admin

கடைசிப் பெண்

ஆங்கிலத்தின் வருகை பல ஆதி இனக்குழுக்களின் மொழியை உலகிலிருந்து முற்றிலும் அழித்து ஒழித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பூர்வகுடி மக்களின் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இன்று தொன்மையான மொழியறிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்றாக்கி விட்டது ஆங்கில அதிகாரம். சமீபத்தில்  அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென்மத்திய பகுதியில் பல ஆயிரம் வருட பராம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசி பெண் மேரி ஸ்மித்  ஜோன்ஸ்  இறந்து போனார். இவள் தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண். …

கடைசிப் பெண் Read More »

இளையராஜாவின் திருவாசகம் கேட்டபோது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம் பாடலை கேட்கத் துவங்கி அன்றிரவு முழுவதும் இளையராஜாவின் பாடல்களாக கேட்டுக் கொண்டிருந்தேன். அது போதாமல் மறுநாள் நண்பர்கள் வசமிருந்த இளையராஜாவின் பாடல்கள் தொகுப்பில் இருந்து 250 பாடல்கள் கொண்ட இரண்டு குறுந்தகடினை வாங்கி வந்து கேட்கத் துவங்கினேன். நாலைந்துநாட்கள் இளையராஜா மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். ஜானகி, சித்ரா, ஜென்சி, பாலசுப்ரமணியம்,ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், இளையராஜா என்று மாறும் குரல்களும் இசையமைப்பின் வியப்பும் மேலிட இளையராஜாவின் …

இளையராஜாவின் திருவாசகம் கேட்டபோது. Read More »

சினிமாவும் ஜெயகாந்தனும்

பத்து பதினைந்து வருடத்தின் முன்புள்ள பழைய கணையாழி இதழ் ஒன்றில் வெளியான ஜெயகாந்தனின் நேர்காணல் இது. வெளிப்படையான பேச்சும் திறந்த விமர்சனமும் கொண்ட இதை புதிய  வாசகர்களின் கவனத்திற்காக இங்கே பதிவு செய்கிறேன். ** கணையாழி: சினிமா துறைக்கு வந்ததைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஜெயகாந்தன்: ஆமாம். நானாக வலியவரவில்லை. நண்பர்களோடு ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணனுடன் படத்தின் தரம்பற்றி விவாதம் செய்ததுண்டு. இவ்வளவு பேசறியே, நீதான் ஒரு படம் நீ சொல்ற மாதிரி எடுத்துக்காட்டு என்றார்கள். `சரி` என்று இறங்கிவிட்டேன். …

சினிமாவும் ஜெயகாந்தனும் Read More »

காட்சிக் கூண்டு

 – சிறுகதை மாநகராட்சியின் பொதுப்பூங்காவில் அப்படியொரு கூண்டினை உருவாக்க வேண்டும் என்றொரு யோசனையை யார் முன்மொழிந்தது என்று தெரியவில்லை. ஆறுமாதங்களாகவே நகரின் முக்கிய பூங்காங்கள் யாவும் மறுசீரமைப்பு செய்யபட்டு வந்தன. செயற்கை நீருற்றுகள், சிறார்களுக்காக சறுக்கு விளையாட்டுகள், அலங்கார விளக்குள், ஆள் உயர காற்றடைக்கபட்ட பொம்மைகள்  நாளிதழ்கள் வாசிப்பதற்காக வாசகசாலை என்று பூங்காங்களின் தோற்றம் பொலிவு கண்டிருந்தது. ஆனால் நகரின் வேறு எந்த பூங்காவிலும் இல்லாத தனிச்சிறப்பாக இரட்டை சாலைசந்திப்பின் அருகிலிருந்த ஔவை பூங்காவில் இரும்பு கூண்டு …

காட்சிக் கூண்டு Read More »

கூர்க்காவின் பகல்

விழித்துக் கொண்டிருந்த எத்தனையோ பின்னிரவுகளில் அந்த நடைச்சப்தத்தை கேட்டிருக்கிறேன். யாருமற்ற தெருவில் தனியே விசில் அடித்தபடியே சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்லும் நாற்பது வயதை கடந்த  கூர்க்காவை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். என்ன வேலையிது. எதற்காக இந்த மனிதன் தெருத்தெருவாக இரவில் சுற்றியலைகிறான் என்று புரியாமலும் கூட இருக்கும். ஒரு நாள் நேரத்திற்கு உறங்காமல் போனால் அடுத்தநாள் நமக்கு வேலை ஒடுவதில்லை. சதா எரிந்து விழுகிறோம். தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்கின்றவர்கள் கூட வருசம் முழுவதும் …

கூர்க்காவின் பகல் Read More »

ஒத்திகை.

