admin

பிரார்த்தனைக்கு அப்பால்.

மதுரையைச்சுற்றியுள்ள எட்டு மலைகளில் காணப்படும் சமணக் குகைகள், அழகர் கோவில், திருப்பரங்குன்றம், திருமோகூர், கூத்தியார்குண்டு, கிண்ணிமங்கலம், பெருங்காமநல்லுர், கீழக்குயில்குடி எனத் தேடித்தேடிப் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் எனது நண்பரான சேவியர் நீங்கள் அவசியம் இடைக்காட்டூரைப் பார்க்க வேண்டும், அது ஒரு கலை எழில் மிக்க தேவலாயம் என்று சொல்லி அழைத்துச் சென்றார். இடைக்காட்டூர் மதுரையிலிருந்து  25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய ஊர். வைகை ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது. மதுரையைச் சுற்றிய கிராமங்களுக்கே உரியே தனித்துவமான தேநீர் கடைகளும், சிவப்பேறிய …

பிரார்த்தனைக்கு அப்பால். Read More »

ஹாங் இசை.

திருவண்ணாமலையில் நடைபெற்ற பவாசெல்லதுரையின் சிறுகதை தொகுதி வெளியீட்டுவிழாவிற்குச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இசைக்கலைஞர் அறிமுகப்படுத்தி வைக்கபட்டார். முப்பது வயதைக்கடந்த தோற்றம். யூத இனத்தைச் சேர்ந்த அவர் தனது மெய்தேடலின் வழியில் ரமண ஆசிரமத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்கள். அவர் தோளில் தொங்கிக்கொண்டிருந்த பூ வேலைப் பாடு கொண்ட பை என் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி ஆரம்பமானதும் அந்த ஜெர்மானிய இளைஞர் அரைமணி நேரம் தனது இசையை வழங்கவிருக்கிறார் என்றார்கள். அவர் தனது …

ஹாங் இசை. Read More »

ஷேக்ஸ்பியரின் நிழலில்

All men who repeat one line of Shakespeare are William Shakespeare. – Borges ஒரு எளிய வாசகன் ஷேக்ஸ்பியரை அணுகும்போது அவன் முன்பாக எண்ணிக்கையற்ற கேள்விகள் தோன்றுகின்றன. ஷேக்ஸ்பியர் என்பவர் யார்? அவரது முக்கிய நாடகங்கள் எவை? அந்த நாடகங்களை எப்படி நிகழ்த்தினார்கள்? அவரது வாழ்வுக்குறிப்புகள் நிஜமானவையா? ஷேக்ஸ்பியர் நாடகங்களின் பின்புலம் என்ன? அவரது சமகால அரசியல் கலாச்சார சூழல்கள் எப்படியிருந்தது? ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எப்படி எதிர் கொள்ளபட்டன? எதற்காக நாம் ஷேக்ஸ்பியரை …

ஷேக்ஸ்பியரின் நிழலில் Read More »

நெடுந்தனிமை

புத்தனுக்குப் போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது என்பார்கள். இந்த இரண்டு மரங்களின் புகைப்படங்களும் எனக்கு உலகின் தொன்மையை, தனிமையை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கின்றன.இரண்டும் சாதாரணமான மரங்கள் அல்ல. தன்னளவில் மிகத் தனிமையான மரங்கள். இதைப்போல இன்னொரு மரம் உலகில் இல்லை என்பதே இதன் சிறப்பு. அப்படி என்ன இருக்கிறது என்று தானே யோசிக்கிறீர்கள். ஒன்று ஜெனரல் ஷெர்மான் எனப்படும் உலகிலே மிக வயதான மரம். இதன் வயது 2200 வருசங்களுக்கும் மேல் என்று சொல்கிறார்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா …

நெடுந்தனிமை Read More »

இரண்டு குறுங்கதைகள்

மஞ்சள் கொக்கு பல மாதங்களாக வேலையற்றுப்போனதால் சகாதேவன் மிகுந்த மனச்சோர்வு கொண்டிருந்தான். நண்பர்களும் உறவும் கசந்து போயிருந்தார்கள். வெளிஉலகின் இரைச்சலும் பரபரப்பும் அவனைத்; தொந்தரவு செய்தது. சாப்பிடுவதற்கு கூட அவன் தயக்கம் கொள்ளத்; துவங்கினான். உலகின் மீது தீராத வன்மமும் ஆத்திரமும் மட்டுமே அவனுக்குள் இருந்தது. யாரையும் பார்க்கப் பிடிக்காமல் அறைக்கதவை சாத்திக் கொண்டு செய்வதறியாமல் தன்னிடமிருந்த தீப்பெட்டியிலிருந்து குச்சியை எடுத்து விளையாட்டாக உரசி உரசி போட்டபடியே இருந்தான். அது ஒன்று தான் அவனது ஒரே பொழுது …

இரண்டு குறுங்கதைகள் Read More »

