன் தோன்ற, சிவந்த வாயிலிருந்து விரக தாபத்தினால் வெப்பக்காற்று வீச, மன்மதன் பாணமெய்ய, தென்றல் வீச, மூங்கிலையத்த அழகிய வளையங்கள், விரக தாபத்தினால் சோர்ந்து விழ, நான் உன்னை வந்து சேர்வதற்குத் தாய் குறுக்கே நிற்கின்றாளே …

படித்ததும் பிடித்ததும் 1 Read More »

Read Singapore -2008 . சிங்கப்பூர் தேர்வு

 சிங்கப்பூர் தேசிய நூலகம் வருடம் தோறும் Read Singapore என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. நல்ல இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் புதிய படைப்பியக்கத்தை உருவாக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.  இதற்கெனத் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்களை பரவலான வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதுடன், எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் செய்வதற்கும்  தேசிய நூலகம் சிறப்பாக ஏற்பாடு செய்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்த ஆண்டு நான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன்.  இதற்கென   எனது எட்டு சிறுகதைகள்  பெயரில்லாத ஊரின் பகல்வேளை என்ற தலைப்பில் தனி …

Read Singapore -2008 . சிங்கப்பூர் தேர்வு Read More »

ஒரு லட்சம் பார்வைகள்

எனது இணையதளம் துவங்கப்பட்டு இந்த மூன்று மாத காலத்தில் ஒரு லட்சம் முறை புரட்டப்பட்டு  பார்வையிடப்பட்டிருக்கிறது என்ற சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இதை சாத்தியமாக்கிய இணையதளத்தின் வாசகர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். உங்களது பார்வைகளும் அக்கறையும் பலவேளைகளில் என்னை உற்சாகமூட்டியிருக்கின்றன. யோசிக்க வைத்திருக்கின்றன. நம்பிக்கையை உருவாக்கியிருக்கின்றன. அதற்காக யாவருக்கும் என் நிறைந்த அன்பும் நன்றியும். எனது இணைய தளத்தில் வாசகர்களின் பங்களிப்பிற்கு இடமில்லையே என்ற ஆதங்கம் பலரிடமிருந்தும் வந்து கொண்டேயிருக்கிறது. அது உண்மையில்லை. …

ஒரு லட்சம் பார்வைகள் Read More »

சிறுநுரை.

பால்ய வயதின் நினைவுகள் அவ்வப்போது உதிரியாகத் தோன்றுவதும் அதைச் சிறிய குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வதும் சில வருடங்களாகவே நடந்து வருகின்றது. இது போன்ற பால்யத்தின் சிறுகுறிப்புகளை மட்டும் தனித்து ஒரு நூலாக வெளியிடலாம் என்ற எண்ணம் உள்ளது. இவை கதைகள் போலவும் இருக்கின்றன. கதைகளை விட நெருக்கமாகவும் இருக்கின்றன. அதிலிருந்து சில மாதிரிகள். வட்டக்கண்ணாடி. அப்போது நாங்கள் சூலக்கரை என்ற சிறிய கிராமத்திலிருந்தோம். பத்து வயதிருக்கும் போது கையில் வைத்து பார்ப்பது போன்ற வட்டகண்ணாடி ஒன்றை …

சிறுநுரை. Read More »