admin

பொதுக்குளியல்.

சென்ற வாரத்தில் ஒரு நாள் எனக்கு விசித்திரமான பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. சென்னையில் நடைபெற உள்ள மாற்று மருத்துவக்கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சாத்தூரிலிருந்து நாற்பது பேர் ஒரு வேனில் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காலையில் குளிப்பதற்கு மட்டும் ஏதாவது ஒரு இடமிருக்கிறதா அல்லது வழியில் எங்காவது குளிக்கலாம் என்றால் எங்கே குளிப்பது என்று எனது அண்ணன் தொலைபேசியில் கேட்டார். இதற்கென எளிய விஷயம் தானே என்று முதலில் தோன்றியதால் விசாரித்து ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன். …

பொதுக்குளியல். Read More »

பிழை திருத்துபவரின் மனைவி

   – சிறுகதை அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும் கரப்பான் பூச்சிகளை விடவும் காகிதங்கள் மிகுந்த அசூயை தருவதாகி விட்டன. சில வேளைகளில் அவள் தன் ஆத்திரம் அடங்குமட்டும் காகிதங்களை கிழித்துப் போடுவாள். காகிதங்கள் ஒரு போதும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. கரப்பான் பூச்சி போல சிதறியோடவோ, மீசையைத் துண்டித்து கொண்டு தப்பிக் கொள்வதற்கோ காகிதங்கள் முயற்சிப்பதேயில்லை. காகிதங்கள் கிழிக்கபடும்  போது மெல்லிய ஒசை தருகிறதேயன்றி …

பிழை திருத்துபவரின் மனைவி Read More »

இசையறியும் ஒட்டகம்.

சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில் மிக சிறந்தது என்று இதையே குறிப்பிடுவேன். The Story of the Weeping Camel ஒரு ஆவணப்படம். இதைஇயக்கியிருப்பவர் Byambasuren Davaa  என்ற இளம் திரைப்படக்கல்லூரி மாணவி. மங்கோலியாவின் கோபி பாலைவனத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நடைபெறும் சிறிய சம்பவமே இந்த ஆவணப்படத்தின் அடித்தளம். கடுமையான வெக்கையும் கடுமையான குளிரும் கொண்ட கோபி பாலைவனத்தில் மங்கோலிய  நாடோடி இனமக்கள் வசிக்கிறார்கள். அவர்களது பிரதான தொழில் ரோமத்திற்கான ஆடு வளர்ப்பது மற்றும் ரோமங்களைப் பின்னி …

இசையறியும் ஒட்டகம். Read More »

இலக்கிய இணையதளங்கள்.

எங்கோ லத்தீன் அமெரிக்காவில் வெளியாகும் படைப்புகள் கூட உடனடியாக நமக்கு அறிமுகமாகி விடுகின்றன. ஆனால் இந்திய மொழிகளில் வெளியாகும் சமகால இலக்கிய முயற்சிகள் நமக்கு அதிகம் அறிமுகமாவதேயில்லை. மொழிபெயர்ப்பின் வழியாக தமிழுக்கு அறிமுகமனாவர்களும் 1950- 60களைச் சேர்ந்தப் படைப்பாளிகளே. சமகால இந்திய இலக்கியத்தை அறிந்து கொள்வதற்கான சில இணையதளங்களை சிபாரிசு செய்கிறேன். இவற்றில் ஆங்கிலம் வழியாக அந்த மொழியின் முக்கியப் படைப்பாளிகளின் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. சில இந்திய மொழிகளின் படைப்பிலக்கியத்திற்கான இதழ்களும் இதில் …

இலக்கிய இணையதளங்கள். Read More »

அக்கால மதராஸ்

நூறுவருடங்களுக்கு முன்பான பழைய புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டவை இவை. ** ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் காலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும் பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்ட பண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூர தீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்து பள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டு இசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும் பாடலாம்) …

அக்கால மதராஸ் Read More »

டி.ஹெச். லாரன்ஸின் ஒவியங்கள்.