திரையில் ஒடிய ரயில்

தமிழ் சினிமாவிற்கும் ரயிலுக்கும் உள்ள தொடர்பு விசித்திரமானது. சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற ரயில்வே ஊழியர் தான் மௌனப்படங்களை ஊர் ஊராக எடுத்துச் சென்று திரையிட்டவர். ஆரம்ப கால கறுப்பு வெள்ளைப் படங்களில் கதையில் ஏற்படும் கால இட மாற்றங்களைத் தெரிவிப்பதற்காகவே ரயில் பயன்படுத்தபட்டிருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இரண்டு ரயில் காட்சிகள் எப்போதும் பசுமையாக உள்ளன. ஒன்று தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி பத்மினி இருவரும் ரயிலில் செல்லும் காட்சி. அதுவும் பத்மினியின் அருகாமையில் உட்காருவதற்காக …

திரையில் ஒடிய ரயில் Read More »

ஊரும் வெயிலும்

தேசிய நெடுஞ்சாலையை விஸ்தாரணப்படுத்து பணி சாலையோரம் உள்ள கிராமங்கள், நகரங்களின் தினசரி வாழ்வில் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருப்பதை இந்த முறை நேரில் கண்டேன். என்ஹெச் 7 எனப்படும் கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலை அகலப்பாதையாக விரிவுபடுத்தபட்டிருக்கிறது. நேற்றுவரை ஒடுங்கி இருந்த சாலையோரக் கிராமங்கள் இன்று சாலையைப் பார்த்து திரும்பிக் கொண்டுள்ளன. மறுபக்கம் சாலையோரம் இருந்த வீடுகள், கிணறுகள். தோட்டங்கள் யாவும் காலி செய்யப்பட்டு அவசர அவசரமாக வணிக மையங்களுக்கான வேலைகள் நடைபெறுகின்றன.சாலை மாற்றம் என் ஊரையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஆறேழு …

ஊரும் வெயிலும் Read More »

நாயர் சான்

எனது நண்பரும் மலையாளத் திரைப்பட இயக்குனருமான ஆல்பர்ட்டுடன் இணைந்து ஒரு திரைக்கதையை விவாதித்துக் கொண்டிருந்த போது அவர் சுதந்திரப்போராட்டத்தை மையமாகக் கொண்ட ஏதாவது கதை ஒன்றைத் தனக்காகச் சிபாரிசு செய்யும்படியாகச் சொன்னார் நான் உடனே நாயர் சானின் வாழ்க்கையைப் படமாக்கலாமே என்றேன். அவர் திகைத்தபடியே யார் நாயர் சான் என்று கேட்டார்.   அவர் ஒரு மலையாளி. சுதந்திரப் போராட்ட வீரர் கேள்விபட்டதில்லையா என்றேன். தான் அப்படியொரு பேரைக்கூட கேட்டதில்லை என்றார்.நாயர் சான் மட்டுமில்லை. இந்திய சுதந்திரத்திற்காக …

நாயர் சான் Read More »

இலக்கிய வேதாளம்

எழுதத் துவங்கிய நாள் முதல் இன்று வரை நூற்றுக்கணக்கான இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். நானே நிறையக் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறேன். வெற்றிகரமாக ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்த முடிந்த ஒருவரால் வாழ்வில் எதையும் சாதித்துவிட முடியும் என்றே தோன்றுகிறது. காரணம் அந்த அளவு இலக்கியக் கூட்டம் நடத்துவது சள்ளையான பிரச்சனைகளும் மனவெறுமையும் ஏற்படுத்திவிடக்கூடியது. சில வருடங்களின் முன்பாக திண்டுக்கல்லில் உள்ள தன்னார்வ அமைப்பு லத்தீன் அமெரிக்க இலக்கியம் குறித்து பேசுவதற்காக ஒரு முறை என்னை அழைத்திருந்தார்கள்.ஒரு வார …

இலக்கிய வேதாளம் Read More »

கொலையும் செய்வான் சாப்ளின்

நாடோடியாக, கோமாளியாக, சர்வாதிகாரியாக, வேலைக்காரனாக, தங்கம் தேடிச்செல்பவனாக, குத்துசண்டை வீரனாக என எவ்வளவோ கோமாளித்தனமான வேஷங்கள் புனைந்த சார்லி சாப்ளின் ஒரேயொரு படத்தில் கொலைகாரனாக நடித்திருக்கிறார். அப்படம் Monsieur Verdoux பணக்கார விதவைகள் ஒவ்வொருவராகத் தேடிச் சென்று காதலித்து திருமணம் செய்து பிறகு சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர்களைக் கொலை செய்துவிட்டு பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பி வாழும் ஹென்றி வெர்டாக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சாப்ளின் நடித்திருக்கிறார் நம்ப முடியாமல் இருக்கிறதா? சாப்ளின் தோற்றம் நமக்குள் உருவாக்கியிருந்த பிம்பம் …

கொலையும் செய்வான் சாப்ளின் Read More »