நேற்று கேரளாவிலிருந்து ஜோஸ் என்ற நவீன நாடக இயக்குனர் என்னைப் பார்க்க வந்திருந்தார். எனது அரவான் நாடகத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து கொள்வது தொடர்பான சந்திப்பு அது. பேச்சு தமிழ் நவீன நாடகச் சூழலைப் பற்றி திரும்பியது. வருடத்திற்கு பத்து நவீன நாடகங்கள் கூட சென்னையில் நடத்தப்படுவதில்லையே அது ஏன் என்று கேட்டார். நவீன நாடகங்கள் பெரும்பாலும் தனிநபர்களின் ஆர்வம் மற்றும் தொடர்ந்த ஈடுபாட்டின் காரணமாக மட்டுமே தமிழில் நடைபெற்று வருகின்றன. நாடகங்களை நிகழ்த்துவதில் உள்ள முக்கியப் …

ஒத்திகை. Read More »

விசித்ரி

     –  புதிய சிறுகதை விசித்ரி என்று அழைக்கபடும் அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் சித்ரலேகா என்றும் அவள் தனது பனிரெண்டு வயதின் பின்மதியப் பொழுதிலிருந்து இப்படி நடந்து கொள்கிறாள் எனவும் சொன்னார்கள். அந்த மதிய பொழுதில் என்ன நடந்தது என்பதை பற்றி யாரும் இந்நாள் வரை அறிந்திருக்கவில்லை.  அன்று கோடை வெயில் உக்கிரமேறியிருந்தது. வேம்பில் கூட காற்றில்லை. வீதியில் வெல்லத்தின் பிசுபிசுப்பு போல கையில் ஒட்டிக் கொள்ளுமளவு படிந்திருந்தது வெயில். வீட்டுக் கூரைகள், அலுமினிய பாத்திரங்கள் …

விசித்ரி Read More »

துயர்மிகு பொழுது

சமீபத்திய ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதல்களும் போரின் அவலமும் என்னை பெரிதும் துயரமடையச் செய்து வருகின்றன. சில இரவுகளில் கணிப்பொறி முன்பாக எழுத அமரும் போதெல்லாம் எழுதுவதால் என்ன செய்துவிட முடியும் என்ற குற்றவுணர்ச்சி பெருகி வதைக்க கணிப்பொறியை அணைத்துவிட்டு மௌனமாக வெறும்திரையை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பது நடந்திருக்கிறது. திரையை அணைத்து விடலாம் ஆனால் நினைவுகளை. பதுங்கு குழிக்குள் நடுங்கியபடி நிற்கும் சிறார்களின் கண்களில் பீறிடும் பயம் அடிமனதில் தீக்கோலால் சூடு இடுவது போன்ற பச்சைவலியை உருவாகிறது. இருப்பிடம் அழிக்கபட்டு, …

துயர்மிகு பொழுது Read More »

ஜீ.வி. ஐயர்

. ஐந்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு காலையில் கன்னட இயக்குனர் ஜீ.வி. ஐயர் தனது புதிய படமாக ராமாயணத்தை இயக்க உள்ளார். அது பற்றி சில நண்பர்களுடன் கலந்து பேச இருக்கிறார். நீங்கள் வர முடியுமா என்று நண்பர் ஒருவர் கேட்டார். ஜீ.வி. ஐயர் இயக்கிய மத்துவாச்சாரியார், ஆதிசங்கரா, விவேகானந்தர், பகவத்கீதை போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். சமஸ்கிருதத்தில் படம் எடுக்க கூடிய ஒரே இந்திய இயக்குனர். நிறைய தேசிய விருதுகள் பெற்றிருக்கிறார். கன்னட சினிமாவின் பீஷ்மர் என்று கொண்டாடப்படுபவர். …

ஜீ.வி. ஐயர் Read More »

அ. எக்பர்ட் சச்சிதானந்தம்.

நவீன தமிழ் இலக்கியம் என்பது ஆளுமைகளின் உலகம் மட்டுமில்லை. புதுமைபித்தனுக்கும் ஜானகிராமனுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்றால் ஜானகிராமனே சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்த வல்லம் தாஜ்க்கும் ஒரு இடம் இருக்கவே செய்கிறது. அறியப்பட்ட இலக்கிய ஆளுமைகளை விடவும் அறியப்படாத முக்கியபடைப்பாளிகள் என்று ஐம்பது பேரைச் சுட்டிகாட்ட முடியும். அவர்கள் அதிகம் எழுதியிருக்கவில்லை. ஒரு சிறுகதைத் தொகுப்போ. கவிதைத் தொகுப்போ வெளியிட்டிருக்கிறார்கள். மின்னல் ஒளிர்வு தனியொளியாக மின்னுவதைப் போல தொடர்ந்து தீவிர இலக்கியத் தளங்களில் பங்குபெறாத போதும் …

அ. எக்பர்ட் சச்சிதானந்தம். Read More »