    எழுத்தாளர்களில் பலருக்கும் எழுதுவதற்கு இணையாக பல்வேறு தனித் திறன்கள் இருப்பதை அறிந்திருக்கிறேன். குறிப்பாக ஒவியத்தில் நாட்டமும் தனித்திறனும் கொண்ட எழுத்தாளர்கள் பலர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். தமிழில் நான் அறிந்தவரை எழுத்தாளர் வண்ணதாசன், விட்டல்ராவ், கவிஞர்கள் தேவதச்சன், ஆனந்த், வைத்தீஸ்வரன், போன்றவர்கள் சிறப்பாக ஒவியம் வரையக்கூடியவர்கள். ஆனால் அதை முழுமையாக அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. யூமா வாசுகி ஒவியக்கலைப் பயின்றவர். தேர்ந்த ஒவியர்.  அவரது எழுத்திலும் அதே தீவிரமும் தனித்துவமும் உள்ளது. கவிஞர் பிரம்மராஜன் …

டி.ஹெச். லாரன்ஸின் ஒவியங்கள். Read More »

நூறு சிறந்த புத்தகங்கள்

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு கலந்துரையாடல் நிகழ்விற்குச் சென்ற போது பெரும்பான்மையினர் கேட்ட கேள்வி. எந்தப் புத்தகங்கள் முக்கியமானவை. எதை நாங்கள் படிக்க வேண்டும். அது பற்றிய பட்டியல் ஏதாவது இருக்கிறதா என்பதே. முன்பு ஒருமுறை இது போன்றதொரு விருப்பபட்டியல் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறேன். தற்போதைய தேவையை முன்னிட்டு  கட்டயாம் வாசிக்கபட வேண்டும் என்று நான் விரும்பும் 100 சிறந்த புத்தகங்களின் பட்டியல் ஒன்றினை வாசகர்களுக்குச் சிபாரிசு செய்கிறேன். இவை முதன்மையாக படைப்பிலக்கியம் சார்ந்தவை. 1)அபிதாம சிந்தாமணி …

நூறு சிறந்த புத்தகங்கள் Read More »

டோனி மாரிசன்

நியூயார்க்கர் இதழ் சென்ற ஆண்டு அமெரிக்காவில்கடந்தஇருபத்தைந்து வருடங்களில் வெளியான சிறந்த நாவல் எது என்று  ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதில் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான டோனி மாரிசனின்  Beloved நாவலைத் தேர்வு செய்தது. அப்போது இதை மறுபடியும் படிக்க வேண்டும்என்று நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பாக அதைத் திரும்ப வாசிக்க நேர்ந்தது. 1987ல் வெளியான இந்த நாவலைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை படித்திருக்கிறேன். அப்போது எனக்கு நாவலின் மையமாகப் பட்டது முக்கியப் பெண்கதாபாத்திரம் மற்றும் …

டோனி மாரிசன் Read More »

ஏழு கவிதைகள்

 கடந்த சில நாட்களில் நான் வாசித்தவற்றில் எனக்குப் பிடித்தமான கவிதைகள்.    This is a Photograph of Me –   Margaret Atwood   It was taken some time ago. At first it seems to be a smeared print: blurred lines and grey flecks blended with the paper;   then, as you scan it, you see in the left-hand corner a …

ஏழு கவிதைகள் Read More »

உதறிச் செல்லும் அடையாளம்

தீவிர சினிமாவின் இன்றைய இலக்கு வாழ்வைக் காண் நிலையில் அப்படியே பிரதி பலிப்பது மட்டுமல்ல. மாறாக வாழ்வின் முக்கியப் பிரச்சனை யாகக்  கருதும் ஒன்றை நுணுகி ஆராய்வதும், அதன் அக மற்றும்புறத்தளங்களில் ஏற்படும் சலனங்களைஅவதானித்து வெளிப்படுத்துவதுமேயாகும் . சமகால உலக சினிமாவில் பெரும்பான்மை குடும்பம் என்ற அமைப்பு சார்ந்த பிரச்சனைகளையே மையப் பொருளாக  கொண்டுள்ளது. குறிப்பாக குடும்பத்தை  உருவாக்குவதிலும் கட்டிக் காப்பதிலும் ஆண் பெண் இருவரும் என்ன பங்கு வகிக்கிறார்கள். ஆண் பெண் இருவருக்குமான பால் இச்சைகளின் …

உதறிச் செல்லும் அடையாளம் Read More »