பொதுக்குளியல்.
சென்ற வாரத்தில் ஒரு நாள் எனக்கு விசித்திரமான பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. சென்னையில் நடைபெற உள்ள மாற்று மருத்துவக்கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சாத்தூரிலிருந்து நாற்பது பேர் ஒரு வேனில் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காலையில் குளிப்பதற்கு மட்டும் ஏதாவது ஒரு இடமிருக்கிறதா அல்லது வழியில் எங்காவது குளிக்கலாம் என்றால் எங்கே குளிப்பது என்று எனது அண்ணன் தொலைபேசியில் கேட்டார். இதற்கென எளிய விஷயம் தானே என்று முதலில் தோன்றியதால் விசாரித்து ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னேன். …